Author: Namadhu Arasu

Covid19இந்தியாதமிழ்நாடு

தமிழ்நாட்டில் 27 பேர்..! இந்தியா முழுக்க 511 பேர்..! கொரோனா தொற்று பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,170 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. 7 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடு

பாமக தலைவராக அன்புமணி… இளைஞர் சங்க தலைவராக சவுமியா!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.
45 ஆண்டுகள் இந்த கட்சியை கடமை, கன்னியம், கட்டுப்பாடோடு நடத்தி வந்தேன் அதற்கு அன்புமணி கலங்கம் ஏற்படுத்திவிட்டார் என ராமதாஸ் கருத்து.
நான் தான். அன்புமணியை 35 வயதில் என் சத்தியத்தியத்தையும் மீறி மத்திய அமைச்சராக நான் தான் தவறு செய்துவிட்டேன்.
இந்த நிலையில் நேற்றே அன்புமணி ராமதாஸ் , இன்று முதல் நிர்வாகிகளை தனது அலுவலகத்தில் சந்திக்கிறார் என்ற அறிவிப்பும் வந்தது
பாமக பொதுக்​குழு​வில், தனது மகள் வழி பேரனை பாமக இளைஞர் சங்க தலை​வ​ராக ராம​தாஸ் அறி​வித்​த​தில் வெளிப்​படை​யாக வெடித்த அப்பா – பிள்​ளைக்​கான அதி​கார யுத்​தம் இருக்க இருக்க உக்​ர​மாகிக் கொண்டே தான் போகிறது. இந்த நிலை​யில், தனது அதி​காரத்தை நிலைநிறுத்​திக் காட்ட பாமக மற்​றும் வன்​னியர் சங்க நிர்​வாகி​களை அழைத்து ராம​தாஸ் நடத்​திய ஐந்து ஆலோ​சனைக் கூட்​டங்​களும் பிசுபிசுத்​துப் போய்​விட்​டன. கட்​சிக்​குள் இனி அன்​புமணி தான் எல்​லாமே என தெளி​வாக தெரிந்து போன​தால் பெரு​வாரி​யான நிர்​வாகி​கள் தோட்டத்து ஆலோ​சனைக் கூட்​டங்​களை தைரிய​மாகப் புறக்​கணித்து விட்​டனர். இதில் 3 எம்​எல்​ஏ-க்​களும் உள்​ளடக்​கம்.

தனது ஆலோ​சனை கூட்​டத்​துக்கு வரா​மல் புறக்​கணிப்​பவர்​களை தயவு பார்க்​காமல் பொறுப்​பிலிருந்து நீக்​கும் முடி​வில் தான் ராம​தாஸ் முதலில் இருந்​தா​ராம். ஆனால், சுமார் 80 சதவீதத்​துக்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​கள் புறக்​கணித்​த​தால், கட்சி நலன் கருதி யாரை​யும் கைவைக்க முடி​யாமல் பொறுமை காக்​கி​றா​ராம் மருத்​து​வர். அதேசம​யம், வெளிப்​படை​யாகப் பார்த்​தால் இது அதி​காரப் போட்​டி​யாக தெரிந்​தா​லும் உள்​ளுக்​குள் வேறு பல கணக்​கு​களும் ஓடிக்​கொண்​டிருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.
இது தொடர்​பாக பாமக வட்​டாரத்​தில் நம்​மிடம் பேசி​ய​வர்​கள், “கட்​சிக்​கான வரவு செல​வு​கள், அறக்​கட்​டளை சொத்து உள்​ளிட்ட அனைத்​தை​யும் இப்​போது மருத்​து​வர் அய்யா தான் கவனித்து வரு​கி​றார். பாமக தலை​வ​ராக ஜி.கே.மணி இருந்த வரை இதில் எந்​தச் சிக்​கலும் ஏற்​பட​வில்​லை. பாமக தலை​வ​ராக அன்​புமணியை அறி​வித்த பிறகு தான் சிக்​கல் ஆரம்​ப​மானது. முன்​பு, ஒன்​மேன் ஆர்​மி​யாக அனைத்து முடிவு​களை​யும் தானே எடுத்து வந்த அய்​யா​வுக்​கு, மகன் தலை​வ​ராக வந்த பிறகு அப்​படி சுதந்​திர​மாக செயல்பட முடிய​வில்லை.
அய்யா எந்த முடிவை எடுத்​தா​லும் ஏன், எதற்கு என்ற கேள்வி அன்​புமணி தரப்​பிலிருந்து வந்து விழுந்​தது. இது பல நேரங்​களில் அய்​யா​வுக்கு பெருத்த சங்​கடங்​களை உண்​டாக்​கியது. இதனிடையே, மரு​மகள் சவுமியா அன்​புமணி​யும் கட்சி நடவடிக்​கை​களில் தலை​யிட ஆரம்​பித்​தார். இதை அய்யா சுத்​த​மாக விரும்​ப​வில்​லை. சவுமியா சொல்​லித்​தான் அன்​புமணி, பல விஷயங்களிலும் கேள்விகளை எழுப்புகி​றார் என்​பது அய்​யா​வின் புரிதல்.

