kabadiplayersattack

விளையாட்டு

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. பஞ்சாபில் நடந்தது என்ன? அணியின் மேலாளர் விளக்கம்

2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாப்பில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
இந்நிலையில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துகொண்டிருந்தது. இந்த போட்டியின்போது எதிர் அணியினர் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் இதுகுறித்து முறையிட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து புகார் அளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியிடம் பேசிய அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் மேலாளர் கலையரசி பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

Read More