Author: Namadhu Arasu

இந்தியாஉலகம்தமிழ்நாடு

இன்றுடன் முடிவடைந்த காலக்கெடு… இந்தியாவை விட்டு வெளியேறிய 537 பாகிஸ்தானியர்கள்!

இன்றுடன் முடிவடைந்த காலக்கெடு… இந்தியாவை விட்டு வெளியேறிய 537 பாகிஸ்தானியர்கள்!
‘சார்க்’ விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், இதுவரை 537 பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதேபோன்று தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் வெளியேறவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நேற்றைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் 537 பாகிஸ்தானியர்கள் அட்டாரி – வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேபோன்று பாகிஸ்தானில் தங்கியிருந்த இந்தியர்கள் 850 பேர் கடந்த நான்கு நாட்களில் நாடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக வந்த பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதுச்சேரியில் விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானியர்களை வெளியேற்ற குடியேற்றத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

 நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு இன்று பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது..!

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவரால் இன்று வழங்கப்படுகிறது.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்படுகிறது.

Read More
அரசியல்தமிழ்நாடு

செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா..! மீண்டும் அமைச்சரான மனோ தங்கராஜ் – தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று மே 6 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது விமர்சனம் எழுந்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. பொன்முடியின் பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் கண்டனம் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கண்டனக்குரல்கள் ஒலித்தன.
ஜாமினா, அமைச்சர் பதவியா என உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல, பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய புகாரில் பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிபோயுள்ளது.
இதனால் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது. இதேபோல, சட்டவிரோத பணமோசடி வழக்கில் ஜாமீனில் உள்ள செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என, இன்றைக்குள் (28.04.2025) தெரிவிக்குமாறு கூறியிருந்தது.
இதன்படி, பொன்முடியும், செந்தில் பாலாஜியும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள் என்றும் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் என்றும், மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் நியூஸ்18 தமிழ்நாடு முன்கூட்டியே செய்தி வெளியிட்டது.
அதன்படி இருவரும் அளித்த ராஜினாமாக்களை, முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ராஜினாமாவை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கரிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிவசங்கரிடம் போக்குவரத்துத்துறை உள்ள நிலையில், மின்சாரத்துறையையும் இனி அவரே கவனிப்பார். இதே போல், வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் முத்துசாமியிடம், செந்தில்பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் பதவி வகித்து வந்த ராஜகண்ணப்பன், பொன்முடி வசம் இருந்த வனத்துறை மற்றும் காதித்துறைகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபுரம் தொகுதியிலிருந்து எம்எல்ஏ-வாக தேர்வானவர். கடந்த முறை அவரது பதவி பறிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சற்றே வலுவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், வரும் தேர்தலை கவனத்தில் கொண்டு, மனோ தங்கராஜுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதுவும் அவர் ஏற்கெனவே வகித்த பால்வளத்துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்கிறார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடு

“இரண்டு நாளில் இராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு..” – முன்னாள் குரூப் கேப்டன் வினோத்

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீநகருக்கு சென்ற அவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள். இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அப்பாவி மக்களைக் கொன்ற இந்த பயங்கரவாதிகள் எந்த சூழ்நிலையிலும் தப்பவிடப்பட மாட்டார்கள் என்பதை பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், முழு நாட்டிற்கும் உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி வந்த அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது, “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடப்படும். பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தான் மக்கள் இந்தியா வர தடை. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு.
பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற ஆணை. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 30 ஆக குறைப்பு. சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு. பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்படும். நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடி கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும் வரை ஓய மாட்டோம். பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும்” என அறிவித்துள்ளார்.
சார்க் விசா ரத்து. சார்க் விசாவில் வந்துள்ள பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்தில் திரும்ப செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூதரகங்களில் இருக்கக் கூடிய பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற சொல்லியிருக்கிறார்கள்.
பாதுகாப்பு அதிகாரிகள் திரும்ப செல்ல சொல்லியிருப்பது மிகவும் முக்கியமானது. காரணம் இந்த அறிவிப்பு வந்ததும், அவர்களும் இதே அறிவிப்பை வெளியிடுவார்கள். இதனைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும். அப்படித்தான் நமக்கான வரலாறு இருக்கிறது. எனது அனுபவத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு, மூன்று நாளில் ராணுவ நடவடிக்கை வருவதற்கான வாய்ப்புஇருப்பதாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடு

