Author: Namadhu Arasu

சினிமா

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’

பா.ரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்தனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் படத்துக்கு இசையமைத்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா படத்தை தயாரித்தார். படம் வெளியாகி ஒருபுறம் அதீத பாசிட்டிவ் விமர்சனங்களையும், மறுபுறம் நெகட்டிவ் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

Read More
சினிமா

விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதையில் ஷாம்.. ‘அஸ்திரம்’

ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் களத்தில் உருவாகியுள்ள காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம் நடித்துள்ள படம் ‘அஸ்திரம்’. நடிகர் ஷாம் உடன் நிரஞ்சனி, நிழல்கள் ரவி, அருள் டி ஷங்கர், ஜீவா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘பொம்மை நாயகி’ படத்துக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தன ஷண்முகமணி இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More
இந்தியாதமிழ்நாடுவணிகம்

 வருமான வரி விலக்கு முதல் விவசாயம் வரை.. மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!

நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார். இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்….
விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்.
தனம், தானிய கிஷான் திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
வேலைவாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் மக்கள் வாழக்கூடிய இடங்களிலேயே தொழில்துறையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்வு.
உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை.
5 லட்சம் எஸ்.சி., எஸ்.டி., பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும்
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயம்.
மக்கானா ( தாமரை விதைகள்) உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும்.
அசாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் விதமாக தொழிற்சாலை அமைக்கப்படும்.
பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.
உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ரூ.1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு.
ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.. பட்ஜெட்டில் வெளியான குட் நியூஸ்!
பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி.
AI தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.
அணு உலைகள் மூலம் 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு.
52 சுற்றுலாத் தளங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும்.
2025-26ஆம் நிதியாண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்.
Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இதன்மூலம் ஒரு கோடி ஊழியர்கள் பயன்பெறுவர்.
ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ரூ.30,000 ஆக அதிகரிப்பு.
புதிய வரி சீர்திருத்தத்தில் நடுத்தர வருமான வகுப்பினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்,
புதிய வருமான வரி மசோதாவில் பழைய சட்டங்களில் உள்ள சரத்துகளில் 50 சதவிகிதம் இடம்பெறும்.

Read More
இந்தியாதமிழ்நாடு

 பட்ஜெட் கூட்டத் தொடர் 2025 – பொருளாதார ஆய்வறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, பட்ஜெட்டிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று சமர்ப்பிக்கிறார். இதில், நாட்டின் பொருளாதார நிலை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, 2025 – 26ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று முதல் அமர்வு நிறைவு பெறும். பின்னர், இரண்டாவது அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ள வக்ஃபு வாரியத் திருத்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இதே போன்று, பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, வங்கிகள் சட்டத் திருத்த மசோதா உட்பட மொத்தம் 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Read More
தமிழ்நாடு

அமைச்சர் அமித் ஷா, ஜெகதீப் தன்கர் வருகை..! சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வருகையையொட்டி சென்னையில் இன்று பிற்பகல் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று மாலை சென்னை வர உள்ளனர்.

இதையொட்டி, சென்னையில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை மாற்றுப்பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம் என்று பெருநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. வணிக வாகனங்கள் விமான நிலையம் முதல் இசிஆர் வரை உள்ள சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

Read More
அறிவியல்ஆன்மீகம்தமிழ்நாடு

தை அமாவாசை 2025: ராமேஸ்வரம் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்… அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து ராமநாதசுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்று ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலானது பாவங்கள் நீக்கி புண்ணியம் தரும் ஸ்தலமாகும். இங்கு இறந்த தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது பரிபூரண ஆசிர்வாதம் மூன்று தலைமுறைக்கு கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

மேலும், மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களும், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று மாதங்களிலும் வரும் அமாவாசை நாட்களில் மிகவும் முக்கியமான நாட்களாக இருப்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று, தை அமாவாசை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் அக்னி தீர்த்தம் கடற்கரை குவிந்து புரோகிதர்கள் மூலம் எள்ளு பிண்டம் வைத்து, திதி தர்ப்பணம் கொடுத்தனர்.
இதன்பின் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று இரண்டு மணி நேரம் காத்திருந்து 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு, பின்பு ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்து அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட காவல்துறையினர் சார்பில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றார். இந்த சமயத்தில் ஏர்போட்டிற்கு வந்த ரஜினியுடன் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்ததை பற்றி கருத்து கேட்டுள்ளனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்
மறுபக்கம் அஜித் தன் இரு பட வேலைகளையும் முடித்துவிட்டு கார் ரேஸில் கலந்துகொண்டு வருகின்றார். துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் செம பிசியாக இருக்கின்றார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.
என்னதான் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என புத்தாண்டை முன்னிட்டு தகவல் வந்தாலும் இந்தாண்டு அஜித்தின் ஆண்டாகவே இருக்கும் என தெரிகின்றது. கார் பந்தயத்தில் வெற்றி, பத்மபூஷன் விருது, இரண்டு படங்கள் ரிலீஸ் என அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஒரு கொண்டாட்டமான வருடமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பத்மபூஷன் விருது பெற்ற அஜித்தை பலரும் வாழ்த்திய நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கூலி படப்பிடிப்பில் ககலந்துகொள்ளவோ அல்லது படப்பிடிப்பை முடித்துக்கொண்டோ ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளார் ரஜினி. அவரிடம் சில நிருபர்கள் அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளதை பற்றி கேட்கின்றனர். அதற்கு ரஜினி வாழ்த்துக்கள் என கூறிவிட்டு சென்றார்.இந்த வீடியோ தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகின்றது

Read More
தமிழ்நாடு

 சீர்காழியில் களம் இறங்கிய என்.ஐ.ஏ.! 20 இடங்களில் திடீர் சோதனை

சென்னை மற்றும் சீர்காழியில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்.ஐ.ஏ,) சோதனை நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு காரில் வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பல குழுக்களாக அவர்கள் பிரிந்து திருமுல்லைவாசல் மெயின் ரோடு, நடுத்தெரு, எம்ஜிஆர் நகர், எல்லைக்கட்டி இருப்பு தெரு பகுதிகளில் வசிக்கும் அமிர், நபின், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி உள்ளிட்ட 15 வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை எதற்காக என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

முழுமையான சோதனைக்கு பின்னரே அதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் இறங்கி இருக்கின்றனர்.

Read More
தமிழ்நாடு

 பொது இடங்களில் கொடி கம்பங்கள் அகற்ற உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அனைத்து கொடி கம்பங்களையும் அடுத்த 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த இருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கூடல் புதூர் பகுதியில் உள்ள கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, மதுரை பைபாஸ் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அதிமுக கட்சி கொடி கம்பம் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Read More
விளையாட்டு

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. பஞ்சாபில் நடந்தது என்ன? அணியின் மேலாளர் விளக்கம்

2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாப்பில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
இந்நிலையில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துகொண்டிருந்தது. இந்த போட்டியின்போது எதிர் அணியினர் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் இதுகுறித்து முறையிட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து புகார் அளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியிடம் பேசிய அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் மேலாளர் கலையரசி பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

Read More