Author: Namadhu Arasu

இந்தியாஉலகம்வணிகம்

வரி விதிப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் குறித்து ட்ரம்ப் விமர்சனம்: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி ஆலோசனை

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது மட்டுமின்றி, தாமிரம் மற்றும் அது தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் தாமிர பொருட்களின் விலை அதிகரித்து, இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
2024-25 நிதி ஆண்டில் 360 மில்லியன் டாலர் மதிப்பிலான தாமிர பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தனது சமூக வலைதள பதிவில், ‘பாகிஸ்தானுடன் இப்போதுதான் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை உருவாக்க இருக்கிறோம். இது தெற்காசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இதற்காக தகுதியுள்ள எண்ணெய் நிறுவனங்களை தேர்வு செய்து வருகிறோம். யாருக்கு தெரியும், ஒருநாள் பாகிஸ்தானிடம் இருந்துகூட இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயானை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இரு நாட்டு மக்களின் பொதுவான நலனுக்காக இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தனர்.

இந்தியாவில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்த 2-வது நபர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். அவரது சேவை தொடர வேண்டும் என்றும் அல் நயான் வாழ்த்தினார் என மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்த நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் வர்த்தக வரி குறித்து ஐக்கிய அரபு
அமீரக அதிபருடன், பிரதமர் மோடி பேசி இருக்கலாம். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சில முக்கிய வியூகங்களை வகுக்கும் வகையிலும் பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறின.

மக்களவையில் அமைச்சர் விளக்கம்: இதற்கிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பு தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:

உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடின உழைப்பு மற்றும் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்த சாதனை சாத்தியமானது.

உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக சர்வதேச நிதி அமைப்புகள், சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பொருளாதார ரீதியாக நாட்டின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியா – அமெரிக்கா இடையே பலசுற்றுபேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 10-15 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆகஸ்ட் 25-ல் பேச்சுவார்த்தை: வரி விகிதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் உயர்நிலை குழு ஆகஸ்ட் 25-ம் தேதி டெல்லி வருகிறது. அப்போது கருத்து வேறுபாடுகள் களையப்படும். அதன்பிறகு, இந்திய உயர்நிலை குழு வாஷிங்டன் செல்லும்.

இந்திய தரப்பில் மூத்த பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் அகர்வாலும், அமெரிக்க தரப்பில் பிரென்டனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அக்டோபர் அல்லது நவம்பரில் அமெரிக்காவுடன் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கடந்த ஜூலையில் தென்கொரிய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த வரியை 15 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. இதேபோல, இந்திய பொருட்கள் மீதான வரியையும் அமெரிக்க அரசு நிச்சயமாக குறைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல்.. அமெரிக்காவின் அறிவிப்பால் அடுத்து என்ன…

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல்.. அமெரிக்காவின் அறிவிப்பால் அடுத்து என்ன…

நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரியுடன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், இந்த வரி விதிப்புக்கான கெடுவை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் பால் பொருட்கள் துறையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், புதிய வரிவிதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பணமற்ற வர்த்தகத் தடைகளை இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கி வருவதாகவும், உக்ரைனில் போரை நிறுத்த முயலும் உலக அணுகுமுறைக்கு எதிராக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயையும் இந்தியா பெறுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக ஆகஸ்ட் ஒன்று முதல் இந்திய பொருட்களுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளர்
இந்நிலையில், டெல்லியில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் கவனத்துடன் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் பலன் தரும் வகையில் சமநிலையிலான ஒப்பந்தம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாக இருந்ததாகவும் விவசாயிகள், தொழில்முனைவோர்,சிறுகுறு தொழில்களின் நலனை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் செல்போன்கள், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, மருந்துப் பொருட்கள், வைரம் உள்ளிட்டவைகளின் விலை உயர உள்ளது. அதேநேரம், தோல், கிரானைட் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்தார். இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்பது குறித்து இந்த வார இறுதிக்குள் தெரியவரும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

Read More
சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஆடியோ லாஞ்ச்ல பாத்துக்கிறேன்-ரஜினி,மாட்டிக் கொண்ட லோகேஷ்

தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் கூலி திரைப்படமும் ஒன்று. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்து உள்ளார். இப்படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி பட கதையை சொல்லும் முன் ரஜினியிடம் தான் ஒரு கமல் ரசிகன் என்று சொன்னாராம். அதற்கு ரஜினி ரிப்ளை கொடுத்திருக்கிறார்.உன்ன ஆடியோ லாஞ்ச்ல பாத்துக்கிறேன்… வாய்விட்டு மாட்டிக் கொண்ட லோகேஷ்; வச்சு செய்ய காத்திருக்கும் ரஜினி

