Author: Namadhu Arasu

தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

வங்கி லாக்கர் வைத்திருந்தால் உடனே இதனை செய்யவும்-வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. முக்கிய உத்தரவு…

அனைத்து வங்கிகளிலும், வாடிக்கையாளர்களுக்கான லாக்கர் வசதிகள் உள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் தங்களின் சொத்து ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்கவற்றை பாதுகாக்க முடியும். இதற்கு வங்கிகள் தனியாக பராமரிப்பு கட்டணமும் வசூலித்து வருகின்றன.
வாடிக்கையாளர்களின் மதிப்புமிக்க பொருட்களை வங்கிகள் 24*7 என கண்காணித்து வருகின்றன. இதற்காக வங்கிகளில் தடை செய்யப்பட்ட பகுதி, கண்காணிப்பு கேமராக்கள், அலாரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கும்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ் அனைத்து வாடிக்கையாளர்களும் புதுப்பிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திடவில்லை என்றால், உங்கள் லாக்கரை சீல் வைப்பதைத் தவிர்க்க உடனடியாக அதைச் செய்யுங்கள்.
ஆகஸ்ட் 2021 இல், தற்போதுள்ள அனைத்து லாக்கர் வைத்திருப்பவர்களுடனும் புதிய வாடகை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. மேலும், இதில் பல வாடிக்கையாளர்கள் கையெழுத்திடாததால் ஏற்கனவே இருமுறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி முதல்முறை டிசம்பர் 2023 வரையிலும், இரண்டாவதுமுறை மார்ச் 2024 வரையிலும் வாடிக்கையாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க, மார்ச் 2024 முதல் டிசம்பர் 2025 வரை காலக்கெடுவை நீட்டிக்க வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வங்கி லாக்கர் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அவர்களின் லாக்கர் சீல் வைக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. எனவே வங்கியில் லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருந்தால் உடனடியாக இதனை முடித்துவிடுவது நல்லது.
நீங்கள் ஏற்கனவே புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், உங்கள் வங்கிக்குச் சென்று அதில் கையெழுத்திடுங்கள். அதில் கையெழுத்திட்டீர்களா என்று உறுதியாகத் தெரியாதவர்கள், புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமா இல்லையா என்பதைச் சரிபார்க்க தங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று தகவல்களை பெறலாம்.

Read More
சினிமாதமிழ்நாடு

தனுஷின் ‘குபேரா’ படம்-விமர்சனம்

பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளது குபேரா திரைப்படம். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சார் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷின் இரண்டாவது தெலுங்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் யாசகம் பெறுவோராக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், முதலில் படம் 3 மணி 15 நிமிடங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இதனை 3 மணி 2 நிமிடங்களாக படக் குழுவினர் குறைத்துள்ளனர். இந்தப் படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “2025-ம் ஆண்டுக்கான சிறந்த படங்களில் ஒன்று ‘குபேரா’. நல்ல எமோஷனல் ட்ராமா” என தெரிவித்துள்ளார்.
தனுஷ் சிறப்பாக இந்தப் படத்தில் நடித்திருப்பதாகவும், இன்னும் படத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியின் நேரத்தை இன்னும் கூட குறைத்திருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார் ஒருவர்.
பிச்சைக்காரர்களை பினாமியாக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மணி லாண்டரிங் செய்யும் கதையில் முக்கிய வில்லனாக நடித்துள்ள ஜிம் சர்ப் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அதே சமயம் படத்தின் கிளைமேக்ஸில் சில சறுக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. தனுஷின் குபேரா படத்தின் பிளஸ், மைனஸ் உள்ளிட்டவை அடங்கிய முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

