Author: Namadhu Arasu

தமிழ்நாடுதொழில்நுட்பம்

ரயில் டிக்கெட் முன்பதிவு: சூப்பர் வசதிகள் அறிமுகம் – இனி ஈஸியா டிக்கெட் புக் பண்ணலாம்!

ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு பட்டியல் (Reservation Chart) தயாராகிவிடும். அதுமட்டுமில்லாமல், டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையிலும் பெரிய மாற்றம் வரப்போகிறது. ஒரு நிமிடத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம்.
இனி ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு பட்டியல் தயாராகிவிடும். இப்போது 4 மணி நேரத்துக்கு முன்புதான் பட்டியல் தயாராகும். பயணிகளின் வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஸ்னவ் உத்தரவு!
ரயில்வே வாரியம் இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதை கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் எந்த குழப்பமும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். விரைவில் இது எப்போது அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட உள்ளது.
ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு பட்டியல் தயாராவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. புதிய நேர நிர்ணயம் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு காத்திருப்பு பட்டியல் நிலவரம் முன்கூட்டியே தெரிந்துவிடும். தூர இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏற்பாடு செய்யவும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும்.
ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு பட்டியல் தயாராவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. புதிய நேர நிர்ணயம் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு காத்திருப்பு பட்டியல் நிலவரம் முன்கூட்டியே தெரிந்துவிடும். தூர இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏற்பாடு செய்யவும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும்.
புதிய ப்யணிகள் முன்பதிவு திட்டத்தின் மூலம் டிக்கெட் சரிபார்ப்பு, டிக்கெட் பற்றிய தகவல்களை அறிதல் என்பது ஒரு நிமிடத்தில் 4 லட்சம் என்ற அளவில் இருந்து 40 லட்சமாக உயர்த்த முடியும். இந்த புதிய முறையில் பல மொழிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இது உபயோகிக்க எளிதாகவும் இருக்கும். அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த திட்டத்தை Centre for Railway Information Systems (CRIS) என்ற அமைப்பு செய்து வருகிறது.
டிக்கெட் முன்பதிவு!
“புதிய PRS-ல் பயணிகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேர்வு செய்யலாம். கட்டண விவரங்களையும் பார்க்கலாம்” என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஜூலை 1 முதல் IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கட்டாயம் பயனர் அங்கீகாரம் (user authentication) செய்ய வேண்டும்.
ரயில்வே துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிறைய மாற்றங்கள் அமலுக்கு வரும் போது பயணிகளுக்கு சிறப்பான அனுபவமாக இருக்கும். டிக்கெட் முன் பதிவு செய்யும் போது பயனர்களுக்கு எளிதாக, விரைவான சேவையை வழங்கும் போது டிக்கெட் முன் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும்.

தட்கல் முறையில் முன் பதிவு செய்யும் போது ஏற்படும் சில தொழில்நுட்ப சிக்கல்களும் சரி செய்யப்படும் பட்சத்தில் பயணிகள் நல்ல அனுபவத்தை பெறுவார்கள்.

Read More
குற்றம்தமிழ்நாடு

விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு… காவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்..

சிவகங்கையில் விசாரனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கோயிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த மருத்துவர் நிகிதாவின் காரை பார்க்கிங் பகுதிவரை எடுத்துச் சென்று நிறுத்தியுள்ளார். இதன் பின்னர், காரில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் இல்லாதது தெரியவந்ததால், மருத்துவர் நிகிதா திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து கோயிலுக்குச் சென்ற காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணை செய்ததுடன், அவரை தங்களது வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், திடீரென அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருப்புவனம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின்னர், தனிப்படை காவலர்கள் 7 பேர், அஜித்குமாரை அருகில் உள்ள தோப்பிற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதால் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, திருப்புவனம் காவல்நிலைய காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். எனினும், திருப்புவனம் காவல்நிலைய காவலர்களை கைதுசெய்ய வலியுறுத்தி அஜித்குமாரின் உறவினர்கள் 2-ஆவது நாளாக மடப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சிவகங்கை மாவட்ட மாஜிஸ்திரேட் வேங்கடபிரசாத், அங்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, அஜித்குமாரின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென உறவினர்கள் மனு அளித்தனர். அஜித்குமாரின் உடலை அவரது குடும்பத்தினர் பார்த்த பிறகு, உடற்கூராய்வுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, வீடியோ பதிவு செய்யப்பட்டு, உரிய விதிமுறைகளின்படி, உடற்கூராய்வு செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சொந்த ஊரான மடப்புரம் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இந்த நிலையில், இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெய்பீம் படம் பார்த்தேன் உள்ளம் உலுக்கியது என கூறிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார் என கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார். விசாரணை எனும் போர்வையில் இளைஞரை அடித்து துன்புறுத்தியதாக உறவினர்கள் கூறுவது ‘Lockup’ மரணமோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இளைஞர் மரண விவகாரத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Read More
இந்தியாஉலகம்வணிகம்

இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்: சீனாவுக்கு சூசகமாக தெரிவித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் “மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்” ஒன்று குறித்து மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஜூலை 9 ஆம் தேதி அமெரிக்காவின் வர்த்தக வரி நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னதாக, வாஷிங்டனும் புதுடெல்லியும் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஏப்ரல் 2 ஆம் தேதி, இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்கா அறிவித்தது. பின்னர் 90 நாள் இடைக்கால சலுகை அளிக்கப்பட்டது, அது ஜூலை 9 அன்று முடிவடைகிறது.

“நாங்கள் எந்தவொரு நாட்டோடும் சும்மா ஒப்பந்தங்கள் செய்வதில்லை. அனைவரும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள், அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, பத்திரிகைகள், ‘உங்களுக்கு உண்மையில் ஆர்வம் உள்ள யாரும் இல்லையா?’ என்று கேட்டன.

சரி, நாங்கள் நேற்றுதான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். எங்களிடம் சில சிறந்த ஒப்பந்தங்கள் உள்ளன. இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் வரலாம். இந்தியா தெரிவிக்கும். சீன ஒப்பந்தத்தில், நாங்கள் சீனாவைத் தெரிவிக்க வைக்கத் தொடங்கினோம்,” என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
வியாழக்கிழமை உள்ளூர் நேரம் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு “பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் பேசிய டிரம்ப், சீனாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்தோ, அல்லது இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு குறித்தோ விரிவாகப் பேசவில்லை.

“நாங்கள் அனைவருடனும் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை. சிலருக்கு நாங்கள் ஒரு கடிதம் அனுப்பி, மிக்க நன்றி என்று கூறிவிடுவோம். நீங்கள் 25, 35, 45 சதவீதம் செலுத்தப் போகிறீர்கள். இதுதான் எளிதான வழி, என் மக்கள் அதை அப்படி செய்ய விரும்பவில்லை. அவர்கள் அதில் சிலவற்றைச் செய்ய விரும்புகிறார்கள், ஆனால் நான் செய்வதை விட அதிகமான ஒப்பந்தங்களைச் செய்ய விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இந்தியா வந்திருந்தனர். பரஸ்பர வரிகளுக்கான ஜூலை 8 காலக்கெடு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தங்கள் சிறந்த சலுகைகளை அளிக்குமாறு அமெரிக்கா நாடுகளைக் கேட்டுக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

“கடிதத்தின் தகுதிகள் மற்றும் உள்ளடக்கத்தை நான் உறுதிப்படுத்த முடியும். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) இந்த கடிதத்தை எங்கள் வர்த்தகப் பங்காளிகள் அனைவருக்கும் அனுப்பினார், காலக்கெடு நெருங்குகிறது என்பதை அவர்களுக்கு ஒரு நட்புரீதியான நினைவூட்டலாக,” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியிருந்தார்.

