Author: Namadhu Arasu

சினிமாதமிழ்நாடு

நடிகர் டில்லிகணேஷ் மறைவு திரை உலகுக்கு பெரிய இழப்பு….

மறைந்த பிரபல நடிகர் டெல்லி கணேஷின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது மகனும் நடிகருமான மஹா பேசியுள்ளார்.

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு 11 மணியளவில் தூக்கத்திலேயே காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரை நாடகங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்.

இந்நிலையில், டெல்லி கணேஷின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது மகனும் நடிகருமான மஹா பேசியுள்ளார்.அதில், ‘அப்பாவுக்கு 80 வயது. அவருக்கு வயது முதிர்வின் காரணமாக சில உடல் பிரச்சினைகள் இருந்தது’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் பேசியுள்ள மகா, ‘நேற்றிரவு வழக்கம்போல் மாத்திரை கொடுக்க சென்றோம். அப்போது அவரின் உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை. மருத்துவரை அழைத்து சோதனை செய்தபோதுதான், அப்பா உயிரிழந்தது தெரியவந்தது.எனது அக்காவுடன் நேற்றிரவு எப்போதும் போல நன்றாகத்தான் பேசிக்கொண்டு இருந்தார் அப்பா. ஆனால், திடீரென இப்படி ஆகிவிட்டது. எங்களுக்கு மீள முடியாத இழப்பு இது’ என மஹா உருக்கமாக பேசியுள்ளார்.

Read More
விளையாட்டு

BCCI: டெஸ்டில் படுதோல்வி 

நியூசிலாந்து தொடரை இழந்த இந்தியா:
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது தொடர்பாக, பிசிசிஐ ஒரு முழுமையான மதிப்பாய்வை நடத்தியுள்ளது. இதில், மும்பையில் நடைபெற்ற கடைசி டெஸ்டுக்கான வீரர்கள் தேர்வு, ஜஸ்பிரித் பும்ராவிற்கு திடீரென ஓய்வளிக்கப்பட்டது மற்றும் கவுதம் கம்பீரின் பயிற்சி முறை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி ஆகியோருடன் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர். தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆன்லைனில் வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தொடரின் போது அணி நிர்வாகம் எடுத்த சில முடிவுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்:
கூட்டத்தில், கம்பீரின் பயிற்சி முறை அவருக்கு முன்பாக அந்த பதவியில் இருந்த ராகுல் டிராவிட்டிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ள நிலையில், அவரது தலைமையில் அணி எவ்வாறு பழகி வருகிறது என்பது குறித்தும் விவாதங்கள் நடந்தன. மூன்றாவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் அணியின் துணை கேப்டன் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது மற்றும் புனேவில் இதேபோன்ற மேற்பரப்பில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அணி ஏன் மீண்டும் ரேங்க் டர்னரைத் தேர்ந்தெடுத்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே, “பும்ரா இல்லாதது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்தாலும் விவாதிக்கப்பட்டது. ரேங்க் டர்னர் ஆடுகளங்களில் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படாவிட்டாலும், மீண்டும் மும்பை போட்டியில் ரேங்க் டர்னரை தேர்தெடுத்தது ஏன் என்பது முக்கிய விவாதமாக இருந்ததாக” பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கம்பீர் மீது அதிருப்தி?
திருத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கம்பீர், ரோகித் மற்றும் அஜித் அகர்கள் ஆகிய மூவருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கம்பீரின் பயிற்சி முறை கேள்விக்குள்ளாக்கப்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இந்திய அணியின் ஆலோசனைக் குழுவில் உள்ள சிலர் தலைமை பயிற்சியாளருடன் இணக்கமாக இல்லை என்பதை நேற்றைய கூட்டம் உணர்த்துவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கம்பீர் வந்த பிறகு தான் இந்திய அணியின் செயல்பாடு மிக மோசமாக உள்ளதாக, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் ஆலோசனைக் குழுவில் ஒற்றுமை இல்லை என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, இந்திய அணி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு பிரிவுகளாக ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளது.

Read More
தமிழ்நாடுவணிகம்

பேங்க் லாக்கர் கட்டணம் உயர்வு…

பல்வேறு வங்கிகளின் லாக்கர் சேவைக்கான கட்டண விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வங்கிகளில் லாக்கர் சேவை:
வங்கி லாக்கர் சேவைக்கான வாடகை, பாதுகாப்பு மற்றும் நியமனம் தொடர்பான சில விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, SBI, ICICI, HDFC மற்றும் PNB போன்ற நாட்டின் முன்னணி வங்கிகளில் இந்த விதி அமல்படுத்தப்பட உள்ளது. இந்த அனைத்து வங்கிகளுக்கும் இடையேயான கட்டணங்கள் மற்றும் இப்போது எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் போன்ற தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தனிப்பட்ட வாடிக்கையாளர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், கிளப்புகள் போன்ற பல்வேறு வகை வாடிக்கையாளர்களுக்கு, லாக்கர் வசதி சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. ஆனால், சிறார்களின் பெயரில் வங்கிகள் லாக்கர்களை ஒதுக்குவதில்லை. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு வாடகை அடிப்படையில் லாக்கர் சேவையை வழங்குகின்றன.

