Author: Namadhu Arasu

LIFE STYLEதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

Top Thai Brands 2025 Exhibition in Chennai EA MALL 24-26 JAN

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த தாய் பிராண்டுகள் 2025 கண்காட்சி இந்த ஆண்டு மையமாக அமைய உள்ளது, தாய்லாந்தின் சிறந்த தயாரிப்புகள், அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை காட்சிப்படுத்த ஒரு இணையற்ற தளத்தை வழங்குகிறது.

வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் (DITP) பிரதிநிதித்துவ அலுவலகமான சென்னை தாய் வர்த்தக மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, 2025 ஜனவரி 24 முதல் 26 வரை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெறும்.

Read More
குற்றம்தமிழ்நாடு

ஊராட்சி தலைவரை பழிவாங்கும் நோக்கம்..? வேங்கைவயல் சம்பவத்தில் நடந்தது என்ன? குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று பேருக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள ஒரு குட்கிராமம் வேங்கைவயல். இங்கு, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கண்டறியப்பட்ட இந்த கொடூரச் செயல் குறித்து சிபிசிஐடி விசாரித்து வந்தது. 2023 ஜனவரி 16-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர், நேரடி சாட்சியங்களாக 300 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், 5 பேரிடம் குரல் பரிசோதனை, 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை என அறிவியல் பூர்வமாகவும் விசாரணையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் குறித்த வழக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிக்க: குடிநீர் தொட்டியின் மேல் செல்பி… லீக்கான ஆடியோ..! வேங்கைவயல் சம்பவம் நடந்தது எப்படி?

அப்போது, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடந்த 20-ஆம் தேதியே புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.
வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்களை உள்ளடக்கிய முட்டுக்காடு ஊராட்சித் தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டராக இருந்த சண்முகத்தை பணிநீக்கம் செய்ததே சம்பவத்திற்கான மூல காரணம் என கூறியுள்ளது.
குடிநீர் ஆப்ரேட்டராக இருந்த சண்முகமுத்தின் நண்பர்களான சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குடிநீர் தொட்டி மீது ஏறி மலம் கலந்ததாகவும், பத்மாவின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக காவலர் முரளி ராஜா தவறான தகவலை பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டுவதாகவும் சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளி ராஜா, மணல்மேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சம்பவத்தின் போது சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலையின்றி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என சுட்டிக்காட்டினர்.
மேலும், மனுதாரர் தரப்பு பதில் அளிக்க 6 வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம், 750 நாட்களுக்குப் பிறகு வேங்கைவயல் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Read More
சினிமா

கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் KH237 

கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் KH237 என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அக்டோபர் 15, 2024 அன்று தனது சமூக ஊடகக் கணக்கில், அந்தப் படத்திற்காக தன்னைப் பற்றிய புதிய தோற்றத்தைப் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் நடிக்கும் குண்டர் வாழ்க்கை படம், மணிரத்னம் இயக்கத்தில் 2025-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
விளையாட்டு

20 வருட திருமணத்திற்குப் பிறகு வீரேந்தர் சேவாக், ஆர்த்தி அஹ்லாவத் பிரிகிறார்கள்

20 வருட திருமணத்திற்குப் பிறகு வீரேந்தர் சேவாக், ஆர்த்தி அஹ்லாவத் பிரிகிறார்கள்; தம்பதியினர் பிரிந்து வாழ்கிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன; விரைவில் விவாகரத்து
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரேந்தர் சேவாக்கும் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத்தும் 20 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து செல்வதாக கூறப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்தியதாகத் தெரிகிறது, இது அவர்களின் உறவு நிலை குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. இருவரும் பல மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More
சினிமாதமிழ்நாடு

