rasipalan

RASI PALANஆன்மீகம்தமிழ்நாடு

மே 19 முதல் 31 வரை எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான இருவார ராசிபலன் 

மேஷம்: நல்லவை நடக்கத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். உங்கள் திறமை பலரால் பாராட்டப்படும். வீட்டில் விசேஷங்கள் அணிவகுத்து வரும். தம்பதியர் இடையே அன்யோன்யம் உருவாகும். பூமியால் ஆதாயம் உண்டு. வர்த்தகத்தில் பழைய பாக்கிகள் திடீரென்று வசூலாகும். அரசுத் துறையினருக்கு ஏற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். அரசியல் சார்ந்தோர்க்கு புகழ், பாராட்டு கிட்டும். மேலிடத்தின் ஆதரவு கூடும். கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். பயணப்பாதையில் வேகம் வேண்டவே வேண்டாம். தலைவலி, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். சுப்ரமண்யர் வழிபாடு சுபிட்சம் சேர்க்கும்.

ரிஷபம்: மனதில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். திறமைக்கு ஏற்ற வகையில் அலுவலகத்தில் அந்தஸ்து உயரும். யாரிடமும் வீண் ரோஷம் வேண்டாம். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாரிசுகளின் திருமணத் தடை நீங்கும். பூர்வீக சொத்து சேரும். பெற்றோர் உடல்நலம் சீராகும். ஆபரணங்களை இரவல்தர, பெற வேண்டாம். தொழில், வாணிபத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் அவசியம். அரசுத் துறையினருக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு நிதானம் முக்கியம். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். ரத்த அழுத்தம், அடிவயிறு, நரம்பு உபாதைகள் வரலாம். ஈசன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.

மிதுனம்: சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் சுபிட்சங்கள் வந்து சேரும். பணியிடத்தில் சுமுகப் போக்கு நிலவும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரம் தவறாது செய்யுங்கள். இல்லத்தில் இன்சொல் பேசுங்கள். சுபகாரியங்களின் வீண் கேளிக்கை தவிருங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஒப்பந்தங்கள் பத்திரம். அரசுப் பணியில் உள்ளோர் கவனமாகச் செயல்படுவது நல்லது. அரசியல் சார்ந்தவர்களுக்கு பேச்சில் நிதானம் அவசியம். படைப்பு,கலைத்துறையினர் ரகசியங்களைப் பரமரகசியமாக வையுங்கள். ரத்த நாளம், அலர்ஜி, சுவாசம், ஜீரண உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

கடகம்: திறமைகள் பளிச்சிடத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரத்தொடங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வீட்டில் விசேஷங்கள் வரும். ரத்தபந்தங்களால் ஆதரவு கிட்டும். அசையும் அசையா சொத்து சேரும். வழக்குகளில் நிதானம் அவசியம். செய்யும் தொழிலில் முயற்சி முக்கியம். ஒப்பந்தங்களில் கவனித்துக் கையெழுத்திடுங்கள். அரசுத் துறையினர் அமைதியாகச் செயல்படுங்கள். அரசியல் சார்ந்தோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். பழுதுபட்ட வாகனத்தை உடன் சீரமையுங்கள். இஷ்ட அம்மன் வழிபாடு, இனிமை சேர்க்கும்

சிம்மம்: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் வீண் தர்க்கம் யாரிடமும் வேண்டாம். பொறுப்புகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இல்லத்தில் இன்சொல் அவசியம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். வீடு, வாகனம் மாற்ற வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் வளர்ச்சி வரத்தொடங்கும். பழைய கடன்கள் பைசலாகும். அரசுத் துறையினர்க்கு ஏற்றம் உறுதியாகும்.அரசியல் சார்ந்தோர், மேலிடத்தின் பேச்சைக் கேட்டு நடப்பதே நல்லது. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வரும். பயணப்பாதையில் கவனச் சிதறல் தவிருங்கள். அடிவயிறு,கொழுப்பு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு, பிரகாசிக்கச் செய்யும்.

