Author: Namadhu Arasu

தமிழ்நாடு

சீமான் வீட்டு பாதுகாவலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு.. காவல்துறையினர் நடவடிக்கை

சீமான் வீட்டு பாதுகாவலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு.. காவல்துறையினர் நடவடிக்கை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதை கூற வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வந்தனர். அப்போது சீமான் வீட்டில் இல்லாததால் வீட்டின் முன்பு கேட்டில் சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர். போலீசார் சம்மனை ஒட்டிய சில நிமிடங்களில் சீமான் வீட்டு காவலாளியும், சீமானின் ஆதரவாளரும் சம்மனை கிழித்து எறிந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த நீலாங்கரை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் சீமான் வீட்டிற்கு சென்று கைது செய்ய முயன்றபோது வீட்டில் இருந்த பாதுகாவலர் முன்னாள் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் அமல்ராஜ் என்பவர் ஆய்வாளரை தடுத்து நிறுத்தியதால் ஆய்வாளருக்கும் பாதுகாவலருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் அமல்ராஜ் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றபோதும் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறை வாகனத்தில் ஏற்றியதும் பாதுகாவலர் துப்பாக்கி வைத்துள்ள நிலையில் அதை பார்த்ததும் போலீசார் அதை பறிமுதல் செய்ய முற்பட்டபோது கடும் போராட்டம் ஏற்பட்டது. பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Read More
Emplymentதமிழ்நாடு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க
இந்திய அஞ்சல்துறையில் காலியாக உள்ள 21,413 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Post Office Jobs Recruitment Online Application Deadline: இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevak (GDS), கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) என மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் SC/ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், PWD பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள், PwD மற்றும் OBC பிரிவினர்களுக்கு 13 ஆண்டுகள், PwD மற்றும் SC/ST பிரிவினர்களுக்கு 15 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
சம்பள விபரம்: Assistant branch post master பதவிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையும், Branch post master பதவிகளுக்கு ரூ.12,000 முதல் ரூ. 29,380 வரை சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கம் மூலம் மார்ச் மாதம் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மார்ச் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் திருத்தம் செய்து கொள்ளலாம்.

Read More
தமிழ்நாடு

புதிய விமான நிலையம்; இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் – போக்குவரத்துத் துறை அமைச்சர்

புதிய விமான நிலையம்; இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் – போக்குவரத்துத் துறை அமைச்சர்
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விரைவில் மத்திய அரசு ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம் கட்டுவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கம் அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் ”உடான் யாத்ரி கஃபே” வை திறந்து வைத்த மத்திய அமைச்சர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். மேலும், சென்னைக்கான 2-வது விமான நிலையம் அமைப்பதற்குக் கொள்கை அளவில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், சென்னை விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங், பிக்அப், டிராப் செய்வதற்கான இடங்கள் தொடர்பாக உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read More
தமிழ்நாடு

“வாரம் ஒரு முறை நானே ஆய்வு செய்வேன்..” – கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு

“வாரம் ஒரு முறை நானே ஆய்வு செய்வேன்..” – கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு
சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளைப் போல, சென்னை கொளத்தூர் பெரியார் நகரில், அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், 210 கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன், அனைத்து விதமான சிகிச்சை அளிக்கும் வகையில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.
பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம்தான் உண்மையான சமூகநீதி என்றார். மேலும், வடசென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக பெரியார் மருத்துவமனை இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், குடும்பத்தில் ஒருவரைப் பார்ப்பது போல நோயாளிகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார். சுய ஒழுக்கம் அனைவருக்கும் முக்கியம், பொது இடங்களில் தூய்மையைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், வாரம் ஒருமுறை பெரியார் அரசு மருத்துவமனைக்குத் தான் ஆய்வுக்குச் செல்வேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Read More
சினிமா

 கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆன்டனி தட்டிலுடன் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

வாட்ஸ்அப் மூலம் தரிசன டிக்கெட்..! திருப்பதி தேவஸ்தானம்…

வாட்ஸ்அப் மூலம் தரிசன டிக்கெட்..! திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த முக்கிய அப்டேட்
‘மன மித்ரா’ என்ற பெயரில் வாட்ஸ்அப் செயலி மூலம் பல்வேறு சேவைகளை வழங்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப்பிரதேச அரசு தொடங்கி வைத்துள்ளது.

Read More
இந்தியா

டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழப்புக்கு காரணம்….