மீண்டும் கொரோனா? 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவத்துடன் இருப்பது சுகாதாரத்துறை ஆய்வில் தெரிய வந்திருக்கிறதுவெயில் காலங்களில் எப்படி பரவுகிறது இந்த நுரையீரல் சுகாதாரத்துறை சொல்வது என்ன விரிவாக பார்க்கலாம்….உலகத்தையே ஆட்டி வைத்த கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றின் வீரியம் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் உள்ளது ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவினுடைய பாதிப்புகள் ஏதும் உள்ளதா அதனுடைய பாதிப்புகள் எது போன்று மாறி உள்ளது என்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வகையான கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் ஆனால் அவற்றால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை சாதாரண காய்ச்சல் போன்றே இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்பேட்டி ஜெயராமன் நுரையீரல் சிறப்பு மருத்துவர்ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாகவும்வெப்ப காலத்தில் பரவக்கூடிய வைரஸ்களின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது குறிப்பாக அம்மை தொற்று ஏற்படுத்தக் கூடிய வைரஸ் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது 32 பேர் வரை செய்யப்பட்ட பரிசோதனையில் சென்னையில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறதுபேட்டி ஜெயராமன் நுரையீரல் சிறப்பு மருத்துவர்இவற்றைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இது சாதாரண வகையை சேர்ந்தது தான் என்றும் எப்போதும் கொரோனா பாதிப்பு 10 பேர் முதல் 20 பேர் வரை இருந்து கொண்டே தான் இருக்கும் ஆனால் அதனுடைய வீரியம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகிறோம் என்றும் தெரிவிக்கின்றனர் தற்போது பரவி வரக்கூடிய கொரோனா வகை ஏற்கனவே இருக்கக்கூடிய பாதிப்பு தான் சீதோசனம் மாறுவதன் காலமாக இந்த வகை வைரஸ்கள் தற்போது அதிகம் பரவி வருகின்றன என்கின்றனர் அதற்கான தற்காப்பு முறைகளான முககவசம் அணிவது ,பொது இடங்களில் இரும்பலை தவிர்ப்பது போன்றவை

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

போப் ஆண்டவர் இறுதிச்சடங்கில் டொனால்டு டிரம்ப்.. முதல் பெண்மணி மெலனியாவும் பங்கேற்கிறார்!

போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் நேற்று காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலக நாடுகள் மற்றும் உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போப் ஆண்டவர் இறுதிச் சடங்கிர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்ரூத் சமூக வலைதள பதிவில் “மெலனியாவும் நானும் ரோமில் உள்ள போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல உள்ளோம்.. அங்கு இருப்பதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
மறைந்த போப் ஆண்டவர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிபராக பதவியேற்ற டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கே கடத்தினார். கை, கால்களில் விலங்கிட்டு சட்ட விரோத குடியேறியகளை அந்நாட்டின் ராணுவம் மூலம் வெளியேற்றினார்.
டிரம்பின் நடவடிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் போப் ஆண்டவர் டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்திருந்ததார். இந்நிலையில் போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார். அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்ததோடு, தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிட்டுள்ளார். போப் ஆண்டவரின் மறைவை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

போப் மறைவால் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். வாட்டிகன் நகரத்தின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமானோர் இரவு பகலாக கண்ணீருடன் திரண்டுள்ளனர். உலகம் முழுவதும் போப் ஆண்டவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

Read More
இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

சென்னை அணிக்கு 6 ஆவது தோல்வி..16 ஓவருக்குள் ஆட்டத்தை முடித்தது மும்பை இந்தியன்ஸ்

சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையிலான போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.
ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் அஸ்வினி குமார் வேதத்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஷேக் ரசீத் 19 ரன்களில் வெளியேற, அடுத்து இணைந்த ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
துபே 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன் களமிறங்கினர்.

தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 19 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து இணைந்த சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா இணை சென்னை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ஒவ்வொரு ஓவரிலும் இருவரும் சிக்சர், பவுண்டர்களை விளாசினர்.இதனால் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. இருவரும் கொடுத்த சில கேட்ச் வாய்ப்புகளை சென்னை அணி வீரர்கள் தவறவிட்டனர். ரோகித் சர்மா 45 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 76 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 30 பந்துகளில் 68 ரன்களும் குவித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 15.4 ஓவர்களில் மும்பை அணி 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

ஏப்.25-ல் உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு… 

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை உறுதி செய்யும் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் செய்வதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்த உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டது. மேலும், துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசின் அதிகாரத்தை உறுதி செய்வது உள்ளிட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த சூழலில், கடந்த 17ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.இந்நிலையில், கடந்த ஆண்டைப் போன்று தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை வரும் 25ஆம் தேதி உதகை ராஜ்பவனில் நடத்த உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்கும்படி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

Read More
Uncategorizedஅரசியல்தமிழ்நாடு

குடியரசு தலைவரை பயன்படுத்தி முட்டுக்கட்டை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குடியரசுத் தலைவர், ஆளுநர் மூலம் மாநில பட்டியலில் உள்ள துறைகளில் சட்டமன்ற அதிகாரத்திற்கு முட்டுக்கட்டை. மாநில பட்டியலில் உள்ள துறைகளை துச்சமென மதித்து மத்திய அரசே சட்டம் இயற்றுகிறது.

மத்திய அரசின் முட்டுக்கட்டைகளை உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் தமிழ்நாடு அரசு அகற்றியுள்ளது. ராஜமன்னார் கமிட்டியை கலைஞர் அமைத்தபோது இருந்த சூழலை விட தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Read More
Uncategorizedசினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

‘தக் லைஃப்-Thuglife Audio launch @ kalaivanararangam kamal,simbu,manirathnam

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிம்பு, “இந்தப் படம் எனக்கு ஒரு கனவாக இருக்கிறது. மணிரத்னம், என்னுடைய குரு கமல், ரவி கே சந்திரன் என எல்லோரும் ஒரு படத்தில் இணைவது நம்பமுடியாத ஒன்று.