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்

தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் தீவிரமடைகிறது

தாய்லாந்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தா முயென் தாம், தா முயென் டோட், தா குவாய் ஆகிய 3 இந்து கோயில்கள் உள்ளன. இவை 12-ம் நூற்றாண்டு கோயில்கள் ஆகும். எல்லைப் பகுதியில் உள்ள இந்த கோயில்களை கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது.கம்போடியா, தாய்லாந்து எல்லையில் டாங்கிரெக் மலையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற சிவன் கோயிலை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடின. இதுதொடர்பாக கடந்த 1959-ம் ஆண்டில் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தை நாடின. கடந்த 1962-ம் ஆண்டில், பிரியா விகார் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை ஏற்றுக் கொள்ளாத தாய்லாந்து, இந்த கோயில் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று இன்றுவரை கூறி வருகிறது.தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அமைந்துள்ளது. இதன் அண்டை நாடு கம்போடியா இரு நாடுகளும் 817 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பண்டைய காலத்தில் முதலாம் ராமா மன்னரால் தோற்றுவிக்கப் பட்ட ரத்தனகோசின் பேரரசு தாய்லாந்தை ஆட்சி செய்தது. இதே போல இரண்டாம் ஜெயவர்மன் மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட கெமர் பேரரசு கம்போடியாவை ஆட்சி செய்தது. இந்து மதத்தைப் பின்பற்றிய ரத்தனகோசின், கெமர் பேரரசுகள் தங்களது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோயில்களை கட்டின. தற்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சினை எழுந்து போராக வெடித்திருக்கிறது.
இந்த சூழலில் கடந்த 24-ம் தேதி தா முயென் தாம் கோயில் வளாகத்தில் கம்போடிய ராணுவத்தின் ட்ரோன்கள் பறந்ததாகவும், கம்போடிய ராணுவ வீரர்கள் கோயிலை நோக்கி முன்னேறியதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக தாய்லாந்து, கம்போடிய ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மிகக் கடுமையான பீரங்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.

கடந்த 25-ம் தேதி தாய்லாந்து, கம்போடியா எல்லையின் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல் வெடித்தது. கம்போடியாவின் 7 இடங்களை குறிவைத்து தாய்லாந்து போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மூன்றாவது நாளாக இருநாடுகளுக்கும் இடையே நேற்றும் அதிதீவிரமாக போர் நடைபெற்றது.

கடந்த 3 நாட்கள் போரில் தாய்லாந்தில் 6 ராணுவ வீரர்கள், 14 பொதுமக்கள் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். கம்போடியாவில் 5 ராணுவ வீரர்கள், 8 பொதுமக்கள் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர். இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். எல்லைப் பகுதிகளில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாய்லாந்து, கம்போடியா இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மலேசியாவின் சமரசத்தின்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை சண்டை நிறுத்தம் அமல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தாய்லாந்து ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி செயல்படுவதாக கம்போடியா குற்றம் சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் இரு நாடுகள் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்கா, சீனா மறைமுக போர் – சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்க ஆதரவு நாடான தாய்லாந்துக்கும் சீன ஆதரவு நாடான கம்போடியாவுக்கும் இடையே போர் மூண்டு உள்ளது. ராணுவ பலத்தை ஒப்பிடும்போது தாய்லாந்து மிகவும் வலுவாக இருக்கிறது. அமெரிக்காவின் எப்16 போர் விமானங்கள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் அந்த நாட்டிடம் உள்ளன. ஆனால் கம்போடியாவிடம் போர் விமானங்களே கிடையாது. சீன தயாரிப்பு ட்ரோன்கள் மற்றும் சீன, ரஷ்ய தயாரிப்பு பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தி வருகிறது.