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் கூறுகையில், அமெரிக்கா மேம்பட்ட உற்பத்தியை மீண்டும் கொண்டு வரவும், இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்யவும் நோக்கம் கொண்டுள்ளது. இரு தரப்பினரும் “உண்மையில் செயல்படும் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தனர்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், எண்ணெய் மற்றும் பாதுகாப்பு கொள்முதலை பல்வகைப்படுத்துவது நாட்டின் மூலோபாய நலன் சார்ந்தது என்றும், அமெரிக்காவில் இருந்து அதிகமாக வாங்குவது சரக்கு வர்த்தக இடைவெளியை கணிசமாக குறைக்க உதவும் என்றும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 2025 இல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சார்ந்து 90 சதவீதமாக உயர்ந்ததுடன், இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனும் அதிகரித்து வருகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

சென்னையில் முதற்கட்டமாக 625 மின்சார பஸ்கள்: ஜூன் 30-இல் இருந்து தொடக்கம்…

சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், வியாசர்பாடி பணிமனையில் இருந்து அதிநவீன குறைந்த தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஜூன் 30-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மின்சாரப் பேருந்து சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகின்றன. இது சென்னையின் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக வட்டாரங்களின் தகவல்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 50 வழித்தடங்களில் மொத்தம் 625 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட முயற்சி, உலக வங்கி ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சென்னை நகர கூட்டாண்மை திட்டம் – நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் (C-SUSP) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் கீழ், செயல்பாடு அடிப்படையிலான மொத்த செலவு ஒப்பந்த (Gross Cost Contract – GCC) மாதிரியின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அசோக் லேலண்ட் மற்றும் ஸ்விட்ச் மொபிலிட்டியின் துணை நிறுவனமான ஓ.ஹெச்.எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த ஜி.சி.சி (GCC) ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், ஏசி அல்லாத மின்சாரப் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 77.16 மற்றும் ஏசி மின்சாரப் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 80.86 என்ற தொகையைச் செலுத்தும். இந்த புதிய மின்சாரப் பேருந்துகள் 400 ஏசி அல்லாத மற்றும் 225 ஏசி (Air-Conditioned) வசதியுடன் இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்துகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-I, பூந்தமல்லி மற்றும் மத்திய பணிமனை ஆகிய ஐந்து முக்கிய பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு பராமரிக்கப்படும். இந்த மின்சாரப் பேருந்துகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஐந்து பணிமனைகளை மேம்படுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிநவீன மின்சாரப் பேருந்துகள் ஏற்கனவே உள்ள மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். அவை மெட்ரோ ரயில் நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், தகவல் தொழில்நுட்ப வழித்தடங்கள் மற்றும் வர்த்தக மையங்களை இணைக்கும். இந்த நடவடிக்கை, கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துவதோடு, நகரில் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல்வர் தொடங்கி வைக்கும் வியாசர்பாடி பணிமனையில் இருந்து 13 வழித்தடங்களில் 120 ஏசி அல்லாத பேருந்துகள் இயக்கப்படும். மத்திய பணிமனையில் இருந்து 10 வழித்தடங்களில் 145 பேருந்துகள் இயக்கப்படும். இதில் 100 ஏசி பேருந்துகள் அடங்கும். இது அனைத்து பணிமனைகளிலும் அதிக எண்ணிக்கையிலான ஏசி பேருந்துகளாகும். பெரும்பாக்கம் பணிமனை 11 வழித்தடங்களில் 135 பேருந்துகளை இயக்கும், இதில் 55 ஏசி பேருந்துகள் அடங்கும். பூந்தமல்லி பணிமனை எட்டு வழித்தடங்களில் 125 பேருந்துகளை இயக்கும், இதில் 45 ஏசி பேருந்துகள் அடங்கும். தண்டையார்பேட்டை-I பணிமனை 10 வழித்தடங்களில் 100 பேருந்துகளை இயக்கும், இதில் 25 ஏசி பேருந்துகள் அடங்கும்.

