tngoverner

தமிழ்நாடு

“இரு மொழி கொள்கையால் தமிழ்நாடு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழக்கின்றனர்” – ஆளுநர் ஆர்.என். ரவி

மாநில அரசின் இருமொழி கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.

ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.
ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Read More
தமிழ்நாடு

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு செய்வதாக கூடுதல் மனுவை தாக்கல் செய்த அவர்கள், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதை கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமனத்திலும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்திலும் கடந்த ஆண்டு நிலையே தொடர்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆளுநர் நிலைபாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அதே நிலை தொடர்கிறது எனவும் தெரிவித்தனர். அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக கூறினர்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், பிரச்னை தீர்க்கப்பட்டால் நல்லது, இல்லையென்றால் தாங்களே தீர்க்க முயற்சிப்போம் என்று தெரிவித்து இறுதி விசாரணைக்காக தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆளுநர் பிரச்னையை வரும் புதன்கிழமைக்குள் தீர்க்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஆளுநர் பிரச்னையை வரும் புதன்கிழமைக்குள் தீர்க்க முயற்சிக்காவிட்டால் தாங்களே தீர்க்க முயற்சிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read More