koyambedu

குற்றம்தமிழ்நாடு

கோயம்பேட்டில் பயணியை தாக்கிய 3 பேர் உடனடி பணியிடை நீக்கம்.. போக்குவரத்து கழகம் அதிரடி!

சென்னை கோயம்பேட்டில் பயணியை தாக்கிய 3 பேரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை ஊழியர்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடி நடவடிக்கை மேற்கொண்டதாக போக்குவரத்துக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி அதிகாலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லிக்கு நோக்கி சென்ற பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒரு பயணி நேர காப்பாளரிடம் முறையிட்டபோது வாக்குவாதமாக முற்றிய நிலையில், அவரை நடத்துநர், ஓட்டுநர், நேர காப்பாளர் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி தரதரவென இழுத்துச்சென்று எட்டி மிதித்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

Read More