Author: Namadhu Arasu

இந்தியாதமிழ்நாடு

ரயில் டிக்கெட் புக்கிங்.. ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு.. பயணிகள் கவனத்துக்கு!

ரயில் டிக்கெட் புக்கிங்.. ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு.. பயணிகள் கவனத்துக்கு!ரயில் டிக்கெட் புக்கிங்.. ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு.. பயணிகள் கவனத்துக்கு!
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும் வேகமாகவும் சௌகரியமாகவும் பயணிக்கலாம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதிலும் பயணிப்பதிலும் நிறைய விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு செயல்பாட்டில் பல முக்கிய மாற்றங்களை இந்திய ரயில்வே செய்துள்ளது. அந்த மாற்றங்கள் மே 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், இடைத் தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இனி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தட்கல் டிக்கெட் புக்கிங் அல்லது டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது புதிய விதிகள் பொருந்தும். இதில் OTP சரிபார்ப்பு, புதிய முன்பதிவு நேரம், டிஜிட்டல் டிக்கெட்டுகள், டைனமிக் விலை நிர்ணயம் மற்றும் பல மாற்றங்கள் அடங்கும்.
IRCTC செயலி, வலைதளம் அல்லது முகவர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, மொபைலில் பெறப்பட்ட OTP இல்லாமல் முன்பதிவு செயல்முறையை முடிக்க முடியாது. இது போலி முன்பதிவுகள் மற்றும் தரகர்களால் ஏற்படும் தொந்தரவைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.இனி நீங்கள் 60 முதல் 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்னதாக, இந்த காலம் 120 நாட்களாக இருந்தது. இது பயணிகளுக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்களுக்கான டிக்கெட் விலை இனி தேவையைப் பொறுத்து மாறுபடும். உங்கள் மொபைல், மடிக்கணினி அல்லது டேப்லெட்டில் உங்கள் டிக்கெட்டைக் காட்டி நீங்கள் பயணிக்கலாம். ஆனால் உங்களிடம் அடையாளச் சான்று இருக்க வேண்டும்.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்க முடியாது. அவர்கள் பொது பெட்டிகளில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ள விதிமுறைகளையும் அதில் செய்யப்படும் மாற்றங்களையும் ரயில் பயணிகள் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதன்படி பயணித்தால் நல்லது. இல்லாவிட்டால் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பாஜக சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதனை அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

எல்லையில் பாகிஸ்தான் 11வது நாளாக அத்துமீறல் – இந்திய ராணுவம் பதிலடி

எல்லையில் பாகிஸ்தான் 11வது நாளாக அத்துமீறல் – இந்திய ராணுவம் பதிலடி
எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்
காஷ்மீரின் பகல்ஹாமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, எல்லையில் 11வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

Read More
அரசியல்தமிழ்நாடு

தி.மு.க., மா.செ.,க்கள் செல்வாக்கு;அமைச்சர்கள் இனி மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள் — முதல்வர்

தி.மு.க., மா.செ.,க்கள் செல்வாக்கு; கடிவாளம் போட்ட முதல்வர்இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான்..! இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும்.

தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. 23 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்!

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
நீட் தேர்வை இன்று நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியரும் எழுதவுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 41 மையங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
பிற்பகல், 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகமை விதித்துள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என்றும், மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்டவைகளை அணியக்கூடாது என்றும், ஆண் தேர்வர்கள் முழுக்கை சட்டை அணியக் கூடாது எனவும், பெண் தேர்வர்கள் துப்பட்டா அணியக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அலைபேசி, ஹெட்போன், இயர்போன், பேனா, கால்குலேட்டர், பெல்ட், உணவு, வாட்டர் பாட்டில் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை எனவும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட்.. 9000 இடங்களில் கேம்ப்.. மீண்டும் விண்ணப்பிக்க…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட்.. 9000 இடங்களில் கேம்ப்.. இவர்களெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்கணும்!

இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவலி அல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்னையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பதில் கொள்ளையா? புதிய நடைமுறைக்கு மாறும் மாநகராட்சி

கட்டணம் வசூலிப்பது தவறு இதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்று அண்மையில் செய்தியும் வெளியிட்டது. அந்த செய்தியில் சட்டவிரோதமாக பைக் மற்றும் கார் மற்றும் பெரிய வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இந்த விவாகரத்தில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பி இருந்தது. பல்வேறு சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி ஒப்பந்தம் முடிந்த பின்னர் டெக்ஸோ கட்டணம் வசூலிப்பது தவறு என்றும் முறைகேட்டிற்கே வழிவகுக்கும் என்றும் புகார்கள் கூறினார்கள். வாய்மொழி அனுமதி இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், குறிப்பிட்ட செய்தி நிறுவனத்திடம், டெக்ஸோவின் ஒப்பந்தம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரிலேயே காலாவதியாகி விட்டதாக கூறியிருக்கிறார். எனினும் டிசம்பர் வரை மாநகராட்சிக்கு 1.75 கோடி வருவாய் கிடைத்தால், தொடர்ந்து கட்டணம் வசூலிக்க வாய்மொழி உத்தரவு வழங்கினாராம். டெக்ஸோ ஒரு அரசு நிறுவனம் என்றும், ஒப்பந்தம் இறுதியாகும் வரை வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாகவும் ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார். சில இடங்களில் தங்கள் ஊழியர்கள் அதிக விலைக்கு சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலித்தது தொடர்பாக சென்னை மாநகராட்சி தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்திடம் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாம்.

