இந்தியா – இங்கிலாந்து போட்டி… சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் – ஆனா இது முக்கியம்!
சேப்பாக்கத்தில் நாளை(25.01.2025) நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது இருபது ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளனர்.