தற்போது கம்போடியாவின் சிகனுவோக்வில்லே பகுதியில் உள்ள கடற்படை தளத்தை சீன ராணுவம் புதுப்பித்து கொடுத்துள்ளது. அங்கு சீன போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் கம்போடியாவின் அங்கோர் சர்வதேச விமான நிலையம், தலைநகர் நாம்பென்னில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை சீன நிறுவனங்கள் புதுப்பித்து கொடுத்துள்ளன. இந்த விமான நிலையங்களை சீன தரப்பு ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் தாய்லாந்து, கம்போடியா இடையே நடைபெறும் போர், அமெரிக்கா, சீனா இடையிலான மறைமுக போர் ஆகும். இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“தமிழ்நாட்டிற்கு ரூ. 3 லட்சம் கோடி.. காங்கிரஸைவிட 3 மடங்கு அதிக நிதி கொடுத்திருக்கிறோம்” – பிரதமர் 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்” என பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் பேசினார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் நினைவுப் பரிசை வழங்கினார்.
தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத் திறப்பு விழாவிற்கு வெள்ளை வேட்டி, சட்டை அணிந்துவந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத்தைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, “நான்கு நாள் அயல்நாட்டுப் பயணத்திற்குப் பிறகு நேரடியாக பகவான் ராமேஸ்வரனின் மண்ணில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. பகவான் ராமேஸ்வரன், திருச்செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு தூத்துக்குடி வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.
உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி இவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு போன்றவை. இந்த 11 ஆண்டுகளில் இந்தத் துறைகளின் மீது செலுத்தப்பட்ட கவனம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நமக்கு முதன்மையானது என்பதை காட்டுகிறது.
இதே மண்ணில் தான் வா.உ.சி. போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டு இருந்த காலத்திலேயே கடல் வழி வாணிபத்தின் சக்தியை புரிந்துகொண்டவர் அவர். காசி தமிழ் சங்கம் போன்ற ஏற்பாடுகள் மூலம் நம் கலாச்சார மரபுகளை வளர்த்துவருகிறோம். தூத்துக்குடியின் முத்துகளை பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிய நாட்டு முத்துக்கள் உலகம் முழுக்க பாரதத்தின் பொருளாதார வல்லமையின் அடையாளமாக இருந்துவந்தது.
இன்று பாரதத்தின் வளர்ச்சியில் உலகம் தனது வளர்ச்சியை காண்கிறது. உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் நமது வேகம் இன்னும் வேகமளிக்கப்போகிறது. இங்கிலாந்து ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்கப்படும் 99% பாரதத்தின் பொருட்கள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது. விலை மலிவாகவும், தேவை அதிகமாகவும் அங்கு இருக்கும். இங்கு அந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் நமது இளைஞர்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.
மேக் இன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம். இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்கும் அரசு வலு சேர்க்கிறது. ஆபரேஷன் சிந்துரின்போது, மேக் இன் இந்தியாவின் வலுவை பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை அழித்ததில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதத்தின் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை தூங்கவிடாமல் செய்கிறது.
தூத்துக்குடி புது முனைய திறப்புக்கு பிறகு தமிழ்நாட்டின் பெரும் நிறுவனங்கள், உடல்நல கட்டமைப்புகள், கல்வி ஆகியவற்றுக்கு வலு கிடைக்கும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சாலை ஆகியவற்றையும் சிறப்படைய செய்யும். அதுமட்டுமின்றி, வர்த்தகம் வேலை வாய்ப்பு ஆகியவையும் அதிகரிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்.
இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்றுவருகிறது. தற்சார்பு இந்தியாவின் உயிர் நாடியாக இந்திய ரயில்வே உள்ளது. 11 ஆண்டுகளில் ரயில்வே நவீனமயமாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளோம். வந்தே பாரத் ரயில்கள் வரிசையில் தமிழ்நாடு மக்களுக்கு புது அனுபவம் கிடைத்துவருகிறது. தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம்; பாம்பன் பாலம் கூட தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை போட்டிநாயக்கநல்லூர் மின்சார ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதன் மூலம், வந்தே பாரத் ரயில் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு வளர்ச்சி, மேம்படுத்த தமிழ்நாடு ஆகியவையே நமது முக்கிய உறுதிப்பாடு. நாங்கள் தமிழ்நாடு வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என பேசினார்.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்

