assembly tamilnadu

அரசியல்தமிழ்நாடு

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடும் தமிழ்நாடு சட்டப்பேரவை… ஆளுநர் உரை எப்படி இருக்கும்?

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கவிருப்பதால், எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். 2023-இல் ஆளுநர் உரைக்குப் பின்னர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறியது விவாதமான நிலையில், கடந்த ஆண்டு ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்காமல், 4 நிமிடங்களில் முடித்தார்.

இதனால், இன்றைய ஆளுநர் உரை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அவை நடவடிக்கைகள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More