புதிய விமான நிலையம்; இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் – போக்குவரத்துத் துறை அமைச்சர்
புதிய விமான நிலையம்; இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் – போக்குவரத்துத் துறை அமைச்சர்
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விரைவில் மத்திய அரசு ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம் கட்டுவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கம் அளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் ”உடான் யாத்ரி கஃபே” வை திறந்து வைத்த மத்திய அமைச்சர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். மேலும், சென்னைக்கான 2-வது விமான நிலையம் அமைப்பதற்குக் கொள்கை அளவில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், சென்னை விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங், பிக்அப், டிராப் செய்வதற்கான இடங்கள் தொடர்பாக உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
