airportnews

தமிழ்நாடு

புதிய விமான நிலையம்; இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் – போக்குவரத்துத் துறை அமைச்சர்

புதிய விமான நிலையம்; இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் – போக்குவரத்துத் துறை அமைச்சர்
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விரைவில் மத்திய அரசு ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம் கட்டுவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்யும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கம் அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் ”உடான் யாத்ரி கஃபே” வை திறந்து வைத்த மத்திய அமைச்சர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். மேலும், சென்னைக்கான 2-வது விமான நிலையம் அமைப்பதற்குக் கொள்கை அளவில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், சென்னை விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங், பிக்அப், டிராப் செய்வதற்கான இடங்கள் தொடர்பாக உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Read More
தமிழ்நாடு

விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவு பொருட்கள் விற்பனை….

விமான நிலையங்களில், மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கான விற்பனையகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில், விமான நிலையங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் குளிர்பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த விலை உயர்வால், விமான நிலையங்களில் சாப்பிடுவதையே பெரும்பாலான பயணியர் தவிர்க்கின்றனர்.

காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், கோல்கட்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில், ஒரு கப் டீ, 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விமான நிலையங்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை மலிவு விலையில் வழங்க, பொருளாதார மண்டல விற்பனையகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

இதன்படி, விமான நிலையங்களில் பொருளாதார மண்டல விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன. புதிதாக கட்டப்படும் விமான நிலையங்களில் இந்த விற்பனையகங்கள் முதலில் திறக்கப்படும்.

மற்ற கடைகளை போல் அல்லாமல், இந்த விற்பனையகங்களில் இருக்கைகள் இருக்காது.

கவுன்டரில் பணம் செலுத்தி உணவை பெற்றுக் கொண்டு, மேஜையில் வைத்து சாப்பிட வேண்டும்.

இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும். அதற்கான வேலைபாடுகள் நடந்து வருகின்றன.

அதை தொடர்ந்து மற்ற விமான நிலையங்களிலும் இதுபோன்ற விற்பனையகங்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read More