குபேரா கதை: மிகப்பெரிய தொழிலதிபராக வரும் நீரஜ் முதல் காட்சியிலேயே இந்தியாவுக்கு எண்ணெய் வளம் கிடைப்பதை தெரிந்துக் கொள்கிறார். அதை மக்களுக்கு தெரிவிக்காத வகையில், அரசியல் தலைவரான ஹரிஷ் பெரடியுடன் கூட்டு சதி செய்து, கொள்ளையடிக்கிறார். அதற்காக அரசியல் தலைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பெரிய தொகையை சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தீபக் (நாகார்ஜுனா) மூலம் கொடுக்க திட்டம் போடுகிறார். தீபக் பினாமிகளாக பிச்சைக்காரர்களை வைத்து இந்த டீலை முடித்துக் கொடுக்கிறேன் என வர, திருப்பதியில் இருந்து தேவா (தனுஷ்), மற்ற ஊர்களில் இருந்து குஷ்பு, திவ்யா மற்றும் இன்னொரு நபர் என 4 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பிச்சைக்காரர்களை குளிப்பாட்டி, கோட் சூட் மாட்டி அவர்கள் பெயரில் பொய்யாக நிறுவனங்களை உருவாக்கி பல கோடி மதிப்புமிக்கவர்களாக மாற்றி, பணம் கைமாறிய உடனே பிச்சைக்கார்கர்கள் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்டப்படுகின்றனர். இதிலிருந்து, தேவா எப்படி தப்பிக்கிறார், அவருடன் சமீரா (ராஷ்மிகா மந்தனா) எப்படி சிக்கிக் கொள்கிறார். கடைசியில் கிளைமேக்ஸில் என்ன ஆகிறது என்கிற பரபரப்பான கதையை குபேரா படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.
படம் எப்படி இருக்கு?: தனுஷூக்கு இது லைஃப் டைம் செட்டில்மென்ட் ரோல் என்று சொல்லலாம். ஏற்கனவே பல படங்களில் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்துள்ள தனுஷ், இந்த படத்திலும் அதை மீண்டும் செய்திருக்கிறார். தேசிய விருது கொடுக்கும் அளவுக்கான நடிப்பை அசால்ட்டாக நடித்துக் காட்டி பல இடங்களில் ரசிகர்களை கை தட்டவும் விசில் அடிக்கவும் செய்கிறார். பிச்சைக்காரனாக இருந்தாலும், நாங்களும் இந்த உலகத்தின் மனிதர்கள் தானே என்றும் இறந்தவர்களை நாய் வண்டியில் ஏற்றாதீர்கள், கட்டை வைத்து எரித்தால் தான் மீண்டும் பிச்சைக்காரனாக பிறக்க மாட்டார்கள் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் கண் கலங்க வைத்து விடுகிறார்.

படம் தொடங்கியதும் மைய கதைக்குள் செல்வது சிறப்பாக உள்ளது. ஜிம் சர்ப் எப்படிப்பட்ட வில்லன் என்பதையும் அவருடைய இலக்கு என்ன என்பதையும் விளக்கிவிடுகிறார் இயக்குநர். அதன் பின்னர், பொய்யான லஞ்ச குற்றச்சாட்டுக்காக சிறையில் 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் நாகார்ஜுனாவை தனது வேலைக்காக அவர் பயன்படுத்தும் விதம், மனைவி சுனைனா மற்றும் மகளுக்காக இந்த தப்பான வேலையை தேர்வு செய்து நாகார்ஜுனா பயணிக்கும் விதம், நாகார்ஜுனாவிடம் இருந்து தப்பிக்கும் தனுஷை அவர் துரத்த எடுக்கும் நடவடிக்கைகள், கடைசியில் தனுஷ் பக்கம் நிற்க அவர் போராடுவது என மனுஷன் மாஸ் கிங்காக எல்லாம் நடிக்காமல், நடிப்பு கிங்காக படம் முழுக்க பயணித்துள்ளார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சர்வதேச யோகா தினம் 2025-எந்த நேரத்தில் யோகா செய்வது நல்லது…