இந்த நிலை​யில் தான் அய்​யா​வின் விருப்​பத்​துக்கு மாறாக 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக-வுடன் கூட்​டணி அமைத்​தார் அன்​புமணி. இதன் பின்​னணி​யில், தானோ, சவுமி​யாவோ மத்​திய அமைச்​சர் ஆகி​விட வேண்​டும் என்ற திட்​டம் அன்​புமணிக்கு பிர​தான​மாக இருந்​தது. ஆனால், எதிர்​பார்த்​தது எது​வும் நடக்​காது போன​தால், ‘இனி​யா​வது நான் சொல்​வதைக் கேளுங்​கள்’ என்று சொல்​லிப்​பார்த்​தார் அய்​யா. ஆனால், அவர் சொல் எடு​பட​வில்​லை. தேர்​தல் சமயத்​தில் நடந்த வரவு செலவு​கள் குறித்​தும் ‘கணக்கு வழக்​கு’ சர்ச்சை வெடித்​திருக்​கிறது. இதையெல்​லாம் பார்த்​து​விட்​டுத் தான் மகள் வழி பேரன் முகுந்​தனை பாமக இளைஞர் சங்க தலை​வ​ராக திடீரென அறி​வித்​தார் அய்​யா. இதற்கு அன்​புமணி பொது மேடை​யிலேயே எதிர்ப்​புக் கொடி தூக்​கி​னார்.

இந்த நிலையில், அதனால் மக்​கள​வைத் தேர்​தலைப் போல கூட்​டணி விஷ​யத்​தில் அன்​புமணி அவசரப்​பட்​டு​விடக்கூடாது என்​ப​தற்​காக, அதி​முக கூட்​ட​ணியை இறு​தி​செய்ய அமித் ஷா சென்​னைக்கு வந்த நாளில் அன்புமணியை பாமக செயல்​தலை​வராக்​கி, தலை​வர் பொறுப்பை தானே எடுத்​துக் கொண்​டார் அய்​யா. இதை​யும் அன்​புமணி துளி​யும் எதிர்​பார்க்​க​வில்​லை. அய்​யா​வின் இந்த நடவடிக்​கைக்​குப் பிறகு, அன்​புமணி​யும் தனது ஆதர​வாளர்​களை தக்​கவைக்​கும் வேலை​களில் தீவிர​மாக இறங்​கி, அதில் வெற்​றி​யும் கண்​டு​விட்​டார்.

பாமக மற்​றும் வன்​னியர் சங்க நிர்​வாகி​களில் பெரும்​பகு​தி​யினர் அன்​புமணி பக்​கமே நிற்​ப​தால் அய்​யா​வால் அடுத்​த கட்​டத்​துக்​குப் போக​முடிய​வில்​லை. இதனால் நாளுக்கு நாள் அன்​புமணி​யின் கை ஓங்​கிக் கொண்டே வரு​கிறது. இரு​வ​ருக்​கும் இடை​யில் ஜி.கே.மணி​தான் இப்​போது சமா​தான தூது சென்​றபடி இருக்​கி​றார். ஆனால், தூதராக ஜி.கே.மணி வரு​வதையே அன்​புமணி அவ்​வள​வாய் விரும்​பவில்லை என்​கி​றார்​கள். கட்​சிக்​குள் தனது செல்​வாக்​கைக் காட்ட அய்யா அதிரடி நடவடிக்​கை​களை எடுத்​தார். ஆனால், நடப்​பதை எல்​லாம் பார்த்​தால் அது அவரையே பூம​ராங் கணக்​காய் தாக்​கி​விடும் போலிருக்​கிறது” என்​றார்​கள்.