கன்னி: திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அலட்சியமும் அவசரமும் வேண்டாம். எதிர்பாரா இடமாற்றம் வந்தால் தவிர்க்காதீர்கள். வீட்டில் விட்டுக் கொடுத்தால் விசேஷங்கள் வரும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பழைய கடன்களில் அலட்சியம் கூடாது. பத்திரங்கள் எதையும் பத்திரமாக வையுங்கள். வர்த்தகத்தில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி உண்டு. அரசுப் பணிபுரிவோர், கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள். அரசியல் சார்ந்தோர் பிறர் சொல் கேட்டால் பெரும்பழி வரலாம், யோசித்து செயல்படுங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். மறைமுக உறுப்பு, முதுகு உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

துலாம்: எண்ணம்போல் ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் தடைபட்ட உயர்வுகள் தடை நீங்கி வந்து சேரும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வீடு, வாகன யோகம் உண்டு. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம். அரசுப் பணியிலுள்ளோர்க்கு இஷ்டம்போல இடமாற்றம் கிட்டும். அரசியல் துறையினர்க்கு மேலிடத்தின் ஆதரவு கிட்டும். திடீர் பதவிக்கு வாய்ப்பு உண்டு. கலை, படைப்புத் துறையினரின் கனவுகள் நனவாகத் தொடங்கும். பயணப் பாதையில் போதுமான ஓய்வு முக்கியம். அஜீரணம்,கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.

விருச்சிகம்: சோம்பல் தவிர்த்தால், உயர்வுகள் வரத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். பிறர் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். இளம் வயதினர், பெற்றோர் பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழிலில், சுணக்கம் தவிர்த்தால், சீரான வளர்ச்சி உண்டு. அரசுப்பணியில் உள்ளோர்க்கு அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிட்டும். அரசியல் சார்ந்தோர் வீண் கேளிக்கை தவிர்ப்பதும், வாக்கில் கவனம் செலுத்துவதும் நல்லது. கலை, படைப்புத் துறையினர் சிலருக்கு அரசுவழி பாராட்டு கிட்டும். இரவுநேரப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். தொற்றுநோய், ரத்த அழுத்த மாற்றம், தூக்கமின்மை வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

தனுசு: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்பு உணர்வு மிகமிக முக்கியம். கையெழுத்திடுகையில் அலட்சியமும் பணியில் கூடாது. வீண் புலம்பல் விபரீதமாகலாம், தவிருங்கள். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். விட்டுக்கொடுத்தால் விசேஷங்கள் வரத்தொடங்கும். தம்பதியர், ப்ரஸ்பரம் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளிடம் வாக்குவாதம் வேண்டாம். வர்த்தகத்தில் நேரடி கவனமும், நேர்மையும் மிகமிக முக்கியம். அயல்நாட்டு வர்த்தக அனுமதிகள் கைகூடும். அரசுத் துறையினர் கவனத்தை திசைதிருப்பாமல் செயல்படுங்கள். அரசியல் சார்ந்தோர்க்கு நிதானம் மிக அவசியம். கலை, படைப்புத் துறையினர் எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். இரவுப் பயணம் தவிருங்கள். பல், எலும்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு,மங்களம் சேர்க்கும்.

மகரம்: சீரான நன்மைகள் வரத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் புதிய பொறுப்பும் அதனால் பெருமையும் அதிகரிக்கும். பிறரால் ஏற்பட்டிருந்த வீண்பழி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு,மனை யோகம் உண்டு. குடும்ப ரகசியங்களை பொது இடத்தில் பேசவேண்டாம். செய்யும் தொழில் செழிக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அரசியல் சார்ந்தோர்க்கு பாராட்டு, பதவி வாய்ப்பு உண்டு. அரசுப் பணியினர் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு கணிசமான வாய்ப்புகள் வரும். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. இடுப்பு, அடிவயிறு, கழுத்து, முதுகு, கால் உபாதைகள் வரலாம். நவகிரஹ குருபகவான் வழிபாடு, கோடி நன்மை சேர்க்கும்.