பாதுகப்பு அம்சங்கள்:
பாதுகாப்பைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களின் விலைமதிப்பற்ற பொருட்களின் பாதுகாப்பு அவர்களின் கட்டணத்தை விட பாதுகாப்பானது என்பதை வங்கிகள் உறுதி செய்கின்றன. பணம், நாணயம், ஆயுதங்கள், மருந்துகள், வெடிபொருட்கள், கடத்தல் பொருட்கள், அழிந்துபோகக்கூடிய பொருட்கள், கதிரியக்க பொருட்கள், சட்டவிரோத பொருட்கள், அபாயகரமான பொருட்கள் மற்றும் இடையூறுகளை உருவாக்கக்கூடிய பொருட்கள் ஆகியவற்றிற்கு வங்கி லாக்கர்களில் அனுமதி இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

கட்டணம்:
எகானமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, SBI, ICICI வங்கி, HDFC வங்கி மற்றும் PNB ஆகியவற்றின் லாக்கர் வாடகையானது வங்கிக் கிளை, இருப்பிடம் மற்றும் லாக்கரின் அளவைப் பொறுத்து மாறுபடும்.

எஸ்பிஐ லாக்கர் வாடகை
சிறிய லாக்கர்: ரூ 2,000 (மெட்ரோ/நகர்ப்புறம்) மற்றும் ரூ 1,500 (அரை நகர்ப்புறம்/கிராமப்புறம்)
நடுத்தர லாக்கர்: ரூ 4,000 (மெட்ரோ/நகர்ப்புறம்) மற்றும் ரூ 3,000 (அரை நகர்ப்புறம்/கிராமப்புறம்)
பெரிய லாக்கர்: ரூ 8,000 (மெட்ரோ/நகர்ப்புறம்) மற்றும் ரூ 6,000 (அரை நகர்ப்புறம்/கிராமப்புறம்)
கூடுதல் பெரிய லாக்கர்: ரூ 12,000 (மெட்ரோ/நகர்ப்புறம்) மற்றும் ரூ 9,000 (அரை நகர்ப்புறம்/கிராமப்புறம்)
ஐசிஐசிஐ வங்கி லாக்கர் வாடகை
கிராமப்புறங்கள்: 1,200 முதல் 10,000 ரூபாய்
பாதி நகர்ப்புற பகுதிகள்: 2,000 முதல் 15,000 ரூபாய்
நகர்ப்புறங்கள்: 3,000 முதல் 16,000 ரூபாய்
மெட்ரோ: 3,500 முதல் 20,000 ரூபாய்
மெட்ரோ+ இடம்: ரூ 4,000 முதல் ரூ 22,000 வரை
HDFC வங்கி லாக்கர் கட்டணங்கள்
மெட்ரோ கிளைகள்: 1,350 முதல் 20,000 ரூபாய்
நகர்ப்புறங்கள்: 1,100 முதல் 15,000 ரூபாய்
பாதி நகர்ப்புற பகுதிகள்: 1,100 முதல் 11,000 ரூபாய்
கிராமப்புறங்கள்: 550 முதல் 9,000 ரூபாய்
PNB லாக்கர் கட்டணங்கள்
கிராமப்புறங்கள்: 1,250 முதல் 10,000 ரூபாய்
நகர்ப்புறங்கள்: 2,000 முதல் 10,000 ரூபாய்
வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர்களை எந்தவித கட்டணமும் இன்றி 12 முறை இலவசமாக அணுக வங்கி விதிகள் அனுமதிக்கப்படுகின்றன. , அதன் பிறகு ஒவ்வொரு கூடுதல் வருகைக்கும் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Read More
தமிழ்நாடு

 முதலமைச்சர் கள ஆய்வு! …தமிழகத்தின் முக்கிய செய்திகள் ….

கள ஆய்வுக்காக இன்று விருதுநகர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விருதுநகர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரம்மாண்ட ரோட் ஷோ நடத்துகிறார் – நாளையும் நேரில் ஆய்வு
வங்கக்கடலில் அடுத்த 32 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
தமிழகம் முழுவதும் நவம்பர் 23ம் தேதி கிராம சபைக் கூட்டம் – நடக்கும் இடம், நேரத்தை தெரியப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதால் முன்னெச்சரிக்கையில் தமிழக அரசு
தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னையில் இன்று அதிகாலை முதலே பல இடங்களில் திடீர் மழை – அடுத்த 2 நாட்கள் இரவில் மழை பெய்யும் என்று கணிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை – கணக்கில் வராத கட்டுக்கட்டான பணம் பறிமுதல்
தமிழ்நாட்டில் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு; பெரிய வெங்காயம் கிலோவிற்கு ரூபாய் 120க்கு விற்பனை
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் – தேவஸ்தானம் அதிரடி
முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

Read More
Uncategorizedஉலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்: குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக் என்றும் ட்ரம்ப் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவுக்கு புதிய தொடக்கமாக அமையட்டும் என்றும் ,அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில், ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப்

இந்த நேரத்தில் உங்கள் மத்தியில் நான் மிகுந்த அன்பை உணர்கிறேன். மேலவையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம், இந்தளவு வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். எனக்காக பல பகுதிகளில் பிரசாரம் செய்த எலான் மஸ்கிற்கு நன்றி. துணை அதிபராக
தேர்வாகும் ஜேடி வான்ஸ்-க்கு வாழ்த்துகள். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம் என்றார்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

இன்று கந்த சஷ்டி விரதம், திருச்செந்தூரில் சூரசம்ஹார தினம். சஷ்டி திதி, பூராடம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய தினம். இன்று ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.

Read More