தனுஷின் ‘அம்பிகாபதி’ ரீ-ரிலீஸ் சர்ச்சை!‘ஏஐ’ க்ளைமாக்ஸ் 

தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘ராஞ்சனா’. இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வெளியானது.
படம் இருமொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பார்வையாளர்களை திரையரங்குக்கு வர வைக்கும் வகையில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஏஐ தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட்டது குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது படத்தின் க்ளைமாக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால் ஏஐ துணையுடன் அவர் மீண்டும் உயிர்பெற்று வருவது போல க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் கண்டனம் தெரிவித்தார். படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், படத்தின் ஆன்மாவை சிதைக்கும் செயல் என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தார். இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் இந்த புதிய பதிப்பு முந்தைய படைப்பின் மாற்றமல்ல, கலையின் புது வடிவம் மட்டுமே என விளக்கமளித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள Eros Media World குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “‘அம்பிகாபதி’ (Raanjhanaa) திரைப்படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. அதனால், நாங்கள் சட்டப்பூர்வமாக இதைப் புதுப்பித்து வெளியிட அதிகாரம் பெற்றுள்ளோம்.
முன்னோடியான தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்து, புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில், ஒரே நேரத்தில் அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது ‘புதிய பதிப்பாக’ தனியாகவும், தெளிவாகவும் குறியிடப்பட்டுள்ளது – இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, ஒட்டுமொத்தத்தை மாற்றுவதுமல்ல. இது ஒரு கலையின் புதிய வடிவம்.
இது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், புதிய தொழில்நுட்பங்களைக் கலையுடன் இணைக்கும் முயற்சியாகவும் பார்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கமல்ஹாசன், உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பிக்கள் இன்று பதவியேற்பு…

தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் உட்பட ஆறு மாநிலங்களவை எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, வில்சன், அன்புமணி ராமதாஸ், சண்முகம், என். சந்திரசேகரன், முகமது அப்துல்லா, ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி, இந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் திமுகவை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக சார்பில் களமிறக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வானார்கள். அதேபோல அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் உட்பட ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களும் இன்று பதவியேற்க உள்ளனர். முன்னதாக நேற்று பதவிக்காலத்தை நிறைவு செய்த வைகோ, அன்புமணி ராமதாஸ் உட்பட 6 எம்.பிக்களுக்கும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

PF விதிகளில் முக்கிய மாற்றம்..

மாத வருமானம் பெறும் நபர்கள் தங்களுடைய PF அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு இனியும் பணி ஓய்வு பெறும் வரையோ அல்லது வேலையை இழக்கும் வரையோ காத்திருக்க தேவையில்லை. EPFO நிறுவனம் அளித்த பரிந்துரையின் பெயரில், PF பணத்தை வித்டிரா செய்வதற்கான விதிகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்டால். இனி வரும் காலத்தில் சப்ஸ்க்ரைபர்கள் தங்களுடைய EPF பணத்தை முழுமையாகவோ அல்லது 10 வருடங்களுக்கு ஒருமுறையோ பிரித்து எடுப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இப்போது உள்ள சூழ்நிலையில் EPF மெம்பர்கள் தங்களுடைய முழு PF பணத்தையும் பணி ஓய்வுக்குப் பிறகு மட்டுமே எடுக்க முடியும். இது வழக்கமாக 58 வயதில் அவர்களுக்கு கிடைக்கிறது. ஒருவேளை தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் அவர்கள் வேலை இல்லாமல் இருந்தால் EPF பணத்தை வித்டிரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் வீடு வாங்குவது, மருத்துவ செலவு, கல்வி அல்லது திருமணம் போன்ற குறிப்பிட்ட சில காரணங்களுக்கு PF தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை வித்டிரா செய்து கொள்ளலாம்.
இந்த மாதம் முதலில் இருந்து EPF மெம்பர்கள் தங்களுடைய சேமிப்புகளில் 90% பணத்தை நிலம் வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு வித்டிரா செய்து கொள்ளலாம். முன்னதாக, EPF அக்கவுண்டில் தொடர்ச்சியாக 5 வருட காலத்திற்கு பங்களித்தவர்களுக்கு மட்டுமே இந்த பலன் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது இதற்கான தகுதி என்பது வெறும் 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தங்களுடைய சேமிப்புகளை வீடு வாங்குவதற்கு பயன்படுத்துவது மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக EPF வித்டிரா எப்படி இயங்கியது?
பின்வரும் காரணங்களுக்காக மட்டுமே EPF மெம்பர்கள் முழு PF தொகையையும் வித்டிரா செய்யும் வகையில் இருந்தது.
பணி ஓய்வுக்கு பிறகு 58 வயது
உறுப்பினர் தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால்
PF தொகையில் ஒரு பகுதியை பின்வரும் காரணத்திற்காக வித்டிரா செய்து கொள்ளலாம்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள EPF விதி என்ன?
இப்போது தொடர்ச்சியாக 3 வருட காலம் PF அக்கவுண்டில் பங்களித்த மெம்பர்கள் தங்களுடைய EPF பேலன்ஸில் இருந்து 90 சதவீத தொகையை வித்டிரா செய்து கொள்ளலாம். முன்னதாக, இது 5 வருடமாக இருந்தது. அது மட்டுமல்லாமல், அட்வான்ஸ் கிளைம் செய்வதற்கான உச்சவரம்பு என்பது 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக முன்கூட்டிய அப்ரூவல் இல்லாமல் பணத்தை விரைவாகவும் எளிமையாகவும் வித்டிரா செய்து கொள்ளலாம்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

