Author: Namadhu Arasu

நிகழ்ச்சிகள்

சென்னையின் 41 ஆண்டுகால அடையாளம்.. ஒரு நிமிடத்தில் இடிந்து தரைமட்டமான உதயம் தியேட்டர்!

கடந்த 41 ஆண்டுகளாக சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய உதயம் திரையரங்கம் ஒரு நிமிடத்தில் நொறுங்கி அஸ்தமனமானது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சென்னையின் அடையாளமாக மாறிய முக்கிய திரையரங்குகளில் உதயம் தியேட்டரும் ஒன்று. ‘உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்’ போன்ற பாடல்கள் சொல்லும் இந்த திரையரங்கத்துக்கும் ரசிகர்களுக்குமான உறவை.

1983-ல் ரஜினியின் சிவப்பு சூரியன் படத்துடன் தொடங்கிய இந்த திரையரங்கின் பயணம், தற்போது அதே ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மூலம் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

Read More
சினிமாதமிழ்நாடு

பவதாரிணி நினைவாக சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு – இசையமைப்பாளர் இளையராஜா 

தனது மகள் பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
தனது தனித்துவமான குரலால் எண்ணற்ற இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பாடகி பவதாரிணி. இளையராஜாவின் மகளான பவதாரிணி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில் அவரது பிறந்த நாள் மற்றும் திதியையொட்டி சென்னை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மகளின் புகைப்படத்துக்கு மலர் தூவிய இளையராஜா, தனது இசையில் பவதாரணி பாடிய “காற்றில் வரும் கீதமே” என்ற பாடலையும் பாடினார்.
பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தார். இளையராஜாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாது திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், தனது தங்கை பவதாரிணி பிறந்தபோது அவரைக் கொஞ்சிய நினைவலைகளை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா கண் கலங்கியபடி பகிர்ந்துகொண்டார். கங்கை அமரன், வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் பவதாரிணி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். பவதாரிணியின் பிறந்த நாள் மற்றும் திதியையொட்டி நடந்த இந்நிகழ்ச்சியில்,
பவதாரிணி கடைசியாக இசையமைத்த “புயலில் ஒரு தோணி” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

Read More
இந்தியா

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சு நாளை தொடங்கும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நாளை தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது உக்ரைன் உடனான போரால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை புதின் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.

மாஸ்கோவிற்கு வரும்படி டிரம்புக்கு புதின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இரு தலைவர்களும் சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார். அதைத் தொடர்ந்து டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெலன்ஸ்கியும், புதினைப் போலவே, அமைதியை உருவாக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் இறப்பதை என்னால் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

அதிமுக உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும் – ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

அதிமுக உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும் – ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

அஜித்தின் ‘விடாமுயற்சி’ … விமர்சனம் 

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பார்த்த பின், பலரும் தங்கள் கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று ‘விடாமுயற்சி’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அஜித்குமாரின் இன்ட்ரோ சிறப்பாக இருப்பதாகவும், அனிருத் இசை ஓகே என்றும், படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
’விடாமுயற்சி’ நல்ல முயற்சி என நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
படம் எங்கேஜிங்காகவும், த்ரில்லிங்காகவும் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Read More
சினிமாதமிழ்நாடு

இந்த சூப்பர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ‘குட் பேட் அக்லி’ படக்குழு… செம்ம வைப்

‘குட் பேட் அக்லி’ படத்தில் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த புகழ்பெற்ற பாடல் ஒன்றை படக்குழு ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

Read More
அரசியல்இந்தியா

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 60.39 விழுக்காடு வாக்குகள் பதிவு!

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் 60.39 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட தேசியத் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 70 இடங்களுக்கு 699 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தேர்தலை சுமூகமாக நடத்த 220 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்களும், 19,000 ஊர்க்காவல் படையினரும், டெல்லி போலீசார் 35,000 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாக்களித்தார். நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் ஜனநாயக கடமை ஆற்றினார்.
இதேபோன்று, லோதி எஸ்டேட்டில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, தனது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மகன் ரைஹன் வதேராவுடன் சென்று வாக்களித்தார். லேடி இர்வின் மேல்நிலைப் பள்ளியில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பெற்றோர், மனைவி, மகனுடன் சென்று ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Read More
தமிழ்நாடு

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் ரூ.48.95 கோடி கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும்,

வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம்) சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடு

ஏடிஜிபி கல்பனா நாயக்கை கொல்ல முயற்சி? டிஜிபி அலுவலகம் தந்த விளக்கம்

ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்டு நடந்த சதி அல்ல. மின் கசிவு காரணமாக ஏற்பட்டது என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்ததாக தகவல் வெளியாகியது.

சம்பவத்தன்று தேர்வாணைய தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும்போது மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தீ விபத்து குறித்து தகவல் அளித்ததாகவும், தனது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது தனது இருக்கை முழுவதுமாக எரிந்து கிடந்ததாகவும் புகாரில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்த நிலையில், இந்த தீ விபத்து நடந்ததாகவும் ஏடிஜிபி கல்பனா நாயக் சந்தேகம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக், தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்டு நடந்த சதி அல்ல. மின் கசிவு காரணமாக ஏற்பட்டது என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேர்வாணையத்தில் முறைகேடு என கல்பனா நாயக் வைத்த குற்றச்சாட்டிற்கு சீருடைப்பணியாளர் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஏடிஜிபி கல்பனா நாயக் கூறியதுபோல் பணி நியமனங்களில் குளறுபடி இல்லை.

Read More
அரசியல்சினிமா

 ஜப்பானில் இருந்து பனையூர் வந்த ரசிகர்கள்… விஜய் 

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னை பார்க்க வந்த ஜப்பான் ரசிகர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் ரசிகர்கள் நெகிழ்ந்தனர்.
விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கு மறுபுறம் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

Read More