தற்போது, சென்னை பெருநகரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள 32 பணிமனைகள் மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தினசரி 3,233 திட்டமிடப்பட்ட பேருந்து சேவைகளை இயக்குகிறது. இதன் மூலம் சுமார் 30 லட்சம் பயணிகள் தினசரி பயணிப்பார்கள். இந்த மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தினசரி திட்டமிடப்பட்ட சேவைகள் 3,233ல் இருந்து 3,858 ஆக உயரும். அதாவது கூடுதலாக 625 சேவைகள். இந்த மின்சாரப் பேருந்துகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது சேவை வரம்பை மேம்படுத்தி, வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்து, ஒட்டுமொத்த நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியாசர்பாடி: 13 வழித்தடங்கள் | 120 பேருந்துகள் (120 ஏசி அல்லாத)

பெரும்பாக்கம்: 11 வழித்தடங்கள் | 135 பேருந்துகள் (80 ஏசி அல்லாத, 55 ஏசி)

தண்டையார்பேட்டை-I: 10 வழித்தடங்கள் | 100 பேருந்துகள் (75 ஏசி அல்லாத, 25 ஏசி)

பூந்தமல்லி: 8 வழித்தடங்கள் | 125 பேருந்துகள் (80 ஏசி அல்லாத, 45 ஏசி)

மத்திய பணிமனை: 10 வழித்தடங்கள் | 145 பேருந்துகள் (45 ஏசி அல்லாத, 100 ஏசி)

வியாசர்பாடி பணிமனை பேருந்து வழித்தடங்கள்:

46G எம்.கே.பி. நகர் முதல் எம்.ஜி.ஆர் கோயம்பேடு வரை

57X வள்ளலார் நகர் முதல் பெரியபாளையம் வரை

170TX கிளாம்பாக்கம் பி.எஸ் முதல் கண்ணதாசன் நகர் வரை

37 வள்ளலார் நகர் முதல் பூந்தமல்லி வரை

33CX அண்ணா சதுக்கம் முதல் கண்ணதாசன் நகர் வரை

64K பிராட்வே முதல் கண்ணதாசன் நகர் வரை

57 வள்ளலார் நகர் முதல் ரெட்ஹில்ஸ் வரை

2B வள்ளலார் நகர் முதல் கண்ணதாசன் நகர் வரை

170C டி.வி.கே நகர் முதல் கிண்டி டி.வி.கே எஸ்டேட் வரை

64E எம்.எம்.பி.டி முதல் சென்ட்ரல் வரை (எழும்பூர் வழியாக)

164E பெரம்பூர் முதல் மணலி வரை

46 டி.வி.கே நகர் முதல் எம்.ஜி.ஆர் கோயம்பேடு வரை

113E எம்.எம்.பி.டி முதல் கிண்டி ஐ.இ வரை

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

இனி பிறப்பு சான்றிதழ் வழங்க புதிய நடைமுறை – மத்திய அரசு அதிரடி உத்தரவு

தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன்பாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து, குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களின் தாய்மார்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு முடிந்தவுடன், பிறப்பு சான்றிதழை பதிவாளர் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மின்னணு அல்லது பிற வடிவத்தில் பிறப்புச் சான்றிதழை ஏழு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் குழந்தை பிறப்பு பதிவு மையங்களாக செயல்படும் நிலையில், பிறப்பு சான்றிதழின் பயன்பாடு அண்மை காலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளதால், உடனடியாக பிறப்பு சான்றிதழை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்றும் இது குடிமக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தும் என்றும் இந்திய பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More
குற்றம்சினிமாதமிழ்நாடு

நடிகர் கிருஷ்ணா கொக்கைன் எடுத்து கொண்டாரா? சோதனையில் வெளிவந்த உண்மை

தடை செய்யப்பட்ட போதை பொருள் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை செய்தனர். மேலும், அவற்றை நடிகர் கிருஷ்ணா பயன்படுத்தினாரா என்று மருத்துவ சோதனை நடைபெற்றது.
போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பணப்பரிவர்த்தனை மேற்கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில், நேற்று (ஜூன் 25) நடிகர் கிருஷ்ணா காவல் நிலையத்திற்கு வருகை தந்ததில் இருந்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த பரிசோதனையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவை ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்திய வழக்கில் இதற்கு முன்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் வேறு சில நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் தற்போது போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ. 16 மணி நேரமாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக, மூன்று விஷயங்களை மையப்படுத்தி விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, நடிகர் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. இது தவிர போதை பொருளை விற்பனை செய்தாரா? என்றும், இவற்றை விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்தாரா? என்றும் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Read More
இந்தியாஉலகம்தொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று மாலை சென்றடைகிறார் சுபான்ஷூ சுக்லா

