kubera

சினிமாதமிழ்நாடு

தனுஷின் ‘குபேரா’ படம்-விமர்சனம்

பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளது குபேரா திரைப்படம். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சார் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷின் இரண்டாவது தெலுங்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் யாசகம் பெறுவோராக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், முதலில் படம் 3 மணி 15 நிமிடங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இதனை 3 மணி 2 நிமிடங்களாக படக் குழுவினர் குறைத்துள்ளனர். இந்தப் படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “2025-ம் ஆண்டுக்கான சிறந்த படங்களில் ஒன்று ‘குபேரா’. நல்ல எமோஷனல் ட்ராமா” என தெரிவித்துள்ளார்.
தனுஷ் சிறப்பாக இந்தப் படத்தில் நடித்திருப்பதாகவும், இன்னும் படத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியின் நேரத்தை இன்னும் கூட குறைத்திருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார் ஒருவர்.
பிச்சைக்காரர்களை பினாமியாக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மணி லாண்டரிங் செய்யும் கதையில் முக்கிய வில்லனாக நடித்துள்ள ஜிம் சர்ப் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அதே சமயம் படத்தின் கிளைமேக்ஸில் சில சறுக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. தனுஷின் குபேரா படத்தின் பிளஸ், மைனஸ் உள்ளிட்டவை அடங்கிய முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

குபேரா கதை: மிகப்பெரிய தொழிலதிபராக வரும் நீரஜ் முதல் காட்சியிலேயே இந்தியாவுக்கு எண்ணெய் வளம் கிடைப்பதை தெரிந்துக் கொள்கிறார். அதை மக்களுக்கு தெரிவிக்காத வகையில், அரசியல் தலைவரான ஹரிஷ் பெரடியுடன் கூட்டு சதி செய்து, கொள்ளையடிக்கிறார். அதற்காக அரசியல் தலைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பெரிய தொகையை சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தீபக் (நாகார்ஜுனா) மூலம் கொடுக்க திட்டம் போடுகிறார். தீபக் பினாமிகளாக பிச்சைக்காரர்களை வைத்து இந்த டீலை முடித்துக் கொடுக்கிறேன் என வர, திருப்பதியில் இருந்து தேவா (தனுஷ்), மற்ற ஊர்களில் இருந்து குஷ்பு, திவ்யா மற்றும் இன்னொரு நபர் என 4 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பிச்சைக்காரர்களை குளிப்பாட்டி, கோட் சூட் மாட்டி அவர்கள் பெயரில் பொய்யாக நிறுவனங்களை உருவாக்கி பல கோடி மதிப்புமிக்கவர்களாக மாற்றி, பணம் கைமாறிய உடனே பிச்சைக்கார்கர்கள் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்டப்படுகின்றனர். இதிலிருந்து, தேவா எப்படி தப்பிக்கிறார், அவருடன் சமீரா (ராஷ்மிகா மந்தனா) எப்படி சிக்கிக் கொள்கிறார். கடைசியில் கிளைமேக்ஸில் என்ன ஆகிறது என்கிற பரபரப்பான கதையை குபேரா படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.
படம் எப்படி இருக்கு?: தனுஷூக்கு இது லைஃப் டைம் செட்டில்மென்ட் ரோல் என்று சொல்லலாம். ஏற்கனவே பல படங்களில் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்துள்ள தனுஷ், இந்த படத்திலும் அதை மீண்டும் செய்திருக்கிறார். தேசிய விருது கொடுக்கும் அளவுக்கான நடிப்பை அசால்ட்டாக நடித்துக் காட்டி பல இடங்களில் ரசிகர்களை கை தட்டவும் விசில் அடிக்கவும் செய்கிறார். பிச்சைக்காரனாக இருந்தாலும், நாங்களும் இந்த உலகத்தின் மனிதர்கள் தானே என்றும் இறந்தவர்களை நாய் வண்டியில் ஏற்றாதீர்கள், கட்டை வைத்து எரித்தால் தான் மீண்டும் பிச்சைக்காரனாக பிறக்க மாட்டார்கள் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் கண் கலங்க வைத்து விடுகிறார்.

படம் தொடங்கியதும் மைய கதைக்குள் செல்வது சிறப்பாக உள்ளது. ஜிம் சர்ப் எப்படிப்பட்ட வில்லன் என்பதையும் அவருடைய இலக்கு என்ன என்பதையும் விளக்கிவிடுகிறார் இயக்குநர். அதன் பின்னர், பொய்யான லஞ்ச குற்றச்சாட்டுக்காக சிறையில் 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் நாகார்ஜுனாவை தனது வேலைக்காக அவர் பயன்படுத்தும் விதம், மனைவி சுனைனா மற்றும் மகளுக்காக இந்த தப்பான வேலையை தேர்வு செய்து நாகார்ஜுனா பயணிக்கும் விதம், நாகார்ஜுனாவிடம் இருந்து தப்பிக்கும் தனுஷை அவர் துரத்த எடுக்கும் நடவடிக்கைகள், கடைசியில் தனுஷ் பக்கம் நிற்க அவர் போராடுவது என மனுஷன் மாஸ் கிங்காக எல்லாம் நடிக்காமல், நடிப்பு கிங்காக படம் முழுக்க பயணித்துள்ளார்.

Read More