trainticketbooking

தமிழ்நாடுதொழில்நுட்பம்

ரயில் டிக்கெட் முன்பதிவு: சூப்பர் வசதிகள் அறிமுகம் – இனி ஈஸியா டிக்கெட் புக் பண்ணலாம்!

ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு பட்டியல் (Reservation Chart) தயாராகிவிடும். அதுமட்டுமில்லாமல், டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையிலும் பெரிய மாற்றம் வரப்போகிறது. ஒரு நிமிடத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம்.
இனி ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு பட்டியல் தயாராகிவிடும். இப்போது 4 மணி நேரத்துக்கு முன்புதான் பட்டியல் தயாராகும். பயணிகளின் வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஸ்னவ் உத்தரவு!
ரயில்வே வாரியம் இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதை கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் எந்த குழப்பமும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். விரைவில் இது எப்போது அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட உள்ளது.
ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு பட்டியல் தயாராவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. புதிய நேர நிர்ணயம் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு காத்திருப்பு பட்டியல் நிலவரம் முன்கூட்டியே தெரிந்துவிடும். தூர இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏற்பாடு செய்யவும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும்.
ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு பட்டியல் தயாராவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. புதிய நேர நிர்ணயம் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு காத்திருப்பு பட்டியல் நிலவரம் முன்கூட்டியே தெரிந்துவிடும். தூர இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏற்பாடு செய்யவும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும்.
புதிய ப்யணிகள் முன்பதிவு திட்டத்தின் மூலம் டிக்கெட் சரிபார்ப்பு, டிக்கெட் பற்றிய தகவல்களை அறிதல் என்பது ஒரு நிமிடத்தில் 4 லட்சம் என்ற அளவில் இருந்து 40 லட்சமாக உயர்த்த முடியும். இந்த புதிய முறையில் பல மொழிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இது உபயோகிக்க எளிதாகவும் இருக்கும். அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த திட்டத்தை Centre for Railway Information Systems (CRIS) என்ற அமைப்பு செய்து வருகிறது.
டிக்கெட் முன்பதிவு!
“புதிய PRS-ல் பயணிகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேர்வு செய்யலாம். கட்டண விவரங்களையும் பார்க்கலாம்” என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஜூலை 1 முதல் IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கட்டாயம் பயனர் அங்கீகாரம் (user authentication) செய்ய வேண்டும்.
ரயில்வே துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிறைய மாற்றங்கள் அமலுக்கு வரும் போது பயணிகளுக்கு சிறப்பான அனுபவமாக இருக்கும். டிக்கெட் முன் பதிவு செய்யும் போது பயனர்களுக்கு எளிதாக, விரைவான சேவையை வழங்கும் போது டிக்கெட் முன் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும்.

தட்கல் முறையில் முன் பதிவு செய்யும் போது ஏற்படும் சில தொழில்நுட்ப சிக்கல்களும் சரி செய்யப்படும் பட்சத்தில் பயணிகள் நல்ல அனுபவத்தை பெறுவார்கள்.

Read More