actorkrishna

குற்றம்சினிமாதமிழ்நாடு

நடிகர் கிருஷ்ணா கொக்கைன் எடுத்து கொண்டாரா? சோதனையில் வெளிவந்த உண்மை

தடை செய்யப்பட்ட போதை பொருள் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை செய்தனர். மேலும், அவற்றை நடிகர் கிருஷ்ணா பயன்படுத்தினாரா என்று மருத்துவ சோதனை நடைபெற்றது.
போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பணப்பரிவர்த்தனை மேற்கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில், நேற்று (ஜூன் 25) நடிகர் கிருஷ்ணா காவல் நிலையத்திற்கு வருகை தந்ததில் இருந்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த பரிசோதனையில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவை ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்திய வழக்கில் இதற்கு முன்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் வேறு சில நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவிடம் தற்போது போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ. 16 மணி நேரமாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக, மூன்று விஷயங்களை மையப்படுத்தி விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, நடிகர் கிருஷ்ணா போதை பொருள் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. இது தவிர போதை பொருளை விற்பனை செய்தாரா? என்றும், இவற்றை விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்தாரா? என்றும் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Read More