Author: Namadhu Arasu

ஆன்மீகம்தமிழ்நாடு

மயிலாடுதுறை காவிரி துலா உற்சவம் ,சுவாமி உலா மிக சிறப்பாக நடைபெற்றது…

மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா உற்சவ தீர்த்தவாரி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர், தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதிகள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மயிலாடுதுறை காவிரி கரையில் மயூரநாதர் ஆலயம் வதான்யேஸ்வரர் ஆலயம் ஐயாரப்பர் ஆலயம் புனுகீஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம் தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயம் படித்துறை விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றில் கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. ஆற்றின் உள்ளே 16 தீர்க்க கிணறுகள் அமைந்துள்ளன. புனிதம் வாய்ந்த இடமாக கருதப்படும் புனித தீர்த்தமான மயிலாடுதுறை காவிரி ஆற்றில் இன்று தீர்த்தவாரி நடைபெறுவதை முன்னிட்டு இரு கரைகளிலும் அனைத்து ஆலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி அளித்தனர். அனைத்து ஆலயங்களின் அஸ்திர தேவருக்கும் காவிரி கரையில் பால் பன்னீர் இளநீர் சந்தனம் தயிர் தேன் நெய் உள்ளிட்ட 16 வகை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. தர்மபுரம் ஆதின குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதின குரு மகா சனிமாதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதற்காக இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் புனித நீராட வருகை தந்துள்ளனர்.

Read More
சினிமா

கோவாவில், போலீஸாரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக குற்றவாளிகளைப் பிடித்துத் தருபவர் ஃபிரான்சிஸ் (சூர்யா). ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு கும்பல் ஸெடா (சேயோன்) என்னும் சிறுவனைக் கொல்லத் துடிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஸெடா, ஃபிரான்சிஸிடம் தஞ்சம் அடைகிறார். ஸெடாவுக்கும் தனக்கும் பூர்வஜென்ம பந்தம் இருப்பதாக உணர்கிறார் ஃபிரான்சிஸ்.

கி.பி 1070-ல் ஐந்தீவுகளில் ஒன்றான பெருமாச்சியின் இளவரசனாகவும் மக்களைக் காக்கும் வீரனாகவும் இருக்கிறான் கங்குவா (சூர்யா). 25,000 வீரர்களைக் கொண்ட ரோமானிய படை, பெருமாச்சி மீது போர் தொடுக்கவருகிறது. அவர்களுக்கு உதவும் கொடுவன் (நட்டி) உயிரிழந்துவிட, அவரது மகனை (சேயோன்) பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறார் கங்குவா. இதற்கிடையில் பெருமாச்சி மீது பெரும்பகை கொண்ட அரத்தி தீவின் அரசன் உதிரன் (பாபி தியோல்) பெருமாச்சியை அழிக்க ரோமானியருடன் கைகோக்கிறான். பெருமாச்சிக்கும் அரத்திக்குமான போரில் வென்றது யார்? கங்குவாவுக்கு என்ன ஆகிறது? இதற்கும் நிகழ்கால ஃபிரான்சிஸ் – ஸெட்டாவுக்கும் என்ன தொடர்பு? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.

Read More
குற்றம்தமிழ்நாடு

மருத்துவர் மீது தாக்குதல்: குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு நீதிமன்ற காவல்!

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஷ்க்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல். சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் இளைஞர் விக்னேஷை ஆஜர்படுத்தியது காவல்துறை.

Read More
தமிழ்நாடு

விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவு பொருட்கள் விற்பனை….

விமான நிலையங்களில், மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கான விற்பனையகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில், விமான நிலையங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் குளிர்பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த விலை உயர்வால், விமான நிலையங்களில் சாப்பிடுவதையே பெரும்பாலான பயணியர் தவிர்க்கின்றனர்.

காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், கோல்கட்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில், ஒரு கப் டீ, 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விமான நிலையங்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை மலிவு விலையில் வழங்க, பொருளாதார மண்டல விற்பனையகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

இதன்படி, விமான நிலையங்களில் பொருளாதார மண்டல விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன. புதிதாக கட்டப்படும் விமான நிலையங்களில் இந்த விற்பனையகங்கள் முதலில் திறக்கப்படும்.

மற்ற கடைகளை போல் அல்லாமல், இந்த விற்பனையகங்களில் இருக்கைகள் இருக்காது.

கவுன்டரில் பணம் செலுத்தி உணவை பெற்றுக் கொண்டு, மேஜையில் வைத்து சாப்பிட வேண்டும்.

இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும். அதற்கான வேலைபாடுகள் நடந்து வருகின்றன.

அதை தொடர்ந்து மற்ற விமான நிலையங்களிலும் இதுபோன்ற விற்பனையகங்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read More
தமிழ்நாடு

தற்போதைய முக்கிய செய்திகள்….

