சமுதாயத்தில் பரவும் வன்முறை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்படும் இடையூறுகளை ஒவ்வொரு முறை காணும் போதும் மனம் வேதனை அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க பேராயர் பேரவை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றுவதாக தெரிவித்தார். சமுதாயத்தில் பரவும் வன்முறை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்படும் இடையூறுகளை ஒவ்வொரு முறை காணும் போதும் மனம் வேதனை அடைவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
21-ஆவது நூற்றாண்டில் மனிதாபிமான அடிப்படையிலான நல்லிணக்கத்தைப் போற்றுவதில் இந்தியா பெரும் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
Read More