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதன் விளைவாக 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகா என்பது சுவாசக் கட்டுப்பாடு மற்றும் தியானம் உள்ளிட்ட பல நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு பழமையான அதே சமயம் பாரம்பரியமிக்க உடற்பயிற்சி ஆகும். வழக்கமான அடிப்படையில் தினசரி யோகா செய்வதால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
ஆனால் நீங்கள் யோகாவின் நன்மைகளை பெற இந்த பயிற்சியை காலை அல்லது மாலை எப்போது செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா? யோகாவை எப்போது செய்தால் என்ன பலன் ஒன்று தானே என்றும் சிலர் யோசிக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் யோகா பயிற்சியில் ஈடுபடுவது தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் எந்த நேரத்தில் யோகா செய்தால் சிறந்த நன்மைகள் கிடைக்கும் என்பது உங்கள் உடல் மற்றும் தினசரி அட்டவணையை பொறுத்தது.
யோகா குருவும் அக்ஷர் யோகா கேந்திராவின் நிறுவனருமான அக்ஷரின் கூற்றுப்படி, “ உங்கள் காலை நேரத்தை யோகாவுடன் தொடங்குவது உடலில் இருக்கும் தசை குழுக்களை (muscle groups) செயல்படுத்தவும், முழு உடலை உற்சாகப்படுத்த மற்றும் மனதை மகிழ்ச்சியாக வைக்க உதவும் ஒரு சிறந்த வழி. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் முழுமையான மற்றும் உற்சாகமூட்டும் பயிற்சியை வழங்கும் செயலாக கருதப்படுகிறது. இது நாள் முழுவதும் நீங்கள் விழிப்பு மற்றும் கவனத்துடன் இருப்பதை உறுதிசெய்கிறது. எனவே இதன் காரணமாக உங்கள் உற்பத்தித்திறனும் சிறப்பாக இருக்கும். ஆனால் இரவு நீண்ட நேரம் நீங்கள் அசையாமல் படுத்து தூங்கி எழுவதன் காரணமாக நல்ல வார்ம்-அப் மூலம் யோகா அல்லது சூரிய நமஸ்கரம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பொருள் முதலில் நீங்கள் ஸ்ட்ரெச் பயிற்சிகளில் கூடுதல் கவனமுடன் அதே சமயம் மென்மையாக ஈடுபட வேண்டும்.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன
யோகா செய்வதால் மனநலன்கள்

யோகா செய்வதால் உடல் நலன் தவிர மனநலன் சிறப்பாக நிர்வகிக்க முடியும். யோகா மன அழுத்தத்தைசமாளிக்க உதவுகிறது. மனச்சோர்வு உடல் மற்றும் மனதில் பேரழிவு விளைவுகளை உண்டு செய்கிறது. எந்த சிக்கலான சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை யோகா பயிற்சி அளிக்கிறது.

கவனத்தை ஒருங்கிணைக்கிறது

யோகா செய்வது கவனத்தை கூர்மைப்படுத்துகிறது. ஒருங்கிணைந்த கவனத்தை அளிக்கிறது. தியானம் செய்வது அலைபாயும் மனதை நேர்மறைக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் மேன்மையான செயல்பாடுகள் மூலம் வெற்றியை ருசிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் தோரணை பயிற்சிகள் மூலம் உட்கார்ந்த வாழ்க்கை முறை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. யோகாசனம் செய்வது உடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. விறைப்பை குறைக்கிறது. மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு வலிமையையும் நெகிழ்வ்த்தன்மையும் அளிக்கிறது.

ஒழுக்கம் மற்றும் நினைவாற்றல்

பதஞ்சலி யோக சூத்திரங்களில் எழுதப்பட்ட யம மற்றும் நியம செயல்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் நினைவாற்றலையும் அதிகம் பெற முடியும்.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பம் மாற்றம் செய்ய வேண்டுமா…தேர்தல் ஆணையம்

விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையை விரைந்து வழங்குவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொண்டாலோ சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு 15 நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு மாதத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் நிலையில், அதனை 15 நாட்களாக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது.
இந்திய அஞ்சல் துறை வழியாக அடையாள அட்டையை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர்களை அது சென்றடையும் வரை, அது வரும் வழித்தடத்தை கைபேசி மூலம் அறியும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக வாக்காளர்களுக்கான சேவை வழங்கலை எளிதாகவும் விரைவாகவும் அணுகும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

ஆகஸ்ட் 15 முதல் ஆண்டுக்கு ரூ.3000 சுங்கச்சாவடி பாஸ்: நிதின் கட்கரி

சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தும் புதிய பாஸ், ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, கிலோ மீட்டருக்கு ஏற்ப சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, ரொக்கங்களில் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், Fastag முறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஆண்டுக்கு 3000 ரூபாய் சுங்கக்கட்டணம் செலுத்தும் பாஸ் வழங்கும் நடைமுறை, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். அதாவது, 3000 ரூபாய்க்கு பாஸ் பெற்றுக் கொண்டால் ஓராண்டிற்கோ அல்லது 200 பயணங்களுக்கோ தனியாக கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம்.
கார், ஜீப், வேன்கள் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே ஆண்டு பாஸ் திட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலம் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பயணிக்கலாம் என்றும் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆண்டு பாஸை பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடிகள் இருப்பதற்கு எதிரான பிரச்னைக்கு இந்த ஆண்டு பாஸ் தீர்வாக அமையும் என்றும் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடு

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரம்: மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்; தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள் 

இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. எண்​ணெய் வயல்​கள் நாச​மாகின. இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் நடத்​திய பதில் தாக்​குதலில், இஸ்​ரேலில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இரு தரப்​பிலும் நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​தனர்.

அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் தேதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. நாட்​டின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், ராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.
இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடித்​தது. இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் 150 ஏவு​கணை​களை வீசி​யது. இதில் பெரும்​பாலான ஏவு​கணை​கள் நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. எனினும், சில ஏவு​கணை​கள் இஸ்​ரேல் பகு​தி​களில் விழுந்​தன. இஸ்​ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின்​மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இஸ்​ரேலின் வேறு சில பகு​தி​கள் மீதும் ஏவு​கணை​கள் விழுந்​தன.
‘ஈரான் தாக்​குதலில் இஸ்​ரேலில் இது​வரை 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​துள்​ளனர். இஸ்​ரேலின் ஹனிபா நகரில் உள்ள எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது’ என்று இஸ்​ரேல் அரசு வட்​டாரங்​கள் கூறின. ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் அந்த நாட்​டின் அணுசக்தி தலை​மையகம் உள்​ளது. இதை குறி​வைத்து இஸ்​ரேல் ட்ரோன்​கள் நேற்று தாக்​குதல் நடத்​தின. இதில் அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. தெஹ்​ரான், பூசெகர் பகு​தி​களில் உள்ள எண்​ணெய் வயல்​கள் மீது இஸ்​ரேலின் ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்​தின. இதில், எண்​ணெய் வயல்​கள் தீப்​பிடித்து எரிந்​தன. ஈரானின் ராணுவ முகாம்​கள் உட்பட 150 இடங்​களை குறி​வைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள், ட்ரோன்​கள் தாக்​குதலை நடத்​தின.

‘இஸ்​ரேல் ராணுவ தாக்​குதலில் ஈரான் முழு​வதும் இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். இஸ்​ரேல் தொடர்ச்​சி​யாக தாக்​குதல் நடத்​து​வ​தால், மெட்ரோ ரயில் நிலை​யங்​கள், சுரங்​கப் பாதைகளில் பாது​காப்​பாக இருக்​கு​மாறு மக்​களை அறி​வுறுத்தி உள்​ளோம்’ என்று ஈரான் அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறும்​போது, ‘‘இஸ்​ரேலுக்கு எதி​ராக ஒட்​டுமொத்த முஸ்​லிம் நாடு​களும் ஓரணி​யில் திரள வேண்​டும். அப்​போது​தான் இஸ்​ரேலின் சதி​களை முறியடிக்க முடி​யும். அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு நாங்​கள் ஒரு​போதும் அடிபணிய மாட்​டோம்’’ என்று உறுதிபட தெரி​வித்​தார்.

இஸ்​ரேல் ராணுவம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘ஈரான்மக்​களுக்கு எதி​ராக நாங்​கள் போரிட​வில்​லை. ஈரானின் கொடுங்​கோல் ஆட்​சிக்கு எதி​ராகவே போரிடு​கிறோம். ஈரான் ராணுவ முகாம்​களுக்கு அரு​கில் வசிக்​கும் மக்​கள் பாது​காப்​பான இடங்​களுக்கு செல்​லு​மாறு கேட்​டுக் கொள்​கிறோம்’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘இஸ்​ரேல் – ஈரான் இடையி​லான போர் தீவிரமடைந்து வரு​கிறது. இதனால், மத்​திய கிழக்கு நாடு​களில் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. ஈரானுக்கு பக்​கபல​மாக ரஷ்​யா, சீனா, வடகொரி​யா, துருக்கி உள்​ளிட்ட நாடு​கள் அணிவகுத்​துள்​ளன. இஸ்​ரேலுக்கு ஆதர​வாக அமெரிக்கா​வும், ஐரோப்​பிய நாடு​களும் ஓரணி​யில் திரண்​டுள்​ளன. இந்த சூழலில், இஸ்​ரேல் – ஈரான்​ இடையே போர்​ நீடிப்​பது, மூன்​றாம்​ உலகப்​போருக்​கு வித்​திடும்​’’ என்​று அச்​சம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை: இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப், வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை. மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தினால், எங்கள் முழுபலத்தோடு ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம். மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்கும். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். நைல் நதி விவகாரத்தில் எகிப்து – எத்தியோப்பியா இடையே சமரசம் ஏற்படுத்தினேன். அதேபோல, இஸ்ரேல் – ஈரான் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தி போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எங்களால் முடியும். இஸ்ரேல் – ஈரான் இடையே பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. மத்திய கிழக்கை மீண்டும் வலுப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