கும்பம்: உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை உரிவர்களால் பேசப்படும். இடமாற்றம், பதவி, ஊதியம் மனம்போல கிட்டும். குடும்பத்தில் அமைதி உருவாகும். அது நிலைக்க, வாக்கில் இனிமை வேண்டும். வீடு,மனை மாற்ற, புதுப்பிக்க வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் வளர்ச்சி சீராகும். பிறரை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். அரசுப் பணியில் உள்ளோர்க்கு திடீர் பதவி,பொறுப்பு வரும். அரசியல் சார்ந்தவர்கள் பிறருக்கு ஜாமீன் தருவதை தவிர்ப்பது நல்லது. கலை, படைப்புத் துறையினர் சோம்பலை விரட்டுவது முக்கியம். பயணங்கள் அதிகரித்தாலும் அதனால் ஆதாயம் உண்டு. இடுப்பு, கண், நரம்பு உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்

மீனம்: வாக்கில் கவனம் இருந்தால், வாழ்க்கை இனிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்களுக்கு உரிய பெருமைகள் சேரும். பிறர் தவறை பெரிது படுத்த வேண்டாம். பொறுப்புச் சுமை அதிகரிக்கலாம். திட்டமிட்டுச் செய்யுங்கள். இல்லத்தில் சுமுகப் போக்கு நிலவும். பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளைக் கேட்டால் சுபதடைகள் நீங்கும். தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். வர்த்தகத்தில் அலட்சியம் கூடாது. அரசியல் சார்ந்தோர்க்கு வாக்கில் நிதானம் தேவை. அரசுப்பணியில் உள்ளோர் கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனமாக இருங்கள். கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறலாம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீரமையுங்கள். தூக்கமின்மை, சோர்வு, சுளுக்கு, பல் உபதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, வாழ்வை மணக்கச் செய்யும்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

மகாபாக்ய யோகம்… இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் தான்!

வேத ஜோதிடத்தின்படி, சந்திரன் மட்டுமே வேகமாக நகரும் கிரகமாக உள்ளது. சந்திரன் இரண்டரை நாட்கள் மட்டுமே ஒரு ராசியில் இருப்பார். இதன் காரணமாக பல கிரகங்களுடன் இணைந்து சந்திரன் சேர்க்கையை உருவாக்குகிறது. சந்திரனின் இந்த சேர்க்கையால் சுப, அசுப யோகங்கள் உருவாகும்.

வேத சாஸ்திரத்தின்படி, இன்று (டிசம்பர் 17) மாலை 6.47 மணிக்கு சந்திரன் கடக ராசிக்குள் நுழைந்து வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை அங்கேயே இருக்கும். ஏற்கனவே செவ்வாய் கிரகமானது கடக ராசியில் பிற்போக்கு நிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில், இந்த செவ்வாய்-சந்திர சேர்க்கை சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் செவ்வாய், சந்திரன் சேர்க்கை ஏற்படுவதால் மகாபாக்யம் என்ற ராஜயோகம் உருவாகிறது. இது செவ்வாய்-சந்திரன் இணைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகம் அமைவதால், மக்கள் நிதி ஆதாயத்துடன் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மகாபாக்ய யோகத்தினால் பலன் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரலாம். இந்த காலகட்டத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். வசதிகள் பெருகும். கனவுகளும் லட்சியங்களும் நனவாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்: செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை ஒன்பதாம் வீட்டில் நடக்கும். இந்த நேரத்தில் பல புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற முடியும். நிறைய பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் செய்யும் திட்டங்களின் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம். குருவின் முழு ஆதரவையும் பெறுவார்கள்.
கன்னி: செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை பதினொன்றாம் வீட்டில் நடைபெறும். இத்தகைய சூழலில் இந்த ராசிக்காரர்களுக்கு மகாபாக்ய யோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்பின் பலனை இப்போது நீங்கள் அறுவடை செய்வார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும்.

Read More
ஆன்மீகம்

ராசி பலன்-டிசம்பர் 1 முதல் 15 வரை… 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் 

