மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிம்பு, “இந்தப் படம் எனக்கு ஒரு கனவாக இருக்கிறது. மணிரத்னம், என்னுடைய குரு கமல், ரவி கே சந்திரன் என எல்லோரும் ஒரு படத்தில் இணைவது நம்பமுடியாத ஒன்று.
இந்தப் படத்தில் ஆரம்ப கால படப்பிடிப்பு கடினமாக இருந்தது. முன்னதாக மணிரத்னத்துடன் இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தேன். சில நாட்களுக்கு பின்பு மணிரத்னம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்தேன்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிம்பு, “இந்தப் படம் எனக்கு ஒரு கனவாக இருக்கிறது. மணிரத்னம், என்னுடைய குரு கமல், ரவி கே சந்திரன் என எல்லோரும் ஒரு படத்தில் இணைவது நம்பமுடியாத ஒன்று.
இந்தப் படத்தில் ஆரம்ப கால படப்பிடிப்பு கடினமாக இருந்தது. முன்னதாக மணிரத்னத்துடன் இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தேன். சில நாட்களுக்கு பின்பு மணிரத்னம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்தேன்.
அவருக்கு பக்கத்தில் எனக்கு இருக்கை என்பது அவருடைய பெருமிதத்தை காட்டுகிறது. இந்தப் படம் வித்தியாசமான முயற்சியாக இருக்கும். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் – கமல் சேர்ந்துள்ளனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி” என்றார்.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. ‘ஜிங்குச்சா’ என்ற இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இது குறித்து வெளியான போஸ்டரில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் நடமாடுவது போன்று வெளியிடப்பட்டது.
இதனிடையே தக் லைப் படம் வரும் ஜூன் 3-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே இன்று நடைபெற்ற தக் லைப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மணிரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. ‘ஜிங்குச்சா’ என்ற இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இது குறித்து வெளியான போஸ்டரில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் நடமாடுவது போன்று வெளியிடப்பட்டது.
இதனிடையே தக் லைப் படம் வரும் ஜூன் 3-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே இன்று நடைபெற்ற தக் லைப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மணிரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
கமல்ஹாசன் பேசியதாவது: “மணிக்கும் எனக்கும் இடையில் எதுவுமே மாறவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். எல்டாம்ஸ் சாலையில் நாங்கள் முதல்முறை சந்தித்தபோது, மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்து, பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசியதில் 25 சதவீத விஷயங்களை மட்டுமே செய்துள்ளோம். அதில் ஒன்று நாயகன், மற்றொன்று ‘தக் லைஃப்’. நாஙகள் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஏனென்றால், எந்தப் படத்திலும் எங்கள் எல்லா கனவுகளையும் நனவாக்க முடியவில்லை. எதிர்காலத்தில் நாங்கள் செய்யும் படங்களில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மிகப் பெரிய கனவுகளைக் காண்கிறோம், ஆனால் நமது சந்தைக்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய வகையில் நாங்கள் கட்டுப்படுத்தப்படுகிறோம்.
இவ்வளவு காலம் நாங்கள் இணையாததற்கு தவறு எங்கள் மீதுதான். இப்போது நாங்கள் இணைந்ததற்கு காரணம் நீங்கள். ஒரு படம் வெற்றி பெறலாம். அல்லது தோல்வி அடையலாம். ஆனால் இறுதி தீர்ப்பு பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.
மணிரத்னத்துக்கு நான் ‘ஐந்தரை மணிரத்னம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு காலை 5.30 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார். இது ‘நாயகன்’ காலத்திலிருந்தே அவரிடம் இருக்கும் ஒரு பழக்கம். அதை பார்க்கும்போது எனக்கு பாலச்சந்தர் சாரின் நினைவு வருகிறது. படத்தில் நடித்த ஹீரோயின்கள் யாரும் எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. ஆனால் என்னை பார்க்கும்போதெல்லாம் ஐ லவ் யூ சொல்லும் ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான்.
இவ்வளவு காலம் நாங்கள் இணையாததற்கு தவறு எங்கள் மீதுதான். இப்போது நாங்கள் இணைந்ததற்கு காரணம் நீங்கள். ஒரு படம் வெற்றி பெறலாம். அல்லது தோல்வி அடையலாம். ஆனால் இறுதி தீர்ப்பு பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.
மணிரத்னத்துக்கு நான் ‘ஐந்தரை மணிரத்னம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு காலை 5.30 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார். இது ‘நாயகன்’ காலத்திலிருந்தே அவரிடம் இருக்கும் ஒரு பழக்கம். அதை பார்க்கும்போது எனக்கு பாலச்சந்தர் சாரின் நினைவு வருகிறது. படத்தில் நடித்த ஹீரோயின்கள் யாரும் எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. ஆனால் என்னை பார்க்கும்போதெல்லாம் ஐ லவ் யூ சொல்லும் ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான்.
Read More