Author: Namadhu Arasu

ஆன்மீகம்தமிழ்நாடு

கார்த்திகை தீபத்திருநாளில் வெகு விமரிசையாக ஏற்றப்பட்டது பரணி தீபம்.. மகா தீபம்

திருவண்ணாமலையில் திருகார்த்திகை தீபத்திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் மிக முக்கியமான விழாவாகும். இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் இன்று காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக, கோயிலின் பின்புறம் உள்ள இரண்டாயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையில், இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கு தேவையான கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில், நேற்று கொட்டும் மழையிலும் அதனை மலைக்கு கொண்டு சென்றனர்சுமார் 6 அடி உயரம் கொண்ட இந்த கொப்பரை, 350 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளான இன்று கோயிலின் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்த 7,500 பேரும் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்ட பரணி தீபத்தினை தரிசித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்..இந்நிலையில் இன்று மாலை ஏற்றப்படும் மகாதீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுள் மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க 2000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை தேர்ச்சி அடைவோருக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படவுள்ள மகா தீபத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

கூலி படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினிகாந்த், வீடியோ

இன்று தனது 74வது பிறந்தநாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பில் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..ஜெயிலர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம், “கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். தனது வித்தியாசமான மேக்கிங்கால் ரசிகர்களின் பாராட்டுகளையும், நம்பிக்கையையும் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். இதனால் அவரும் ரஜினிகாந்த் இணையும் “கூலி” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் “கூலி” படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பை டீசர் வாயிலாக படக்குழுவினர் அறிவித்தனர். இதற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில், “தங்கமகன்” படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் “வா வா பக்கம் வா” பாடல் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகைகள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பையும் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்து ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. “கூலி” படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், உபேந்திர ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இன்று ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் ரஜினி உடைய வீடியோக்கள் அதிகம் காணப்படுகிறது. மேலும் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக “கூலி” படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியின் சிறு பகுதியை படக்குழு சன் பிக்சர்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
https://youtu.be/V7BAEURmPvA?si=DTpXKcx_OLCpx-eF

Read More
தமிழ்நாடு

சென்னை மக்களே உஷார்.. ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட 3 முக்கிய ஏரிகள்..

கனமழையால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வரும் நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பிய நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், செம்பரம்பாக்கம் பகுதியில் மட்டும் நேற்று 14 செ.மீ மழை பதிவானது. இதன்காரணமாக ஏரிக்கு நேற்று காலை 743 கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், தொடர்ந்து தற்போது விநாடிக்கு 6998 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று 21.50 அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை கடந்துள்ளது.24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22 அடியை நீர்மட்டம் கடந்ததை அடுத்து நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக முதல் கட்டமாக ஐந்து கண் மதகிலிருந்து இரண்டு மற்றும் நான்கு ஆகிய செட்டர்களில் இருந்து ஆயிரம் கன அடி உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், திருநீர்மலை, வழுதலம்பேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.உபரி நீர் திறப்பதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டு நீர் திறக்கப்பட்டது.

பூண்டி ஏரி திறப்பு

இதற்கிடையே, சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் மற்றொரு ஏரியான பூண்டி ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து தற்போது 12,760 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று 5000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டியில் மொத்த உயரம் 35 அடியில் 35 அடியும் நிரம்பி வழிகிறது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை கூடுதல் நீரை திறந்துவிட்டுள்ளனர். இதேபோல், புழல் ஏரியில் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.சென்னையை சுற்றி மூன்று பகுதிகளிலும் உள்ள மிகப்பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் ஆறுகளில் நீர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த 2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதே. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியுடன், பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் நீர் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், இந்த 3 ஏரிகளிலும் நீர் திறக்கப்பட்டிருப்பதை உன்னிப்பாக கவனிக்கும் பணியில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Read More
இந்தியாஉலகம்

உலகின் பணக்கார பிச்சைக்காரர் இவர்தான்… சொத்துமதிப்பு பற்றிக் கேட்டீர்கள் என்றால் அசந்தே போவீர்கள்!

தற்போதை நிலைமையை பார்த்தால் பிச்சைக்காரர்கள் நிஜமாகவே நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆம்! நிறைய சில்லறைகளையும் நோட்டுகளையும் வைத்து எண்ணும்போது நம்மைவிட அவர்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்பது போல் இருக்கிறது.

குறிப்பாக பேருந்து நிலையங்களிலும், கோவில் வாசல்களிலும் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். அப்படித்தான் பாரத் ஜெயின் என்பவர் மும்பை பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து பிச்சை எடுப்பவர் உலகின் பணக்கார பிச்சைக்காரராக வலம் வருகிறார்.