டி.என்.பி.எஸ்.சி. பதவி உயர்வில் சமூகநீதி – குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

டி.என்.பி.எஸ்.சி. பதவி உயர்வில் சமூகநீதி: குழு அமைப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் G.M.அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துளார். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதற்கட்டமாக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று திறக்கப்பட்டுள்ள நீரின் மூலம் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் கோவைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சேலத்தில் ஸ்டாலின் நேற்று மாலை 5 மணியளவில் சேலம் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, பவானி – மேட்டூர் எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து நவப்பட்டியில் உள்ள நீர்வளத்துறை ஆய்வு மாளிகை வரை 11 கி.மீ. தூரம் வாகனத்தில் பயணித்தபடியே பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்

Read More
இந்தியாதமிழ்நாடு

விமான விபத்தில் உயிர் பலி ஏன்? உள்துறை அமைச்சர் விளக்கம்

குஜராத் மாநிலம்
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்
, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை தேசிய பாதுகாப்பு படையினர் மீட்டனர். விமான விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமானம் மூலம் டெல்லியிலிருந்து குஜராத் சென்றார். விபத்து நடந்த இடத்திற்கு சென்ற அமித் ஷ விமானத்தின் நொறுங்கிய பாகங்களை பார்வையிட்டார். சேதமடைந்த பி.ஜே மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்திலும் ஆய்வு செய்தார்.
பின்னர் விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அமித் ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, நினைத்துப் பார்க்க முடியாத இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்று கூறினார். டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்குப் பின்னரே இறந்த அனைத்து பயணிகளையும் முறையாக அடையாளம் காண முடியும் என்று தெரிவித்தார். விமான விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தனது தொழில் வாழ்க்கையில் மிக மோசமான நாள் என்று வேதனை தெரிவித்துள்ள டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை ஏற்பதாகவும், விபத்தில் சேதமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டித் தரப்படும் எனவும் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், ஐ.நா தலைவர் அண்டோனியா குட்டரெஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விமான விபத்தை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் செல்கிறார். அப்போது, விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.

Read More
இந்தியாதமிழ்நாடு

The Supreme Court has given a landmark judgment yesterday (June 10) regarding the establishment of ownership of a property.

The Supreme Court has given a landmark judgment in a case related to the ownership of properties.
The Supreme Court has given a landmark judgment yesterday (June 10) regarding the establishment of ownership of a property. The Supreme Court has categorically stated that a person cannot become the absolute owner of the property just by possessing the title deeds.
The Supreme Court has said that the registration documents are only considered as an additional proof and that many more documents are required for the absolute ownership of the property.
What is required for absolute ownership? Mere registration documents are not enough to fully use a property or transfer it to someone else. On the contrary, it is the complete possession of all the documents related to that property that will recognize a person as the legal owner of that property.
Registration details: Documents available with the local government office regarding the survey numbers of the property and in whose name the ownership of the particular property is registered.
Sale details: If the property is being transferred by selling it, details of how much it is being sold (Sale Agreement). Conditions of sale, signatures of the sellers and buyers, signatures of witnesses.
Legal expenses: Proof of payment of stamp duty, including registration documents: Registration documents carried out at the registry office.
Title certificate: A certificate of ownership issued by the registry office after all these are completed.
No Objection Certificate (NOC): A certificate of no objection that there is no bank loan or any other issue pending on the specific property.
Property tax documents: Documents for payment of property tax for the specific property.
Government office certificate: A final certificate submitted to the government office containing details of the ownership of the property.
The Supreme Court has clarified that only if all these documents are complete, can a property be considered to be legally transferred to another.

Read More