india pakistan

இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு-இன்று முதல்-

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி, இன்று இரவு முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவிகித வரி, இன்று முதல் அமலுக்கு வரவுள்ளதாக, அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. America First என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமெரிக்கா இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்தது, ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

அமெரிக்கா விதித்த 50% வரி, இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் துறையை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், வரி விதிப்பால் மாதம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை எதிர்பார்க்கின்றனர்.
இதில் அதிகபட்சமாக இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வரிவிதிப்புக்கு மத்தியிலும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவிகித வரி, இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையை கடுமையாக பாதிப்பதுடன் அமெரிக்காவில் நகைகளின் விலையையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கடல் உணவுகள், வாகன உதிரி பாகங்கள், மெத்தை, படுக்கை விரிப்புகள் என சுமார் 55 சதவிகித இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சில எலெக்ட்ரானிக் பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய ஜவுளிகளுக்கு டிரம்ப் வரியை கடுமையாக உயர்த்திய நிலையில், அந்நிதிச்சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என அங்குள்ள வாடிக்கையாளர்கள் நெருக்கடி கொடுப்பதாக திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே பெரும்பாலான சரக்கை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவிட்டதாக தெரிவித்தனர். வரி விதிப்பால் விலை அதிகமாகும் என்பதால் தங்களுக்கு 5 முதல் 25 சதவீதம் வரை சலுகை கொடுக்க அமெரிக்க வாடிக்கையாளர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் கூறுகின்றனர்.
வரி விதிப்பினால், திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதல் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும், தேசிய அளவில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். நம்மை விட வரி குறைவு என்பதால் வங்கதேசம், வியட்நாம், கம்போடியா, பாகிஸ்தான் ஏற்றுமதிகளுக்கு லாபமும் வாய்ப்பும் அதிகரிக்கும், என்றும் அவர்கள் கூறினர்

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

எல்லையில் பாகிஸ்தான் 11வது நாளாக அத்துமீறல் – இந்திய ராணுவம் பதிலடி

எல்லையில் பாகிஸ்தான் 11வது நாளாக அத்துமீறல் – இந்திய ராணுவம் பதிலடி
எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்
காஷ்மீரின் பகல்ஹாமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, எல்லையில் 11வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

மொத்தமாக இழுத்து மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லை.. இந்தியா தந்த காலக்கெடு முடிந்தது!

மொத்தமாக இழுத்து மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லை.. இந்தியா தந்த காலக்கெடு முடிந்தது!
மொத்தமாக இழுத்து மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லை.. இந்தியா தந்த காலக்கெடு முடிந்தது!

911 பாகிஸ்தானியர்கள் வெளியேறினர், 1,617 இந்தியர்கள் திரும்பினர் கடந்த புதன் கிழமை மட்டும் அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 125 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். கடந்த ஏழு நாட்களில் நாட்டை விட்டு வெளியேறிய மொத்த பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 911 ஆகும். இதேபோல், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை கடக்கும் புள்ளி வழியாக 152 இந்திய நாட்டினரும், நீண்டகால இந்திய விசாவுடன் 73 பாகிஸ்தானிய நாட்டினரும் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். 1 வாரத்தில் மொத்தமாக 1,617 இந்தியர்கள் நாடு திரும்பினர். இந்த நிலையில்தான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அட்டாரி-வாகா எல்லை மொத்தமாக மூடப்பட்டு உள்ளது. இந்தியா விதித்த காலக்கெடு நேற்றோடு முடிந்த நிலையில் எல்லை மொத்தமாக மூடப்பட்டது. இந்தியா முடிவு பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 5 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Read More