entrance

இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. 23 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்!

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
நீட் தேர்வை இன்று நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ மாணவியரும் எழுதவுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 41 மையங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
பிற்பகல், 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகமை விதித்துள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என்றும், மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்டவைகளை அணியக்கூடாது என்றும், ஆண் தேர்வர்கள் முழுக்கை சட்டை அணியக் கூடாது எனவும், பெண் தேர்வர்கள் துப்பட்டா அணியக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அலைபேசி, ஹெட்போன், இயர்போன், பேனா, கால்குலேட்டர், பெல்ட், உணவு, வாட்டர் பாட்டில் உள்ளிட்ட எந்த பொருளுக்கும் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை எனவும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More