இந்தப் படத்தில் ஆரம்ப கால படப்பிடிப்பு கடினமாக இருந்தது. முன்னதாக மணிரத்னத்துடன் இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தேன். சில நாட்களுக்கு பின்பு மணிரத்னம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்தேன்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிம்பு, “இந்தப் படம் எனக்கு ஒரு கனவாக இருக்கிறது. மணிரத்னம், என்னுடைய குரு கமல், ரவி கே சந்திரன் என எல்லோரும் ஒரு படத்தில் இணைவது நம்பமுடியாத ஒன்று.

இந்தப் படத்தில் ஆரம்ப கால படப்பிடிப்பு கடினமாக இருந்தது. முன்னதாக மணிரத்னத்துடன் இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்தேன். சில நாட்களுக்கு பின்பு மணிரத்னம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு இந்தப் படத்தில் நடித்தேன்.
அவருக்கு பக்கத்தில் எனக்கு இருக்கை என்பது அவருடைய பெருமிதத்தை காட்டுகிறது. இந்தப் படம் வித்தியாசமான முயற்சியாக இருக்கும். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் – கமல் சேர்ந்துள்ளனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சி” என்றார்.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. ‘ஜிங்குச்சா’ என்ற இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இது குறித்து வெளியான போஸ்டரில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் நடமாடுவது போன்று வெளியிடப்பட்டது.

இதனிடையே தக் லைப் படம் வரும் ஜூன் 3-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே இன்று நடைபெற்ற தக் லைப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மணிரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. ‘ஜிங்குச்சா’ என்ற இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இது குறித்து வெளியான போஸ்டரில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் நடமாடுவது போன்று வெளியிடப்பட்டது.

இதனிடையே தக் லைப் படம் வரும் ஜூன் 3-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே இன்று நடைபெற்ற தக் லைப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மணிரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

கமல்ஹாசன் பேசியதாவது: “மணிக்கும் எனக்கும் இடையில் எதுவுமே மாறவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். எல்டாம்ஸ் சாலையில் நாங்கள் முதல்முறை சந்தித்தபோது, ​​மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்து, ​​பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசியதில் 25 சதவீத விஷயங்களை மட்டுமே செய்துள்ளோம். அதில் ஒன்று நாயகன், மற்றொன்று ‘தக் லைஃப்’. நாஙகள் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஏனென்றால், எந்தப் படத்திலும் எங்கள் எல்லா கனவுகளையும் நனவாக்க முடியவில்லை. எதிர்காலத்தில் நாங்கள் செய்யும் படங்களில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மிகப் பெரிய கனவுகளைக் காண்கிறோம், ஆனால் நமது சந்தைக்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய வகையில் நாங்கள் கட்டுப்படுத்தப்படுகிறோம்.
இவ்வளவு காலம் நாங்கள் இணையாததற்கு தவறு எங்கள் மீதுதான். இப்போது நாங்கள் இணைந்ததற்கு காரணம் நீங்கள். ஒரு படம் வெற்றி பெறலாம். அல்லது தோல்வி அடையலாம். ஆனால் இறுதி தீர்ப்பு பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.

மணிரத்னத்துக்கு நான் ‘ஐந்தரை மணிரத்னம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு காலை 5.30 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார். இது ‘நாயகன்’ காலத்திலிருந்தே அவரிடம் இருக்கும் ஒரு பழக்கம். அதை பார்க்கும்போது எனக்கு பாலச்சந்தர் சாரின் நினைவு வருகிறது. படத்தில் நடித்த ஹீரோயின்கள் யாரும் எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. ஆனால் என்னை பார்க்கும்போதெல்லாம் ஐ லவ் யூ சொல்லும் ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான்.
இவ்வளவு காலம் நாங்கள் இணையாததற்கு தவறு எங்கள் மீதுதான். இப்போது நாங்கள் இணைந்ததற்கு காரணம் நீங்கள். ஒரு படம் வெற்றி பெறலாம். அல்லது தோல்வி அடையலாம். ஆனால் இறுதி தீர்ப்பு பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.

மணிரத்னத்துக்கு நான் ‘ஐந்தரை மணிரத்னம்’ என்று பெயர் வைத்திருக்கிறேன். படப்பிடிப்புக்கு காலை 5.30 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார். இது ‘நாயகன்’ காலத்திலிருந்தே அவரிடம் இருக்கும் ஒரு பழக்கம். அதை பார்க்கும்போது எனக்கு பாலச்சந்தர் சாரின் நினைவு வருகிறது. படத்தில் நடித்த ஹீரோயின்கள் யாரும் எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. ஆனால் என்னை பார்க்கும்போதெல்லாம் ஐ லவ் யூ சொல்லும் ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான்.

Read More