modi

அரசியல்அறிவியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியா – இஸ்ரேல் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து 

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பொருளாதாரம், பாதுகாப்பு, தூதரக உறவு உள்ளிட்ட துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்புக்கும் இடையே விரைவில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இருநாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரவு விருந்து அளித்தும் உபசரித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று, ஜெருசலேமில் உள்ள யூதர்களின் யாத் வஷேம் நினைவிடத்திற்கு சென்றார். 2ஆம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அந்நாட்டு அதிபர் இசாக் ஹோர்சோக்கையும் சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரம், விண்வெளி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கடல்சார் பாரம்பரியம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் பேசிய நெதன்யாகு, இந்தியாவிற்கும் தனக்குமான பிணைப்பு குறித்து நினைவு கூர்ந்தார். இஸ்ரேலும், இந்தியாவும் புதுமைகளை நோக்கிய பயணத்தில் குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார். தனக்கு அளிக்கப்பட்ட இஸ்ரேலின் உயரிய விருதை இந்திய நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். இஸ்ரேலில் யுபிஐ பயன்படுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு விரைவில் முழு வடிவம் கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதிகூறினார்.இதனைத் தொடர்ந்து, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, தனது மனைவியுடன் விமான நிலையத்துக்கே வந்து பெஞ்சமின் நெதன்யாகு வழியனுப்பிவைத்தார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் துரிதப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்-புஜ் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் அடுத்தக்கட்டமாக, டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 82 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் நாட்டின் முதல் மண்டல அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்தில் மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 55 நிமிடங்களில் சென்றடைலாம். அதாவது நமோ பாரத் விரைவு ரயிலால் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தற்போது, முதற்கட்டமாக நமோ பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது
3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.
இதன் மற்றொரு சிறப்பம்சம் மீரட் மெட்ரோ நிறுவனம், தனது தண்டவாளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை நமோ பாரத் ரயிலுடன் பகிர்ந்துக் கொள்கிறது. இதன் மூலம் மெட்ரோவில் பயணிப்பவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறாமல் அதே ரயில் நிலையத்தில் நமோ பாரத் ரயிலில் ஏற முடியும். இந்த ரயிலில் டிக்கெட் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 210 ரூபாய் வரை தூரத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. மேலும், பெரும்பாலானோர் பணிக்கு செல்லக்கூடிய பீக் ஹவர்ஸில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளன.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட அதிவேக நமோ பாரத் ரயில் நாடு முழுவதும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான மீரட் மெட்ரோவையும் பிரதமர் மோடி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் தான் மெட்ரோ கட்டமைப்பில் அதிவேக கொண்ட ரயிலாகும்.
நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடக்கம்.. மணிக்கு 120 கி.மீ., வேகம்.. 3 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 173 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 700 பேர் வரை ஒரே நேரத்தில் இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏசி, மெத்தை போன்ற இருக்கைகள், சார்ஜிங் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளும் நமோ பாரத் ரயிலில் இடம்பெற்றுள்ளன.
இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் நமோ ரயில் பயணிக்கும். மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

தேர்தல் NDA பிரச்சாரம்-மோடி தமிழகம் வருகை…

தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஈபிஎஸ், அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
பிரதமரின் வருகையை ஒட்டி செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்து ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஆட்சியர் சினேகா அறிவுறுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி. சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இன்று மோடி தலைமையில் பா.ஜ.க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இதில் மோடியுடன் எந்தெந்த கட்சிகள் மேடையை பகிர்ந்து கொள்ள உள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆளும் கட்சியான தி.மு.க முதல் தற்போது தொடங்கப்பட்டுள்ள த.வெ.க வரை தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இன்று பிரச்சாரம் செய்கிறார். முதலில் திருவனந்தபுரத்திற்கு செல்லும் மோடி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மூன்று புதிய ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்
தொடர்ந்து, அங்கு பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் சென்னை செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியான அ.தி.மு.க உட்பட ஆறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்த அணியான டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தலைமையில் டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பியூஷ் கோயல் மற்ற கூட்டணி கட்சிகளான 4 கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.

அதன்படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜகன் மூர்த்தி மற்றும் வாசன் ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து, பா.ஜ.க-வுக்கு ஆலோசனை வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் எஸ். குருமூர்த்தியையும், பட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசையும் கோயல் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் வாசன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த அவர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது, “இரட்டை இயந்திர வளர்ச்சி” என்ற பா.ஜ.க-வின் பரந்த தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பா.ம.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

“பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார்.. என்.டி.ஏ. கூட்டணியில் புதிய கட்சிகள்!”

மதுரையில், என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சார மாநாடு நடக்க இருப்பதாகவும், அதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுவார் என்றும் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் ராம. ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சார மாநாடுக்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து ராம. ஸ்ரீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராம. ஸ்ரீநிவாசன் பிரதமர் மதுரை வருவதை உறுதி செய்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது; “மதுரையில் என்.டி.ஏ. கூட்டணியின் பரப்புரை தொடங்க இருக்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால், பொதுவாக பரப்புரைக் கூட்டங்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், மதுரையும், தமிழ்நாடும் அவர்கள் இருவருக்கும் தனித்துவமான இடம் என்பதால் இருவரும் ஒன்றாக வந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பரப்புரையில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும், அதிமுக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. இதுபோக, புதிதாக என்.டி.ஏ. கூட்டணியில் இணைவோரும் பங்கேற்பார்கள்.

Read More
இந்தியாஉலகம்குற்றம்நிகழ்ச்சிகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்.. பிரதமர் மோடி தலைமையில் நாளை பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பூடான் பயணத்தைத் தொடர்ந்து, நாளை பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அண்டை நாடான பூடானுக்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று செல்கிறார். இப்பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck), பிரதமர் ஷெரிங் தோபே ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும், தற்போதைய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான ஜிக்மே சிங்கியே வாங்குசுங்கின் 70ஆவது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார். அப்போது, இந்தியாவின் நிதியுதவியுடன் பூடானில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 20 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடியும், பூடான் மன்னரும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நாளை இந்தியா திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த கார் அரியானா பதிவெண் கொண்டது என்பதும், அதன் தற்போதைய உரிமையாளர் புல்வாமாவைச் சேர்ந்தவர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், ஹரியானாவில் 350 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன. காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹரான்பூரில் அடில் அகமது என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான லாக்கரில் இருந்து ஏ.கே 47 வகை துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
காஷ்மீர் டூ டெல்லி – வெடித்த காரின் அதிர்ச்சி பின்னணி!
டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த கார் அரியானா பதிவெண் கொண்டது, உரிமையாளர் புல்வாமாவைச் சேர்ந்தவர்.

கார் 2014 முதல் நான்கு முறை முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
அரசியல்இந்தியா

மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை

மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டமும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆபரேஷன் சிந்தூர், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Read More
இந்தியாதமிழ்நாடு

பாரதியாரின் முழு படைப்புகளின் தொகுப்புகள்! பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்

பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணியளவில் தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.

மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடக்கம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் நடைபெறுகிறது. இந்நூலை சீனி விஸ்வநாதன் தொகுத்திருக்கிறார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், கஜேந்திரசிங் ஷெகாவாத், எல்.முருகன் மற்றும் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். மறுபுறம் தமிழகத்தில் பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், “மகாகவி பாரதியார் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், 11.12.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

Read More