போதை பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு…
கோகோயின் தொடர்பான வழக்கில் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் முறையாக கைது செய்யப்பட்டார். காவல்துறை வட்டாரங்களின்படி, ஸ்ரீகாந்த் கோகைன் வாங்கி பயன்படுத்தியதாகவும், தெரிந்த போதைப்பொருள் சப்ளையர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது இரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன, மேலும் அறிக்கைகள் போதைப்பொருள் பயன்பாட்டை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கில் தலைமறைவாக உள்ள அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை கூறியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இரவு விடுதியில் மது அருந்த சென்றவர்கள் இடையே ஏற்பட்ட மோதல், தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாகியது. இந்த வழக்கில் கைதான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அவரின் கானா நாட்டு நண்பர் ஜான் என்பவருடன் சேர்ந்து கொக்கைன் போதைப் பொருளை பெற்று விற்பனை செய்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது 11 கிராம் கொக்கைன் மற்றும் பணபரிவர்த்தனை உள்ளிட்ட தகவல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கொகை்கைன் போதைப் பொருளை பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த், உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பரிச்சயமான முகமான ஸ்ரீகாந்த், 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட் வெற்றிப் படமான த்ரீ இடியட்ஸ் படத்தின் இயக்குனர் ஷங்கரின் தமிழ் ரீமேக்கான நண்பனில் குறிப்பிடத்தக்க வேடங்கள் உட்பட கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்துள்ளார்.
