heavyrain

தமிழ்நாடுதொழில்நுட்பம்மாவட்டம்

தொடர் கனமழை.. இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள “மொந்தா” புயல் இன்று கரையை கடக்கவுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டாலும், ஆங்காங்கே கனமழை நீடிக்கும் என்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்தும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மொந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
நேற்று முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடை விடாது மழை தொடர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும், மழையை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை மேலும் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 கி.மீ., வேகம்.. ‘மொந்தா’ புயல் எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்
மொந்தா புயல் சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் தீவிரமாகி, ஆந்திர கடலோரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.

வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை & காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீச வாய்ப்பு.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..

கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்தவகையில் இன்று (அக்.22-ம் தேதி) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 8 மணி நேர நிலவரப்படி, 19 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (அக்டேபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த லிஸ்ட்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சிவகங்கை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில், வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதா என்பது இன்று தான் தெரியும் என்று வானிலை மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
காற்றழுத்தம் காரணமாக, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமுதா, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், அதன்பிறகே புயல் உருவாகுமா என்பது பற்றி கணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று கனமழை – வானிலை மையம் 

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் இன்று (19.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (20.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (20.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (20.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அடுத்த 2 மணி நேரத்தில்…” – சென்னைக்கு மழை எச்சரிக்கை கொடுத்த தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

Read More