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“2K லவ்ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. Creative Entertainers சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…
இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…
சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப்பாடல்களும் நான் எழுதியுள்ளேன், ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த டிரெய்லர். படத்தில் உழைத்த அனைவருக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகை லத்திகா பேசியதாவது…
இப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், நீங்கள் டிக்கெட் எடுத்த காசு வீணாகாது. நான் இந்தப்படத்தில் மிக நல்ல ரோலில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பைத் தந்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என்னை அழகாகக் காட்டிய ஆனந்த் சாருக்கு நன்றி. எனக்கு ஊக்கம் தந்த அம்மா அப்பாவுக்கு நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..,
இது நன்றி தெரிவிக்கும் மேடை, அறிமுக தயாரிப்பாளர் விக்னேஷ், இந்த வயதில் இப்படி ஒரு கதையைத் தயாரிக்க நினைத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தை முன்னெடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு நன்றி. ஈஸ்வரன் படத்திற்குப் பிறகு, சுசீந்திரன் சாரின் கம்பெனி ஆர்டிஸ்டாக நான் மாறிவிட்டேன். இந்தப்படத்தில் சின்ன கதாப்பாத்திரம் என்றாலும் மிக நல்ல கதாப்பாத்திரம். சுசீந்திரன் சார், காதலைக் கையாள்வதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும். இளமையாக இனிமையாக இப்படத்தில் காதலைக் காட்டியுள்ளார். என்னுடன் இப்படத்தில் பயணித்த திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இமான் இசை, கார்த்திக் நேத்தா வரிகளில் பாடல்கள் இந்தக்கால இளைஞர்களைக் கவரும். பிப்ரவரி 14 இப்படம் திரைக்கு வருகிறது. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். நன்றி.

நடிகர் முருகானந்தம் பேசியதாவது..,
2K லவ் ஸ்டோரியில் எனக்கென்ன வேலை எனக் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் எல்லாம் சுசி சாரின் வேலை தான். இமான் சார் இசையில் படம் இயக்க நினைத்தேன், நான் நடித்த காட்சிக்கு இசையமைத்துள்ளார் என்பது பெருமை. இப்போது ஜாலியாக இருக்கலாம் ஆனால், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சுசி சார் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என தெரிகிறது. கண்டிப்பாக இந்தப்படம் அவர் மனதுக்காகப் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன் பேசியதாவது..,
2K கிட்ஸ் படத்தில், நான் 90 கிட்ஸாக நடித்துள்ளேன். சுசி சார் போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார், நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்கப் போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு, அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. விக்னேஷ் பிரதர் இவ்வளவு பெரிய படத்தை, நல்ல கதையை நம்பி எடுத்துள்ளார். நன்றி. இந்தப்படம் தனஞ்செயன் சார் கைக்குப் போய் விட்டது என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல்,காட்சி அமைப்பு, மீதம் திரையில் காணுங்க

Read More
தமிழ்நாடுவிளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து போட்டி… சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் – ஆனா இது முக்கியம்!

சேப்பாக்கத்தில் நாளை(25.01.2025) நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது இருபது ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளனர்.

Read More
தமிழ்நாடு

காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்.. காரணம் என்ன?

நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடியாணைகளை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் கைதான வடிவேல் என்பவர் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுதாரர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது. நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் அந்த உத்தரவு முறையாக செயல்படுத்தவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி,

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் சரக காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக ஆணையிட்டார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரி சரண் ஆஜரானார். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திலும் ஒரே காவல் சரக எல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஏற்க முடியாது என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக செயல்திட்டம் வகுக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார். திட்டம் வகுப்பது தொடர்பாக ஆலோசனை செய்து தெரிவிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். அடுத்த விசாரணையின்போது துணை ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்த நீதிபதி விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்; எம்.பி. கதிர் ஆனந்திடம் 10 மணிநேரம் விசாரணை

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
கடந்த 3-ஆம் தேதி வேலூரில் உள்ள திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தின் வீடு, கல்லூரி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரொக்கம் மற்றும் 13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி, கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றதை அடுத்து, அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.

Read More
சினிமாதமிழ்நாடு

‘விஜய் 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் எப்போது? – வெளியான அப்டேட்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
‘தி கோஸ்ட்’ படத்துக்கு பிறகு நடிகர் விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

Tungsten | டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது எப்போது? – அண்ணாமலை கொடுத்த உறுதி!

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராம தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்த பிறகு அண்ணாமலை தந்த பேட்டியில், “தமிழக மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும்” என்றார்.

மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக டெல்லி அழைத்துச் சென்றது.
இந்த நிலையில், மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாயிகள் குழுவினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளதாக அண்ணாமலை கூறினார்.
“சுரங்கம் வராது என்கிற உறுதிமொழியை கொடுத்தோம். அதைக் காப்பாற்றி இருக்கிறோம். அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் செய்திக்குறிப்பு வரும்.” என்று அண்ணாமலை கூறினார்.
பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சந்தித்துப் பேசி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

Read More