தற்போதைய முக்கிய செய்திகள்
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி. சென்னை மற்றும் புறநகர்களில் விடிய விடிய காற்றுடன் கனமழை!

🌴🐯🇮🇳🕊️🌴 சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

🌴🐯🇮🇳🕊️🌴 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரிய சீராய்வு மனு தள்ளுபடி. மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

🌴🐯🇮🇳🕊️🌴 சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த துணை முதலமைச்சர் உதயநிதி. விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை செய்திருப்பதாகவும் பெருமிதம்!

🌴🐯🇮🇳🕊️🌴 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 25ம் தேதி வரை நீதிமன்றக் காவல். மீனவர்கள் கைதை கண்டித்து இன்று பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம்!

Read More
அரசியல்தமிழ்நாடு

“புற்றீசல்கள் காணாமல் போகும்” – த.வெ.க. தலைவர் விஜயை விமர்சித்த முதல்வர்?

விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூரில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய முதலமைச்சர், ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மக்களைப் பற்றி கவலைப்படாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது கலைஞர் பெயரில் பயன்படாத திட்டங்களை செயல்படுத்துவதாகப் பொய் பரப்புரை செய்து வருகிறார் எனக் கடுமையாக சாடினார்.திமுக-வை முந்திச் சென்று வெற்றி பெற பல பேர் வருவதாகக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும் என நடிகர் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார்.திராவிட மாடல் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும் என்றும் த.வெ.க. தலைவர் விஜயை மறைமுகமாக முதலமைச்சர் விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் காமராஜரின் பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்ட முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜரைத் தன்னால் மறக்கவே முடியாது என்று நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார். மேலும், தனது திருமணத்திற்கு வந்து காமராஜர் வாழ்த்தியதை மறக்க முடியாது எனவும் முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படியுங்கள் : விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவி! தேமுதிக மா.செ. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்!

சிறந்த வீடியோக்கள்
4/5
புதுப்பொலி பெற்ற ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்… தஞ்சை மக்கள் இனி அடிக்கடி விசிட் பண்ணலாம்…
புதுப்பொலி பெற்ற ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்… தஞ்சை மக்கள் இனி அடிக்கடி விசிட் பண்ணலாம்…
5/5
கூகுள் பே வேலை செய்யவில்லையா..? இனி கவலை வேண்டாம்… இந்த UPI lite யூஸ் பண்ணுங்க…
கூகுள் பே வேலை செய்யவில்லையா..? இனி கவலை வேண்டாம்… இந்த UPI lite யூஸ் பண்ணுங்க…
1/5

சுகரை கட்டுப்படுத்தும் சூப்பரான காய்… இந்தா ஆரம்பமாகிட்டுல அதலக்காய் சீசன்…
2/5
சாமானியர்களும் ஹீரோ தான்… சினிமா கனவுள்ளவர்களுக்காக எடுத்த புது முயற்சி…
சாமானியர்களும் ஹீரோ தான்… சினிமா கனவுள்ளவர்களுக்காக எடுத்த புது முயற்சி…
3/5
இந்த வாரத்தில் மழை வெளுத்து வாங்கும்…! மக்களே‌ குடை‌ எடுத்து வச்சிக்கோங்க…
இந்த வாரத்தில் மழை வெளுத்து வாங்கும்…! மக்களே‌ குடை‌ எடுத்து வச்சிக்கோங்க…
4/5
புதுப்பொலி பெற்ற ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்… தஞ்சை மக்கள் இனி அடிக்கடி விசிட் பண்ணலாம்…
புதுப்பொலி பெற்ற ராஜ ராஜ சோழன் மணிமண்டபம்… தஞ்சை மக்கள் இனி அடிக்கடி விசிட் பண்ணலாம்…
5/5
கூகுள் பே வேலை செய்யவில்லையா..? இனி கவலை வேண்டாம்… இந்த UPI lite யூஸ் பண்ணுங்க…
கூகுள் பே வேலை செய்யவில்லையா..? இனி கவலை வேண்டாம்… இந்த UPI lite யூஸ் பண்ணுங்க…
1/5
சுகரை கட்டுப்படுத்தும் சூப்பரான காய்… இந்தா ஆரம்பமாகிட்டுல அதலக்காய் சீசன்…
சுகரை கட்டுப்படுத்தும் சூப்பரான காய்… இந்தா ஆரம்பமாகிட்டுல அதலக்காய் சீசன்…
2/5
சாமானியர்களும் ஹீரோ தான்… சினிமா கனவுள்ளவர்களுக்காக எடுத்த புது முயற்சி…
சாமானியர்களும் ஹீரோ தான்… சினிமா கனவுள்ளவர்களுக்காக எடுத்த புது முயற்சி…

புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது கட்சி கொள்கைத் தலைவர்களில் ஒருவராக காமராஜரை முன்னிருத்தியிருக்கும் நிலையில், காமராஜரின் சிறப்புகளை குறிப்பிட்டு முதலமைச்சர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More