pmk

அரசியல்தமிழ்நாடு

பாமக தலைவர் பதவி பறிப்பு ஏன்? – தன்னைத் தானே ராமதாஸ் நியமிக்க அவசியம் ஏற்பட்டது ஏன்?

பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டது ஏன்?. குடும்பப் பிரச்சினையை கட்சிக்குள் எதிரொலித்ததா?
தனக்கு ஒத்துழைக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம் எனக் கூறிய ராமதாஸ், 3 மாத இடைவெளியில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமகவின் நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட உள்ளதாக” கூறினார். இதே செய்தியாளர் சந்திப்பில் பாஜகவுடனான கூட்டணி குறித்தும் ராமதாஸ் தெரிவித்தார். அதில், “இன்றைக்கு தான் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறேன். அதனால் இனி எல்லோரையும் அழைத்துப் பேசி கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்” என்று பாஜக கூட்டணி குறித்து அறிவித்தார். அன்புமணி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பேசியவர், “காரணங்கள் பல உண்டு. அவை சிறுக சிறுக அறிவிக்கப்படும்” என ராமதாஸ் கூறினார்.
பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டது ஏன்?. குடும்பப் பிரச்சினையை கட்சிக்குள் எதிரொலித்ததா?
தனக்கு ஒத்துழைக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம் எனக் கூறிய ராமதாஸ், 3 மாத இடைவெளியில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமகவின் நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட உள்ளதாக” கூறினார். இதே செய்தியாளர் சந்திப்பில் பாஜகவுடனான கூட்டணி குறித்தும் ராமதாஸ் தெரிவித்தார். அதில், “இன்றைக்கு தான் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறேன். அதனால் இனி எல்லோரையும் அழைத்துப் பேசி கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்” என்று பாஜக கூட்டணி குறித்து அறிவித்தார். அன்புமணி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பேசியவர், “காரணங்கள் பல உண்டு. அவை சிறுக சிறுக அறிவிக்கப்படும்” என ராமதாஸ் கூறினார்.பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டது ஏன்?. குடும்பப் பிரச்சினையை கட்சிக்குள் எதிரொலித்ததா?
தனக்கு ஒத்துழைக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம் எனக் கூறிய ராமதாஸ், 3 மாத இடைவெளியில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “பாமகவின் நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட உள்ளதாக” கூறினார். இதே செய்தியாளர் சந்திப்பில் பாஜகவுடனான கூட்டணி குறித்தும் ராமதாஸ் தெரிவித்தார். அதில், “இன்றைக்கு தான் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறேன். அதனால் இனி எல்லோரையும் அழைத்துப் பேசி கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்” என்று பாஜக கூட்டணி குறித்து அறிவித்தார். அன்புமணி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பேசியவர், “காரணங்கள் பல உண்டு. அவை சிறுக சிறுக அறிவிக்கப்படும்” என ராமதாஸ் கூறினார்.
இதனிடையே, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை அவரது மகள்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சந்தித்தனர். அதேநேரம், பாமக பொருளாளர் திலகபாமா, மயிலம் எம்எல்ஏ சிவகுமார் உள்ளிட்டோர் சந்திக்கச் சென்றனர். ஆனால் அவர்களை சந்திக்க ராமதாஸ் மறுத்ததால் ஒன்றரை மணி நேர காத்திருப்புக்குப் பிறகு அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.

அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியதற்கு பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலே முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டாலும், அன்புமணியின் நடவடிக்கையின் மீது ஏற்பட்ட அதிருப்தியே உண்மையான காரணம் எனக் கருதப்படுகிறது.
வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்குத் தலைவராக இருந்த போதும், பாமகவின் தலைவராக இதுவரை ஒருமுறை கூட ராமதாஸ் இருந்தது இல்லை. தனக்குத் தெரிவிக்காமல் கட்சிக் கூட்டங்களை நடத்துவது, தனது ஒப்புதல் இல்லாமல் தனிச்சையாக முடிவு எடுப்பது என அன்புமணி மீது ராமதாஸ்க்கு அடுத்தடுத்து அதிருப்தி ஏற்பட்டதாகத் தெரிகிறது.
கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் அன்புமணி மற்றும் செளமியா அன்புமணி எடுப்பதால், தான் தனிமைப்படுத்தப்பட்டதாக ராமதாஸ் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது மகள் வழிப் பேரன் முகுந்தனை கட்சி இளைஞரணித் தலைவராக நியமித்த போதும் அன்புமணி குறுக்கிட்டது என உள்ளிட்டவற்றின் வெளிப்பாடாகவே இந்த திடீர் தலைவர் மாற்றத்திற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.

Read More
தமிழ்நாடு

போலீஸ் அனுமதி மறுப்பு: சென்னையில் தடையை மீறி இன்று சவுமியா அன்புமணி போராட்டம்

போலீஸ் அனுமதி மறுப்பு: சென்னையில் தடையை மீறி இன்று சவுமியா அன்புமணி போராட்டம்
பா.ம.க போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என பாமக தகவல் கூறியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கில் மாணவி அளித்த புகாரின் எப்.ஐ.ஆர் வெளியானது, காவல்துறை, அமைச்சர் முரண்பட்ட கருத்து என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க அரசைக் கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் எதிர்க்கட்சிகள் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க என அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில், இன்று (ஜன.2) பா.ம.க போராட்டம் நடத்துவதாக அறிவித்தது.

பாமக மகளிரணி சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என பா.ம.க தலைமை தகவல் வெளியிட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ராமதாஸ்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று காலை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய வாக்குறுதிகள்: ₹10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு

Read More
அரசியல்தமிழ்நாடு

கரும்பு கொள்முதல் விலையை ரூ.4,000-ஆக உயர்த்துங்கள் – ராமதாஸ் வலியுறுத்தல்

ஹரியானாவை போன்று கரும்பு கொள்முதல் விலையை ரூ.4 ஆயிரமாக உயர்த்துமாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது

Read More