magalirurimaithogai

தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – டிசம்பர் 15-ம் தேதி முதல் …

“டிசம்பர் 15-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த உறுதி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதுடன், மத்திய பாஜக அரசு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2025) திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஈரோடு சோலார் புதிய பேருந்து வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் 235 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புதிய பேருந்து நிலையம் உள்பட 790 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் , 91 கோடியே 9 லட்ச மதிப்பீல் 23 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 1 லட்சத்து 84 ஆயிரத்து 491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்ச மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் என 605 கோடி கோடியே 44 லட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, “ஈரோடு மாவட்டத்திற்கு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்திற்காக ரூ.9,327 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எனவும் ஏற்கெனவே ஈரோட்டிற்கு அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
“ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தி.மு.க. அரசு அளித்த அத்தனை தேர்தல் அறிவிப்புகளையும் நிறைவேற்றி வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட்.. 9000 இடங்களில் கேம்ப்.. மீண்டும் விண்ணப்பிக்க…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட்.. 9000 இடங்களில் கேம்ப்.. இவர்களெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்கணும்!

இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவலி அல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read More