54 வயதாகும் பாரத் ஜெயின் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுப்பதை தனது வேலையாக செய்து இன்று ரூ.7.5 கோடி சொத்து வைத்துள்ளார்.

இந்தியாவின் முக்கியமான இரு இடங்கள் மும்பை மற்றும் டெல்லி. இதில் மும்பையில் மிகவும் முக்கியமான இடங்களில் பிச்சை எடுப்பவர்தான் பாரத் ஜெயின். எப்போதும் பரபரப்பாக இருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் மற்றும் ஆசாத் மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஜெயின் பிச்சை எடுக்கிறார். 10-12 மணி நேரம் இடைவேளையின்றி ‘வேலை’ செய்து ஒரு நாளைக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிச்சை எடுப்பதன் மூலம் அவருக்கு மாத வருமானம் ரூ.60,000 முதல் ரூ.75,000.

இதையும் படியுங்கள்:
உலகின் பழைமையான, புத்திசாலியான வளர்ப்பு மிருகங்கள் எவை தெரியுமா?
Richest beggar
40 ஆண்டுகளாக மொத்தம் 7.5கோடி சம்பாதித்து வைத்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் ஜெயின். ரூ.1.4 கோடி மதிப்புள்ள 2 BHK பிளாட் வைத்துள்ள அவர் அங்கு தனது மனைவி, இரண்டு மகன்கள், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். தானேயில் இரண்டு கடைகளை வைத்துள்ள அவர் மாத வாடகையாக ரூ.30,000 சம்பாதிக்கிறார்.

மேலும் இவரது குடும்பத்திற்கு ஒரு ஸ்டேஷ்னரி கடையும் உள்ளதாம். அதன்மூலம் வருமானம் வருகிறது. இவரது மகன்கள் பெரிய கான்வென்ட் பள்ளியில் படித்தவர்கள் என்பதால், அனைத்துத் தொழில்களையும் சிறப்பாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.

மேலும் இவருக்கு கிடைக்ககூடிய பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் நன்கொடை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Richest beggar
இவரது குடும்பம் இவர் பிச்சை எடுப்பதை எதிர்த்தாலும், எந்த நேரத்திலும் இந்த தொழிலை மட்டும் விடமாட்டேன் என்று கூறுகிறார் ஜெயின்.

மும்பையில் இதுபோன்ற பணக்காரப் பிச்சைக்காரர்கள் அதிகம். 2019 இல் ரயில் விபத்தில் இறந்த பிச்சைக்காரரான புர்ஜு சந்திர ஆசாத், ரூ. 8.77 லட்சம் பிக்சட் டெபாசிட் மற்றும் சுமார் ரூ.1.5 லட்சம் ரொக்கமாக வைத்திருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின் என்பவர் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம் வருகிறார். வாருங்கள் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் பார்ப்போம்.

பிச்சை எடுக்கிறவன்லா பணக்காரனா இருக்கான் என்று சினிமாவில் ஜோக்குக்காக சொல்லி கேட்டிருப்போம். ஆனால், நிஜத்தில் இது சாத்தியமா என்று யோசிக்கும்போது “அது எப்படி சாத்தியமாகும்?” என்று கடந்துச் சென்றுவிடுவோம்

Read More
சினிமா

சொர்க்கவாசல் திரை விமர்சனம்…

ஆர்.ஜே பாலாஜி தெருவோர வண்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் சமைக்கும் உணவிற்கு என தனி ரசிகர்கள் உள்ளன. இந்த தெருக்கடையை அடுத்தக்கட்டத்திற்கு ஒரு ஓட்டலாக
மாற்ற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார் பாலாஜி. இவர் கடைக்கு எதிரில் பூக்கடை வைத்துள்ளார் கதாநாயகியான சானியா ஐயப்பன்
இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது

“வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன், காந்தி இல்லைங்க. உள்ளே போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லைங்க.” என்று மனிதன் படத்தில் ஒரு பாடல் வரி வரும். சிறையில் உள்ள கைதிகளை மையப்படுத்தி எழுதபட்ட வரிகள் இவை. விசாரணை கைதியாகவும், செய்யாத குற்றத்திற்காகவும் பல ஆண்டுகளாக இந்திய சிறைசாலையில் இருக்கும் அப்பாவிகள் பலர். இது போன்று செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லும் அப்பாவியை சிறை சூழ்நிலை எப்படி மாற்றுகிறது என்று சொல்லும் படம் சொர்க்க வாசல்.