மேஷம்:எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு பணிசார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பு வரலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் விலகி இருந்த நிலை மாறும். இளம் வயதினர் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். சுபகாரியங்களில் சுயமுடிவைத் தவிருங்கள். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகனம் மாற்ற சந்தர்ப்பம் வரலாம். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும். அரசு, அரசியலில் உள்ளோர் ஆதரவு அதிகரிக்கப் பெறுவீர்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு வாய்ப்புகள் தேடிவரும். அதில் கவனம் தவறாமை முக்கியம். தலைவலி, வயிறு உபாதை, பூச்சி தொல்லை வரலாம். துர்க்கையைத் துதியுங்கள். வாழ்க்கை செழிக்கும்.
ரிஷபம்: முயற்சிகள் பலனளிக்கும் காலகட்டம். பணியிடத்தில் மாற்றமும் ஏற்றமும் வரும். இருக்கும் பணியை விட்டுவிட்டுப் புதிதாகத் தேடுவதை இக்காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். பூர்வீக சொத்து சேரும். சுபகாரியத் தடைகள் விலகும். வரவு சீராகும். வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிக்கப் பழகுவது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சிகள் அவசியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு வாக்கில் நிதானம் முக்கியம். கலை, படைப்புத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். ஒற்றைத் தலைவலி, பற்களில் உபாதை வரலாம். ஏழுமலையானை வணங்குங்கள். ஏற்றங்கள் உறுதியாகும்.
மிதுனம்: தற்பெருமையைத் தவிர்த்தால், தடைகள் எல்லாம் தகரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் வாக்குக்கு செல்வாக்கு உயரும். எதிர்பாரா இடமாற்றம் வரலாம். இல்லத்தில் இனிமை நிலவும். அதை நிலைக்கச் செய்ய வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வீடு, வாகனம் புதுப்பிக்க வாங்க சந்தர்ப்பம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். அந்நிய தேச வர்த்தகத்தில் தஸ்தாவேஜுகளை பத்திரமா வையுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர் மீது வீண்பழி வரலாம், கவனமாக இருங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சியால் வெல்லலாம். வாகனத்தில் செல்லும்போது லாகிரி வேண்டாம். வயிறு, முதுகு, கண் உபாதைகள் வரலாம். மாருதியை வணங்குங்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்: சிந்தித்து செயல்பட்டால், சிறப்புகள் சேரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பலகால இடமாற்றத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். உங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வளர்ப்புப் பிராணிகளிடம் விலகி இருங்கள். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். கூட்டுத் தொழிலில் கவனமாக இருங்கள்.அரசு, அரசியலில் உள்ளோர் அமைதி காப்பதே நல்லது. கலைஞர்கள் படைப்பாளிகள் எதிர்பாலரிடம் எச்சரிக்கையாக இருங்கள். இரவுப் பயணம் தவிருங்கள். எலும்பு, மூட்டு, பற்கள், நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்டமகானை ஆராதியுங்கள். இனியவை எல்லாம் சேரும்.
சிம்மம்: சிந்தனையை சிதறவிடாமல் இருக்க வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எதிலும் நேரடி கவனமும் நிதானமும் அவசியம். பொறுப்புகளில் திட்டமிடல் முக்கியம். குடும்பத்தில் அமைதி நிலவும். இளம் வயதினர், பெற்றோர் பெரியோர் வாக்குக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். கடன்களை நேரடியாகப் பைசல் செய்வது நல்லது. செய்யும் தொழிலில் சட்டத்தை மதித்தல் முக்கியம். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்குறுதிகளில் நிதானமாக இருங்கள். கலை,படைப்புத் துறையினர் சோம்பலை விரட்டுங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். கண்கள்,காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். கணபதியை வணங்குங்கள். இஷ்டங்கள் ஈடேறும்.
கன்னி: வாக்கில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் துணிவைவிட பணிவுதான் நல்லது. பொறுப்புச் சுமை அதிகரித்தாலும் புலம்பல் கூடாது. எதிர்பாரா இடமாற்றம் வந்தால் ஏற்பதே ஏற்றம் தரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். ரத்த பந்தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும்.அரசு, அரசியல் துறையினர், பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். கலை, படைப்புத் துறையினரின் கனவுகள் நனவாகத் தொடங்கும். இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்கள். ரத்தநாளம், மறைமுக உறுப்பு, அலர்ஜி உபாதைகள் வரலாம். நரசிம்மரை வணங்குங்கள். நல்லவை நடக்கும்.
