subanshisukla

இந்தியாஉலகம்தொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று மாலை சென்றடைகிறார் சுபான்ஷூ சுக்லா

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு இந்தியா செயல்படுத்த உள்ளது. இதற்கு பல்வேறு வகையில் உதவ உள்ள பயணம் தான் ஆக்சியம் 4. நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில், இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல ஆயத்தமாகினர்.
பல்வேறு காரணங்களால், 6 முறை ஆக்சியம் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்திய நேரப்படி பிற்பகல் 12.01 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினருடன் பால்கன் 9- ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமாக புவி சுற்று வட்டப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கும் திரும்பியது.
ராகேஷ் சர்மாவுக்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, மூவண்ணக் கொடியுடன் பயணிப்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார். சர்வதேச விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், பயணத்தை தொடங்கும் முன்பு தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு மனதை இலகுவாக்கி கொண்டனர். இதில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஷாருக்கானின் ஸ்வதேஸ் பட பாடலை கேட்டு ரசித்தார்.

இந்நிலையில், சுபான்ஷூ சுக்லாவின் சர்வதேச விண்வெளி பயணத்தை, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அவரது குடும்பத்தினர் பெருமிதத்துடன் கண்டு களித்தனர். சுபான்ஷூ சுக்லாவின் தந்தை மற்றும் தாய் உணர்ச்சி வயப்பட்ட நிலையில், சுபான்ஷூவின் இரண்டு சகோதரிகளும் அவர்களை அரவணைத்து ஆனந்தக் கண்ணீரை துடைத்து விட்டனர். இதே போன்று டெல்லியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா தூதருடன் சர்வதேச விண்வெளி பயணத்தை காணொலி மூலம் கண்டு களித்தார்.
advertisement
ஃபால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம், ,இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர். இதில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா மட்டும் 7 ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்.
விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ராகேஷ் சர்மா ஆக்சியம் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், அதிக நேரம் ஜன்னல் வழியாக பாருங்கள் என அவர்களுக்குக் கூறியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று மாலை சென்றடைகிறார் சுபான்ஷூ சுக்லா

Read More