பரபரப்பான டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணங்கள் ரயில்வே துறையினர் மூலமாகவும், காவல்துறையினர் மூலமாகவும் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
நாட்டின் தலைநகரான புதுடெல்லியின் ரயில் நிலையங்களில் எப்போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போவதும் வருவதுமாக இருப்பார்கள். அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக நாள்தோறும் அங்கு கோடிக்கணக்கானோர் குவிந்து வரும் நிலையில் புதுடெல்லி ரயில் நிலையம் பல்வேறு மாநில மக்கள் வந்து ரயில் மாறும் மையமாக திகழ்ந்து வருகிறது. அவ்வகையில் பிரயாக்ராஜ் செல்வதற்காக பல ஆயிரம் மக்கள் புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு காத்திருந்தனர்.

அப்போது 14 ஆம் எண் நடைமேடையில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றிருந்தது. அதேபோல் 16 ஆம் எண் நடைமேடையில் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வரவேண்டியிருந்தது. அந்த இரு நடைமேடைகளில் மற்ற நடைமேடைகளை விட மிக அதிக அளவில் பயணிகள் காத்திருந்தனர். 16 ஆம் நடைமேடையில் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வருகை பற்றி அறிவிப்பு வெளியானது. அப்போது 14 ஆம் எண் நடைமேடையை வந்து அடையாத சிலர் தங்கள் ரயில் அங்கு வருவதாக நினைத்து 16 ஆவது நடைமேடைக்கு விரைந்தனர்.
14 ஆம் எண் நடைமேடையில் இருந்தவர்களில் சிலரும் 16 ஆம் எண் நடைமேடைக்கு ஓடினர். நடைமேம்பாலத்தின் படிக்கட்டுகளில் ஒருவர் தடுக்கி விழ, அவருக்கு முன்னும் பின்னும் இருந்த நூற்றுக்கணக்கானோர் சரிந்து விழ கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.

புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு செல்லவேண்டிய 3 விரைவு மகத் எக்ஸ்பிரஸ், ஸ்வதந்ரதா சேனானி, புவனேஸ்வர் ராஜதானி ஆகிய ரயில்களும் தாமதமானதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக வந்துகொண்டிருந்ததால் வழக்கத்தை விட மூன்று மடங்கு பேர் நடைமேடைகளில் திரண்டிருந்ததும் அதிகப்படியான நெரிசலுக்குக் காரணம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரிக்க வடக்கு ரயில்வே பிராந்தியத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சதிச்செயல் காரணமா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More
சினிமாதமிழ்நாடு

‘சிம்பு கொடுத்த ஐடியாதான் காரணம்’ – இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

பாடல்கள் எழுதுவதற்கு சிம்பு கொடுத்த ஊக்கமும், ஐடியாவும் தான் முக்கிய காரணம் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள டிராகன் என்ற படம் இம்மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், ஜார்ஜ் மரியான், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி.ஜே. சித்து, ஹர்ஷத் கான், முருகேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். டிராகன் படத்தில் இடம்பெற்றுள்ள ரைஸ் ஆப் டிராகன் மற்றும் வழி துணையே என்ற இரண்டு பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் இம்மாதம் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வரும் பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை.. எப்போது தெரியுமா? – முதலமைச்சர்

இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி -போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணியின் கீழ், கெல்லீஸ் முதல் தரமணி வரை சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கிரீன்வேஸ் சாலை முதல் அடையாறு சந்திப்பு வரையிலான வழித்தடத்தில், அடையாறு ஆற்றுக்கு கீழ் நடைபெற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வைட்டார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதலமைச்சராகவும் தான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகள் விரைந்து முன்னேற்றம் கண்டு வருவதாக கூறினார்.

Read More
குற்றம்தமிழ்நாடு

கோயம்பேட்டில் பயணியை தாக்கிய 3 பேர் உடனடி பணியிடை நீக்கம்.. போக்குவரத்து கழகம் அதிரடி!

சென்னை கோயம்பேட்டில் பயணியை தாக்கிய 3 பேரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை ஊழியர்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடி நடவடிக்கை மேற்கொண்டதாக போக்குவரத்துக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி அதிகாலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லிக்கு நோக்கி சென்ற பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒரு பயணி நேர காப்பாளரிடம் முறையிட்டபோது வாக்குவாதமாக முற்றிய நிலையில், அவரை நடத்துநர், ஓட்டுநர், நேர காப்பாளர் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி தரதரவென இழுத்துச்சென்று எட்டி மிதித்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

Read More