yogaday

இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சர்வதேச யோகா தினம் 2025-எந்த நேரத்தில் யோகா செய்வது நல்லது…

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதன் விளைவாக 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
யோகா என்பது சுவாசக் கட்டுப்பாடு மற்றும் தியானம் உள்ளிட்ட பல நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு பழமையான அதே சமயம் பாரம்பரியமிக்க உடற்பயிற்சி ஆகும். வழக்கமான அடிப்படையில் தினசரி யோகா செய்வதால் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
ஆனால் நீங்கள் யோகாவின் நன்மைகளை பெற இந்த பயிற்சியை காலை அல்லது மாலை எப்போது செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா? யோகாவை எப்போது செய்தால் என்ன பலன் ஒன்று தானே என்றும் சிலர் யோசிக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களில் யோகா பயிற்சியில் ஈடுபடுவது தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. மேலும் எந்த நேரத்தில் யோகா செய்தால் சிறந்த நன்மைகள் கிடைக்கும் என்பது உங்கள் உடல் மற்றும் தினசரி அட்டவணையை பொறுத்தது.
யோகா குருவும் அக்ஷர் யோகா கேந்திராவின் நிறுவனருமான அக்ஷரின் கூற்றுப்படி, “ உங்கள் காலை நேரத்தை யோகாவுடன் தொடங்குவது உடலில் இருக்கும் தசை குழுக்களை (muscle groups) செயல்படுத்தவும், முழு உடலை உற்சாகப்படுத்த மற்றும் மனதை மகிழ்ச்சியாக வைக்க உதவும் ஒரு சிறந்த வழி. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் முழுமையான மற்றும் உற்சாகமூட்டும் பயிற்சியை வழங்கும் செயலாக கருதப்படுகிறது. இது நாள் முழுவதும் நீங்கள் விழிப்பு மற்றும் கவனத்துடன் இருப்பதை உறுதிசெய்கிறது. எனவே இதன் காரணமாக உங்கள் உற்பத்தித்திறனும் சிறப்பாக இருக்கும். ஆனால் இரவு நீண்ட நேரம் நீங்கள் அசையாமல் படுத்து தூங்கி எழுவதன் காரணமாக நல்ல வார்ம்-அப் மூலம் யோகா அல்லது சூரிய நமஸ்கரம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பொருள் முதலில் நீங்கள் ஸ்ட்ரெச் பயிற்சிகளில் கூடுதல் கவனமுடன் அதே சமயம் மென்மையாக ஈடுபட வேண்டும்.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, மேலும் 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 2025 சர்வதேச யோகா தினம் அதன் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. யோகா தின முன்மொழிவுக்கு 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தன
யோகா செய்வதால் மனநலன்கள்

யோகா செய்வதால் உடல் நலன் தவிர மனநலன் சிறப்பாக நிர்வகிக்க முடியும். யோகா மன அழுத்தத்தைசமாளிக்க உதவுகிறது. மனச்சோர்வு உடல் மற்றும் மனதில் பேரழிவு விளைவுகளை உண்டு செய்கிறது. எந்த சிக்கலான சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை யோகா பயிற்சி அளிக்கிறது.

கவனத்தை ஒருங்கிணைக்கிறது

யோகா செய்வது கவனத்தை கூர்மைப்படுத்துகிறது. ஒருங்கிணைந்த கவனத்தை அளிக்கிறது. தியானம் செய்வது அலைபாயும் மனதை நேர்மறைக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் மேன்மையான செயல்பாடுகள் மூலம் வெற்றியை ருசிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் தோரணை பயிற்சிகள் மூலம் உட்கார்ந்த வாழ்க்கை முறை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது. யோகாசனம் செய்வது உடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. விறைப்பை குறைக்கிறது. மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கிறது. உடலுக்கு வலிமையையும் நெகிழ்வ்த்தன்மையும் அளிக்கிறது.

ஒழுக்கம் மற்றும் நினைவாற்றல்

பதஞ்சலி யோக சூத்திரங்களில் எழுதப்பட்ட யம மற்றும் நியம செயல்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் நினைவாற்றலையும் அதிகம் பெற முடியும்.

Read More