amithshah

அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” – மதுரையில் அமித்ஷா

தமிழ்நாடு பாஜகவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். நேற்று மதுரை வந்த அமித்ஷா, இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பாஜக உயர்மட்ட மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை மதுரை, ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அங்கு பேசிய அவர், “மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது” எனத் தெரிவித்தார். அவர் பேசியதாவது: “மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி உரையைத் தொடங்குகிறேன். 3 ஆயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்டது தமிழ். ஆனால், தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என வருத்தமாக இருக்கிறது.
இந்தக் கூட்டம் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் கூட்டம். பாஜக – அதிமுக கூட்டணி 2026ல் ஆட்சி அமைக்கும். திமுகவை அமித்ஷாவால் தோற்கடிக்க முடியாது என ஸ்டாலின் சொன்னது சரிதான். என் நீண்ட அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். திமுகவை அமித்ஷாவுக்குப் பதில் மக்கள் தோற்கடிப்பார்கள். வரும் தேர்தலில் திமுகவை மக்கள் தூக்கி எறியக் காத்திருக்கிறார்கள். எங்கிருந்தாலும் எனது சிந்தனை தமிழ்நாட்டைப் பற்றியே இருக்கும்.
ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய ஆதரவுக் குரல் ஒலித்தது. இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை ஒடுக்க முந்தைய அரசுகள் முயலவில்லை. ஆனால் மோடியின் அரசு தீவிரவாதத் தாக்குதல்களை முறியடித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகளைத் துல்லியமாக அழித்துள்ளோம். மோடி ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவான நிலையை அடைந்துள்ளோம். ஆபரேஷன் சித்தூர் இன்னும் முடியவில்லை. மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் வீடு புகுந்து அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சியில் இந்தியா 4.19 ட்ரில்லியன் வளர்ச்சிக் கண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி தமிழகத்திற்கு 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி கொடுத்தது. மோடி அரசு 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Read More
தமிழ்நாடு

அமைச்சர் அமித் ஷா, ஜெகதீப் தன்கர் வருகை..! சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வருகையையொட்டி சென்னையில் இன்று பிற்பகல் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று மாலை சென்னை வர உள்ளனர்.

இதையொட்டி, சென்னையில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை மாற்றுப்பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம் என்று பெருநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. வணிக வாகனங்கள் விமான நிலையம் முதல் இசிஆர் வரை உள்ள சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

அம்பேத்கர் பற்றி நான் அப்படி பேசவில்லை: அமித் ஷா மறுப்பு!

அம்பேத்கருக்கு எதிராக தன்னால் எப்போதும் பேச முடியாது என்று அமித் ஷா கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் அமித் ஷா இன்று (டிசம்பர் 18 ) பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு விவாதம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர்.
இறுதி நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரை நிகழ்த்தினார். அப்போது, அவர், “அண்மை காலமாக அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்து வந்திருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று கூறினார்.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் அமித் ஷா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் பேசிய கருத்துக்களை காங்கிரஸ் கட்சி திரித்து கூறிய விதம் கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீட்டுக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் அரசு அம்பேத்கருக்காக ஒரு போதும் மணிமண்டபம் கட்டியதில்லை. அம்பேத்கருடன் தொடர்புடைய பல இடங்களை கட்டியது பாஜக அரசுகள் தான். அவரது பாரம்பரியத்தை போற்றும் படி அரசியலமைப்பு தினத்தை அறிவித்தது மோடி அரசுதான்.
நாடாளுமன்றத்தில் பேசிய பாஜகவினர், நாங்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம் எவ்வாறு அரசியலமைப்பு சட்டத்தினை பாதுகாத்தோம் என்பதனை பட்டியலிட்டனர். இது காங்கிரஸ் கட்சி, அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் வீர் சாவர்கரை அவமதித்தது, அவசரநிலையை கொண்டுவந்ததன் மூலம் அரசியலமைப்பை அவமதித்தது” என்று தெரிவித்தார்.

Read More