மாநகராட்சி மீது புகார் இதனிடையே முறையான டெண்டர்கள் இல்லாமல் இதுபோன்ற பணிகளை அனுமதிப்பது சட்டவிரோத செயல்களை சாதாரண விஷயமாகி விடும் என்றும், சட்டவிரோதமாக பணம் வசூலித்த நபர்கள் மீது மாநகராட்சி போலீஸ் புகார்களை பதிவு செய்ய வேண்டும். டெக்ஸ்கோ மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. வாகன நிறுத்தம் இடங்கள் சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், “சென்னையில் மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு, ஜார்ஜ் டவுன் ரட்டன் பஜார், அண்ணாநகர், என்.எஸ்.சி. போஸ் ரோடு, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடு, புரசைவாக்கம், தியாகராய நகர் ஜி.என்.செட்டி ரோடு, மயிலாப்பூர் தெப்பக்குளம், சேத்துப்பட்டு நிக்கலஸ் ரோடு ஆகிய இடங்களில் வாகன நிறுத்த கட்டணம் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக (டெக்ஸ்கோ) நிறுவன பணியாளர்கள் மூலம் வசூலிக்கப்பட்டு
காருக்கு 20 ரூபாய் ஒரு மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5-ம், கார்களுக்கு ரூ.20-ம், பஸ் மற்றும் வேன்களுக்கு ரூ.60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கையடக்க கருவி மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாக வாகன நிறுத்தக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு கட்டணத் தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வாகன பதிவு எண் கட்டாயம் இந்தநிலையில் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்படும் பணியை ஒழுங்குமுறைப்படுத்த மென்பொருளில் பல்வேறு திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதன்படி, வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ரசீதில் வாகனத்தின் பதிவு எண்ணை பதிவு செய்வது கட்டாயம். கியூ-ஆர் குறியீடு மூலமாக ரசீதின் உண்மைத் தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்படும். பணப் பரிவர்த்தனை மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய முறையினை கையடக்க கருவியிலிருந்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை கட்டாயம் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யும் பணியாளர்கள் கட்டணம் வசூலிக்கும் போது உரிய அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மற்றும் டெக்ஸ்கோ சின்னம் பொறிக்கப்பட்ட மேலங்கி அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் வாகன நிறுத்த கட்டணம் செலுத்தும் போது பணத்துக்கு பதிலாக டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்த கட்டணம் வசூல் தொடர்பாக 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

மொத்தமாக இழுத்து மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லை.. இந்தியா தந்த காலக்கெடு முடிந்தது!

மொத்தமாக இழுத்து மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லை.. இந்தியா தந்த காலக்கெடு முடிந்தது!
மொத்தமாக இழுத்து மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லை.. இந்தியா தந்த காலக்கெடு முடிந்தது!

911 பாகிஸ்தானியர்கள் வெளியேறினர், 1,617 இந்தியர்கள் திரும்பினர் கடந்த புதன் கிழமை மட்டும் அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 125 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். கடந்த ஏழு நாட்களில் நாட்டை விட்டு வெளியேறிய மொத்த பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 911 ஆகும். இதேபோல், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை கடக்கும் புள்ளி வழியாக 152 இந்திய நாட்டினரும், நீண்டகால இந்திய விசாவுடன் 73 பாகிஸ்தானிய நாட்டினரும் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். 1 வாரத்தில் மொத்தமாக 1,617 இந்தியர்கள் நாடு திரும்பினர். இந்த நிலையில்தான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அட்டாரி-வாகா எல்லை மொத்தமாக மூடப்பட்டு உள்ளது. இந்தியா விதித்த காலக்கெடு நேற்றோடு முடிந்த நிலையில் எல்லை மொத்தமாக மூடப்பட்டது. இந்தியா முடிவு பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 5 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

நான் ஒரு மிடில் கிளாஸ் தான்; பத்ம பூஷன் விருது பெற்ற அஜித், ரசிகர்களுக்கு நன்றி!

பத்ம பூஷன் விருது வென்ற நடிகரும் கார்பந்தய வீரருமான அஜித்குமார் சென்னை விமான நிலையம் வந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்த அஜித், விரைவில் நேரில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்மபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நடன கலைஞரும் நடிகையுமான, ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

கலைத்துறையில் குருவாயூர் துரை, சமையல் கலைஞர். செப் தாமோதரன், பத்திரிக்கையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்பா சம்பந்தம், கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடிகர் அஜித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள், அரசியல் தலைவர்கள், சக நடிகர்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read More
இந்தியாஉலகம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த பிரதமர் மோடி – வெளியான முக்கிய தகவல்

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காமில், கடந்த 22ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத தருணத்தில், தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியதில், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க பிரதமரும், உயர் அதிகாரிகளும் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் நேற்று, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில், எல்லை பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைமை இயக்குநர்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌஹான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, உள்துறை செயலாளர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, பயங்கரवादத்திற்கு எதிராக கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த நாட்டின் நிலைப்பாடு என்று பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவத்தின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. எப்படி, எந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது என்றும், இலக்கு என்ன என்பதையும் படைகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மற்றும் காணொலி வாயிலாக பேசிவருவதாகவும் தகவல் வெளியாகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மற்றும் காணொலி வாயிலாக பேசிவருவதாகவும் தகவல் வெளியாகிறது.

Read More