துலாம்: திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டால், நன்மைகள் அதிகரிக்கத் தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் நேரம்தவறாமை மிகமிக முக்கியம். சிலருக்கு இடமாற்றம் வந்தாலும் அதனால் பெருமைகளும் சேரும். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். அடுத்தடுத்து விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசினால், நல்லவை தொடரும். வரவு அதிகரிக்கும்போது, சேமிப்பை உயர்த்திக் கொள்வது புத்திசாலித்தனம். செய்யும் தொழிலில் சீரான லாபம் தொடரும். ஒப்பந்தங்களை நேரடியாக கவனியுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலைஞர்கள் முயற்சிகள் பலிதமாகும். பயணத்திற்கு முன் போதுமான ஓய்வு முக்கியம். எலும்புத் தேய்மானம், அஜீரணம், தூக்கமின்மை வரலாம். அனுமனை வணங்குங்கள், ஆனந்தம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: கர்வம் தவிர்த்தால், சர்வமும் நன்மையாகும் காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் எண்ணம் எப்போதும் வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாக்கில் இனிமை இருந்தால் வாழ்க்கையும் இனிக்கும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். ஆடை, ஆபரணம், சொத்து சேரும். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு பதவி, பாராட்டுகள் கிட்டலாம். கலைஞர்கள் படைப்பில் முழுகவனம் செலுத்துங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்கள். காது, மூக்கு, தொண்டை, உணவுக்குழாய் உபாதைகள், நரம்பு உபாதைகள் வரலாம். ரங்கநாதரை வணங்குங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.
தனுசு: பொறுப்பு உணர்வுடன் பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் எண்ணமும் ஏனோதானோ செயல்களும் கூடாது. பிறரை நம்பி பணியிட ரகசியங்களைப் பகிரவேண்டாம். கோப்புகளை பத்திரமாக வையுங்கள். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். வார்த்தைகளில் நிதானம் மிக முக்கியம். வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். பணவரவுக்கு ஏற்ப செலவுகளும் சேர்ந்து வரும். கடன் வாங்க, கொடுக்க வேண்டாம். சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள். செய்யும் தொழிலில் முழு கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம். கலை, படைப்புத் துறையினர் தலைகனத்தை இறக்கிவிட்டு செயல்படுங்கள். பயணப்பாதையில் உடைமைகள் பத்திரம். அடிவயிறு, முதுகு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். பெருமாள், தாயாரை வணங்குங்கள். பெருமைகள் நிலைக்கும்.
மகரம்: நிலையான பாதையும் நிம்மதியான சூழலும் ஏற்படக்கூடிய காலகட்டம். அதே சமயம் பணியிடத்தில் பொறுமையும் பொறுப்பு உணர்வும் அவசியம். பதவி, இடமாற்றங்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வது நல்லது. இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். பண வரவு சீராக இருக்கும். அதை சுப செலவாகவோ, சொத்தாகவோ சேமிப்பது நல்லது. செய்யும் தொழில் செழிப்பாகும். புதிய முதலீடு, தற்போதைக்கு வேண்டாம். அரசு, அரசியலில் மாற்றமும் ஏற்றமும் உண்டு. கலைஞர்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். வாகனத்தில் வேகத்தைத் தவிருங்கள். கழுத்து, மூட்டு, பாதம், முதுகுத்தண்டுவட உபாதைகளை உடனே கவனியுங்கள். ரங்கநாதரை வணங்குங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.
கும்பம்: தன்னம்பிக்கையோடு செயல்பட்டால், உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைகள் பளிச்சிடும். பிறரால் பழி வரலாம், கவனம் முக்கியம். குடும்பத்தில் குதூகல சூழல் உருவாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்து சேரும். ரத்தபந்த உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ, பெறவோ வேண்டாம். செய்யும் தொழிலில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு மேலிடத்துப் பாராட்டு மகிழ்ச்சி தரும். கலை,படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். பயணத்தில் வித்தைகாட்டல் கூடாது. அடிவயிறு, நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மனை வணங்குங்கள். எண்ணங்கள் ஈடேறும்.
மீனம்: அவசரமும் அலட்சியமும் தவிர்க்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் கவனச்சிதறல் கூடாது. பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். புறம் பேசுவது, கேட்பது கூடவே கூடாது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தில் நிலவிய குழப்பம் மறையும். சுபகாரியத் தடைகள், குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். பூமியால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்லும். அரசுக்கு உரிய வரி முதலானவற்றை தவறாமல் செலுத்துங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்தின் அனுமதி பெறாத செயல்களைத் தவிருங்கள். கலைஞர்கள், படைப்பு ரகசியத்தைப் பகிரவேண்டாம். வாகனப் பழுதை உடனுக்குடன் கவனியுங்கள். அலர்ஜி, படபடப்பு, ஜீரண உபாதைகள் வரலாம். ஏழுமலையானைக் கும்பிடுங்கள். வாழ்க்கை ஏற்றம்பெறும்.

Read More