kadhianandmp

அரசியல்தமிழ்நாடு

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்; எம்.பி. கதிர் ஆனந்திடம் 10 மணிநேரம் விசாரணை

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
கடந்த 3-ஆம் தேதி வேலூரில் உள்ள திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தின் வீடு, கல்லூரி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ரொக்கம் மற்றும் 13 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி, கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றதை அடுத்து, அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.

Read More