சென்னையில் பார்க்கிங் கட்டணம் கிடையாது… இன்று முதல் அமல்- ஒப்பந்தம்!முடிவு…

சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு முக்கியத் தெருக்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த சேவை நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
சென்னையில் பார்க்கிங் கட்டணம் இன்று முதல் கிடையாது
தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது
பார்க்கிங் கட்டணத்தில் முறைகேடு நடப்பதாக புகார்
சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு முக்கியத் தெருக்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த சேவை நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
சென்னையில் பார்க்கிங் கட்டணம் இன்று முதல் கிடையாது
தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது
பார்க்கிங் கட்டணத்தில் முறைகேடு நடப்பதாக புகார்
சென்னை மாநகரில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கான ஒப்பந்தம் Texco என்ற தனியார் நிறுவனத்திடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்திருந்தது. இந்த சூழலில் வாகனங்களை பார்க்கிங் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பார்க்கிங் கட்டணத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் சென்னை மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் கூறுகையில், ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிப்பது தான் சரி. ஆனால் ஒப்பந்த நிறுவனம் மூலம் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய் வரை வசூலித்தனர். அதுமட்டுமின்றி ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதில்லை. மோசமான வகையில் பேசுகின்றனர். பார்க்கிங் கட்டண ரசீதுகளும் சரியாக கொடுப்பதில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்ததாக குறிப்பிட்டார். இந்நிலையில் தான் Texco நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் கூறுகையில், ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிப்பது தான் சரி. ஆனால் ஒப்பந்த நிறுவனம் மூலம் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய் வரை வசூலித்தனர். அதுமட்டுமின்றி ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதில்லை. மோசமான வகையில் பேசுகின்றனர். பார்க்கிங் கட்டண ரசீதுகளும் சரியாக கொடுப்பதில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்ததாக குறிப்பிட்டார். இந்நிலையில் தான் Texco நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர் கூறுகையில், ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிப்பது தான் சரி. ஆனால் ஒப்பந்த நிறுவனம் மூலம் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய் வரை வசூலித்தனர். அதுமட்டுமின்றி ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதில்லை. மோசமான வகையில் பேசுகின்றனர். பார்க்கிங் கட்டண ரசீதுகளும் சரியாக கொடுப்பதில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்ததாக குறிப்பிட்டார். இந்நிலையில் தான் Texco நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை மாநகராட்சி எடுத்த முக்கிய முடிவு
இந்த மாடலின் அடிப்படையில் வாகனங்களின் உடைய நம்பர் பிளேட்டுகள் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். எந்த இடத்தில் நிறுத்த இடமிருக்கிறது என்பது தொடர்பாக வழிகாட்டும். மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்லும் போது நிறுத்தப்பட்ட நேரத்திற்கு ஏற்ப கட்டணத்தை காண்பிக்கும். இதனை ஆன்லைன் வாயிலாக செலுத்திவிடலாம். இந்த மாடலை செயல்படுத்துவதற்கு தான் சென்னை மாநகராட்சி ஆர்வம் காட்டி வருகிறது. தற்போதைக்கு சென்னை மாநகராட்சியில் அரசு தரப்பில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்பதால் பொதுமக்களின் சுமை சற்று குறைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், Texco நிறுவனத்தின் பார்க்கிங் கட்டண வசூல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தன. இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பது, பார்க்கிங் கட்டணத்தை முறைகேடான வகையில் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் தான் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இது நேற்றுடன் முடிவடைந்துவிட்டது என்று தெரிவித்தார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: 8 மசோதாக்களை அறிமுகம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில், 8 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்ட வருமான வரி மசோதா, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்யவும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நேற்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பெஹல்காம் தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீடு, பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்,பாலு தெரிவித்துள்ளார். இதே போன்று, கீழடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார். இதுபோல பல பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

Read More