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு இந்தியா செயல்படுத்த உள்ளது. இதற்கு பல்வேறு வகையில் உதவ உள்ள பயணம் தான் ஆக்சியம் 4. நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல ஆயத்தமாகினர்.
பல்வேறு காரணங்களால், 6 முறை ஆக்சியம் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி பிற்பகல் 12.01 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினருடன் பால்கன் 9- ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமாக புவி சுற்று வட்டப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கும் திரும்பியது.
ராகேஷ் சர்மாவுக்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவண்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார். சர்வதேச விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், பயணத்தை தொடங்கும் முன்பு தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு மனதை இலகுவாக்கி கொண்டனர். இதில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஷாருக்கானின் ஸ்வதேஸ் பட பாடலை கேட்டு ரசித்தார்.

இந்நிலையில், சுபான்ஷூ சுக்லாவின் சர்வதேச விண்வெளி பயணத்தை, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அவரது குடும்பத்தினர் பெருமிதத்துடன் கண்டு களித்தனர். சுபான்ஷூ சுக்லாவின் தந்தை மற்றும் தாய் உணர்ச்சி வயப்பட்ட நிலையில், சுபான்ஷூவின் இரண்டு சகோதரிகளும் அவர்களை அரவணைத்து ஆனந்தக் கண்ணீரை துடைத்து விட்டனர். இதே போன்று டெல்லியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா தூதருடன் சர்வதேச விண்வெளி பயணத்தை காணொலி மூலம் கண்டு களித்தார்.
advertisement
ஃபால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம், ,இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர். இதில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா மட்டும் 7 ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்.
விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ராகேஷ் சர்மா ஆக்சியம் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், அதிக நேரம் ஜன்னல் வழியாக பாருங்கள் என அவர்களுக்குக் கூறியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று மாலை சென்றடைகிறார் சுபான்ஷூ சுக்லா

Read More
isrel-iranஅரசியல்உலகம்

இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்த மீறல்: இஸ்ரேல் மீது டிரம்ப் அதிருப்தி

இஸ்ரேலும்-ஈரானும் தாம் அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். இரு தரப்பிலும் அதிருப்தி தெரிவித்த அவர், “இஸ்ரேல்” மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
ஹேக்கில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்கு புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட உடனேயே இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்ததை கடுமையாக விமர்சித்தார். “ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட உடனேயே இஸ்ரேல் குண்டுகளைப் பொழிந்தது” என்று அவர் கூறினார்.

மேலும், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். “அவர்களின் அணுசக்தி திறன்கள் அழிந்துவிட்டன, அவர்கள் ஒருபோதும் தங்கள் அணுசக்தி திட்டத்தை மீண்டும் உருவாக்க மாட்டார்கள்,” என்று அவர் உரிமை கோரினார். இதற்கு பிறகு, ட்ரூத் சோஷியல் பதிவில், டிரம்ப் இஸ்ரேலை நோக்கி, “அந்த குண்டுகளைப் போடாதீர்கள். அப்படிச் செய்தால், விதிமீறல். உங்கள் விமானிகளை இப்போதே அழைத்து வாருங்கள்,” என்று கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாட்களாக நடந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அதிபர் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம், அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே செவ்வாய்க்கிழமை காலை இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சுமார் 2.5 மணி நேரத்திற்குப் பிறகு, உள்ளூர் நேரம் இரவு 10:30 மணியளவில், இஸ்ரேலிய ராணுவம் “ஈரான் ஏவுகணை தாக்குதல்” என்று விவரித்ததற்குப் பதிலடியாக வடக்கு இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலிய ஊடகங்கள் 2 ஏவுகணைகளை பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாகத் தெரிவித்தன.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்கு பிறகு இன்று முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். டிரம்ப் சொன்னவுடன் இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் ஈரான் கேட்கவில்லை. இந்நிலையில் தான் ஈரானை சமாதானப்படுத்தி போர் நிறுத்தத்துக்கு கொண்டு வந்தது ஒரு இஸ்லாமிய நாட்டின் பிரதமர் தான் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலில் ஈரானை அமெரிக்கா தாக்கியது. இது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்தது. இதற்கு பதிலடியாக நேற்று ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமான தளத்தை தாக்கியது. இதையடுத்து நிலைமை மோசமானது. ஆனால் முன்கூட்டியே ஈரான் தனது தாக்குதல் பற்றி கத்தார், அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்து இருந்தது. இதன்மூலம் எங்களை தாக்கியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது. யாரையும் கொல்லும் நோக்கம் இதில் இல்லை என்பதை தான் ஈரான் வெளிப்படுத்தியதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்தனர். அதோடு இது போர் நிறுத்தத்துக்கான அறிகுறியாக மாறியது. இதையடுத்து தான் போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கின. டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்த முயற்சியை முன்னெடுத்தார். டொனால்ட் டிரம்ப் நேரடியாக தனது நண்பரான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசினார். இதையடுத்து இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது.