1990 களில் சென்னை மத்திய சிறையில் கைதிகள் – சிறை காவலர்கள் உடன் நடந்த மோதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ட்ரீம்வாரியர் தயாரித்துள்ள இப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கி உள்ளார். (இப்படத்தின் கதை தான் எழுதிய கிளை சிறை என்ற கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டை முன் வைத்துள்ளார் குறும்பட இயக்குனர் கிருஷ்ணகுமார்)

Read More
தமிழ்நாடு

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நெருங்குவதால், இன்று, 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவியது.

இன்று, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம், இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரமடையும்.

தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யவும், டிச., 17 வரை மிதமான மழை தொடரும்.
அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், பெரம்பலுார், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், இன்று மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில், பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

Read More
சினிமாதமிழ்நாடு

கடவுளே அஜித் என அழைக்காதீர்கள், கவலை அளிக்கிறது – முற்றுப்புள்ளி வைத்த அஜித்

பொது இடங்களில் அஜித் ரசிகர்கள் கடவுளே அஜித் என்று சொல்லி அண்மை காலமாக டிரெண்ட் செய்து வந்த நிலையில் இதுப்போன்ற கோஷங்கள் எனக்கு கவலை அளிப்பதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சூட்டிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் விரும்பும் கார் ரேஸிங்கிலும் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கார் ரேஸிற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக மிகவும் டிரெண்டாகி வரும் வீடியோ என்றால் அது கடவுளே அஜித் என்பதாக தான் இருக்க முடியும். தியேட்டர், பொது இடங்கள் என ஆரம்பித்த இந்த கோஷம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி வரை ஒலித்தது. இன்ஸ்டாவிலும் இந்த வீடியோவை வைத்து பல ரீல்ஸ்களுக்கு லைக் குவிந்து வருகிறது.

தல என்று ரசிகர்கள் அழைப்பதையே ஏற்காத அஜித், கடவுளே என்று அழைப்பதை எப்படி அவர் ஏற்பார். வாழு, வாழ விடு என்று எப்போது தனக்கென பாதையில் நடந்து வரும் தற்போது கடவுளே என்று ரசிகர்கள் அழைப்பதை நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள கடிதத்தில், சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க….அஜித்தே “என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

Read More
இந்தியாதமிழ்நாடு

பாரதியாரின் முழு படைப்புகளின் தொகுப்புகள்! பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்

பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணியளவில் தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.

மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடக்கம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் நடைபெறுகிறது. இந்நூலை சீனி விஸ்வநாதன் தொகுத்திருக்கிறார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், கஜேந்திரசிங் ஷெகாவாத், எல்.முருகன் மற்றும் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். மறுபுறம் தமிழகத்தில் பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், “மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், 11.12.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

Read More
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Read More
சினிமா

‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்..!100 மில்லியன் பார்வையாளர்களைகடந்தது

கடந்த 2017-ம் ஆண்டில் ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ப.பாண்டி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். அந்த திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி அடைந்தது. இயக்குநராகவும் தனுஷ் வெற்றியடைந்திருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்தார். ராயன் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. மிரளவைக்கும் ஆக்சன் காட்சிகளுடன் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் படம் பார்வையாளர்களை ஈர்த்தது.
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் படத்தின் ‘கோல்டன் ஸ்பேரோவ்’ பாடல் 100 மில்லயன் பார்வையாளர்களை கடந்துள்ளது..
ராயன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கிவரும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இளம் நடிகர், நடிகைகளை படத்தில் களமிறக்கி 2கே கிட்ஸின் காதலை சொல்லும் ராம்காம் பாணியில் இந்த படம் உருவாகிவருகிறது, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய சகோதரி கார்த்திகா மகன் பவிஷை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தந்தை கஸ்தூரிராஜா தயாரிக்க, மகன் தனுஷ் இயக்க, பேரன் பவிஷ் நாயகனாக உருவெடுத்துள்ளார். NEEK படத்தின் ‘கோல்டன் ஸ்பாரோவ்’ பாடல் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியானது. படத்தின் இந்த முதல் பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பிரியங்கா மோகன் கேமியோ பெர்பாமன்ஸ் செய்திருக்கும் இந்த பாடலை சுபலட்சுமி, ஜிவி பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் அறிவு சேர்ந்து பாடியுள்ளனர், இந்த பாடலின் வரிகளை எழுதியவர் அறிவு.

Read More