policecase

அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

விஜய் பரப்புரை பயணத்தில் விதிமீறல்.. தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார். இதற்கு 23 நிபந்தனைகளுடன் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், விஜயால் திட்டமிட்ட நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள இயலவில்லை.
விஜய் பரப்புரை பயணத்தில் நடைபெற்ற விதிமீறல் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
காவல்துறையின் நிபந்தனைகளை தவெக தொண்டர்கள் மீறியதுடன், தனியார் மற்றும் அரசு சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விதிமீறல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக திருச்சி மாவட்டத் தலைவர் கரிகாலன், மகளிர் அணி மாவட்டத் தலைவி துளசி மணி ஆகியோர் மீதும்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்ய சோழன், இமயத் தமிழன், விக்னேஷ் குமார் ஆகியோர் மீதும் இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன். வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் கடந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதி வரை விஜய் பிரசார பேருந்தில் வந்தார். சில நிமிடங்களில் சென்று விடும் தூரத்தை, அதாவது 7 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் கடந்து விஜய் வந்தார். வழி நெடுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாக இருந்ததால் விஜய்யின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது.

தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்ததால், மதியம் 2.30 மணிக்குத்தான் பிரசார இடமான காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தது. அங்கு பேசிய விஜய், பின்னர் அடுத்த பாயிண்ட் அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

Read More
குற்றம்சினிமாதமிழ்நாடு

போதை பொருள் பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு…

கோகோயின் தொடர்பான வழக்கில் பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் முறையாக கைது செய்யப்பட்டார். காவல்துறை வட்டாரங்களின்படி, ஸ்ரீகாந்த் கோகைன் வாங்கி பயன்படுத்தியதாகவும், தெரிந்த போதைப்பொருள் சப்ளையர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது இரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன, மேலும் அறிக்கைகள் போதைப்பொருள் பயன்பாட்டை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கில் தலைமறைவாக உள்ள அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை கூறியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இரவு விடுதியில் மது அருந்த சென்றவர்கள் இடையே ஏற்பட்ட மோதல், தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாகியது. இந்த வழக்கில் கைதான அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அவரின் கானா நாட்டு நண்பர் ஜான் என்பவருடன் சேர்ந்து கொக்கைன் போதைப் பொருளை பெற்று விற்பனை செய்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது 11 கிராம் கொக்கைன் மற்றும் பணபரிவர்த்தனை உள்ளிட்ட தகவல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கொகை்கைன் போதைப் பொருளை பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த், உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எதிரிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பரிச்சயமான முகமான ஸ்ரீகாந்த், 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட் வெற்றிப் படமான த்ரீ இடியட்ஸ் படத்தின் இயக்குனர் ஷங்கரின் தமிழ் ரீமேக்கான நண்பனில் குறிப்பிடத்தக்க வேடங்கள் உட்பட கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்துள்ளார்.

Read More