Read More
குற்றம்சினிமாதமிழ்நாடு

போதை பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு…

கோகோயின் தொடர்பான வழக்கில் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் முறையாக கைது செய்யப்பட்டார். காவல்துறை வட்டாரங்களின்படி, ஸ்ரீகாந்த் கோகைன் வாங்கி பயன்படுத்தியதாகவும், தெரிந்த போதைப்பொருள் சப்ளையர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது இரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன, மேலும் அறிக்கைகள் போதைப்பொருள் பயன்பாட்டை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கில் தலைமறைவாக உள்ள அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை கூறியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இரவு விடுதியில் மது அருந்த சென்றவர்கள் இடையே ஏற்பட்ட மோதல், தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாகியது. இந்த வழக்கில் கைதான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அவரின் கானா நாட்டு நண்பர் ஜான் என்பவருடன் சேர்ந்து கொக்கைன் போதைப் பொருளை பெற்று விற்பனை செய்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது 11 கிராம் கொக்கைன் மற்றும் பணபரிவர்த்தனை உள்ளிட்ட தகவல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கொகை்கைன் போதைப் பொருளை பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த், உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பரிச்சயமான முகமான ஸ்ரீகாந்த், 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட் வெற்றிப் படமான த்ரீ இடியட்ஸ் படத்தின் இயக்குனர் ஷங்கரின் தமிழ் ரீமேக்கான நண்பனில் குறிப்பிடத்தக்க வேடங்கள் உட்பட கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்துள்ளார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடு

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை முற்றிலும் ரத்து – ஏர் இந்தியா அறிவிப்பு

இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல், இரண்டாவது வாரமாக நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து நேற்றிரவு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து வான்வழியாக ஏவப்பட்ட ஏவுகணைகளைக் கண்டு, தலைநகர் தோஹாவில் மக்கள் அலறியடித்து ஓடினர்.
அல் உதெய்த் விமானப்படைத் தளத்தை குறிவைத்து குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“வெற்றி அறிவிப்பு” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலால் யாருக்கும் பாதிப்போ, காயமோ ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது. கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டது. இதேபோல, ஈராக்கில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்தும் ஒரு ஏவுகணையை ஈரான் ஏவியது.
இதனிடையே மறுஉத்தரவு வரும் வரை, மத்திய கிழக்கு நாடுகள், வட அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதி நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்துசெய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வடஅமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட விமானங்கள், புறப்பட்ட இடங்களுக்கே திருப்பி விடப்பட்டதாகவும், மற்ற விமானங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துபாய் வான்பகுதி மூடப்பட்டதால், அதற்கு ஏற்பட்ட விமான சேவையில் பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. துபாய், தோஹா, பஹ்ரைன், அபுதாபி, குவைத், திபிலிசி பகுதியிலிருந்து புறப்படும் மற்றும் செல்லும் விமானங்களில் பாதிப்பு ஏற்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல, கத்தார் ஏர்வேஸ் நிறுவன சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

Read More