இதனிடையே, மீண்​டும் அன்​புமணியை கட்​சித் தலை​வ​ராக்​கு​வது, இளைஞர் சங்க தலை​வ​ராக சவுமி​யாவை நியமிப்​பது, வன்​னியர் சங்க தலை​வர் பொறுப்பை முகுந்​தனுக்கு தரு​வது என ஒரு சமா​தான உடன்​படிக்கை தைலாபுரம் தோட்​டத்​தில் பேசப்​பட்டு வரு​வ​தாக சொல்​லப்​படு​கிறது. இதற்கு மத்​தி​யில், “எனக்​கும் அன்​புமணிக்​கும் மனக்​கசப்பு இல்​லை. கசப்பு என்று எப்​போதும் நான் கூறியதும் இல்​லை; இனிப்​பான செய்​தி​யை​தான் கூறி வரு​கிறேன்.

இது தொடர்​பாக அடுத்த வியாழக்​கிழமை (மே 29-ம் தேதி) பேசலாம்” என செய்​தி​யாளர்​களுக்கு சேதி சொல்லி இருக்​கி​றார் ராமதாஸ். அதே​போல். தரு​மபுரி மாவட்​டம் கடத்​தூரில் 24-ம் தேதி நடை​பெற்ற கூட்​டத்​தில் பேசிய அன்​புமணி, “அப்​படி நான் என்ன தவறு செய்​தேன்? ஒரு மாத கால​மாக மன உளைச்​சலில் இருக்​கிறேன். எனக்கு தூக்​கமே வரவில்​லை” என குமுறி இருக்​கி​றார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

10, 12ம் வகுப்பு மாணவர்களை இன்று கவுரவிக்கிறார் விஜய்; விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு

த.வெ.க., தலைவர் விஜய் 10, 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை இன்று (மே 30) சந்தித்து கவுரவிக்க உள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில், சட்டசபை தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்ட உள்ளார்.
இன்று(மே 30) சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் என 2000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இதில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பாராட்டப்பட உள்ளனர். பெற்றோர் முன்னிலையில், மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை ஆகியவற்றை, த.வெ.க., தலைவர் விஜய் வழங்க உள்ளார்.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

“அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” – கன்னடம் குறித்து கருத்துக்கு கமல்ஹாசன்

தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசிய கமல்ஹாசன், “ராஜ்குமாருடைய குடும்பம் கர்நாடகாவில் இருக்கும் தனது குடும்பம்” என்றும், “அவர் விழாவுக்கு வந்திருப்பதால் தான் தன்னுடைய பேச்சை தொடங்கும் போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கியதாகக்” கூறினார். மேலும், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” என்றும் கூறினார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கன்னட ரக்‌ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகாவை அவமதித்தால் கமல்ஹாசனின் படங்களுக்கு தடை விதிக்கப்படும்” என்றும், “கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில கன்னட அமைப்புகள் கமல்ஹாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.

இதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. கன்னடமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை. வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், “கன்னடம் குறித்து பேசியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்கவில்லை என்றால் Thug Life படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம்” என்று கர்நாடக அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் பேசிய கமலஹாசன், “அவர்கள் இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளனர். நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. மொழி குறித்த வரலாறுகளை வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் தான் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர், தமிழர், கர்நாடகாவை சேர்ந்த அய்யங்கார் என பலர் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடந்தது இல்லை.
advertisement
கர்நாடகாவில் பிறந்தது தமிழகத்தில் முதலமைச்சர் ஆகியவருக்கு ஒருமுறை பிரச்சினை என்று வந்தபோது கன்னடர்கள் ஆதரவு கொடுத்தததுடன், அந்த முதலமைச்சரை மீண்டும் கர்நாடகத்துக்கே வருமாறு அழைத்தனர். எனவே தக் லைஃப் படத்தையும் மற்றும் கமல்ஹாசனையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மொழிகள் குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அதற்கான கல்வியறிவு அவர்களுக்கு இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே இந்த விஷயம் குறித்த விவாதத்தை வரலாற்று அறிஞர்களிடம், மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடலாம். நான் பேசியது சிவராஜ்குமார் மீதான அன்பில் வந்தவை. நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
advertisement
வடபகுதியைச் சேர்ந்தவர்கள் பார்வையில் இருந்தால் பார்த்தால் அவர்கள் சொல்வது அவர்களுக்கு சரியாக இருக்கும். அதுவே, தென்குமரி பக்கம் இருந்து பார்த்தால் நான் சொன்னது தான் சரியாக இருக்கும். இதில் மூன்றாவது கோணம் உள்ளது. அது நான் சொன்னதுபோல் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை. அவர்கள் இந்த இரண்டுமே சரி என்பார்கள். ஆனால், கன்னடர்கள் நமது குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வடக்கில் இருந்து வந்த மொழியை சேர்ந்தவர்களா எனபதை வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்வார்கள். இது பதில் இல்லை, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
“அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” – கன்னடம் குறித்து கருத்துக்கு கமல்ஹாசன் விளக்கம்!
அதேபோல், “கன்னடம் குறித்து பேசியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்கவில்லை என்றால் Thug Life படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம்” என்று கர்நாடக அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் பேசிய கமலஹாசன், “அவர்கள் இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளனர். நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. மொழி குறித்த வரலாறுகளை வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் தான் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர், தமிழர், கர்நாடகாவை சேர்ந்த அய்யங்கார் என பலர் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடந்தது இல்லை.
கர்நாடகாவில் பிறந்தது தமிழகத்தில் முதலமைச்சர் ஆகியவருக்கு ஒருமுறை பிரச்சினை என்று வந்தபோது கன்னடர்கள் ஆதரவு கொடுத்தததுடன், அந்த முதலமைச்சரை மீண்டும் கர்நாடகத்துக்கே வருமாறு அழைத்தனர். எனவே தக் லைஃப் படத்தையும் மற்றும் கமல்ஹாசனையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மொழிகள் குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அதற்கான கல்வியறிவு அவர்களுக்கு இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே இந்த விஷயம் குறித்த விவாதத்தை வரலாற்று அறிஞர்களிடம், மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடலாம். நான் பேசியது சிவராஜ்குமார் மீதான அன்பில் வந்தவை. நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
வடபகுதியைச் சேர்ந்தவர்கள் பார்வையில் இருந்தால் பார்த்தால் அவர்கள் சொல்வது அவர்களுக்கு சரியாக இருக்கும். அதுவே, தென்குமரி பக்கம் இருந்து பார்த்தால் நான் சொன்னது தான் சரியாக இருக்கும். இதில் மூன்றாவது கோணம் உள்ளது. அது நான் சொன்னதுபோல் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை. அவர்கள் இந்த இரண்டுமே சரி என்பார்கள். ஆனால், கன்னடர்கள் நமது குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வடக்கில் இருந்து வந்த மொழியை சேர்ந்தவர்களா எனபதை வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்வார்கள். இது பதில் இல்லை, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Read More
குற்றம்தமிழ்நாடு

ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 பிரிவுகள் என்னென்ன? முழு விவரம்…

தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மறுநாளே மாணவி அளித்த புகாரின்படி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஞானசேகரன் மற்றும் 29 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி, கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஞானசேகரன் மீது பதியப்பட்ட 11 புகாரிலும், அவர் குற்றவாளி என நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். மேலும் ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் விவரம்:
1. 329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்
2. 126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்.
3. 87 – மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல்.
4. 127(2) – மாணவியை உடலில் காயத்தை ஏற்படுத்துதல்.
5. 75(2) – மாணவியை விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்.
6. 76 – மாணவியை கடுமையாக தாக்குதல்
7. 44 மாணவியின் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல்.
8. 351(3) மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தல்.
9. 238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்.
தகவல் தொழில்நுட்ப சட்டம்:
10. 66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்
11. தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவு 4.
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம் புரிந்துள்ளார் என்றும் இது அரிதிலும் அரிதான வழக்கு என்றும் தெரிவித்தது. எனவே ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, ஞானசேகரனை குற்றவாளி என மீண்டும் தெரிவித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்றார். இதனையடுத்து ஞானசேகரன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஷோபனா, நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண்: 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கினார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழிலதிபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன.

கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு, சுகா​தா​ரம், தொழில், வர்த்​தகம், பொறி​யியல், பொது விவ​காரங்​கள், குடிமைப் பணி மற்​றும் சமூக சேவை உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த ஆண்​டுக்​கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்​தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன.
முதல்​கட்​ட​மாக கடந்த ஏப்​ரல் 28-ம் தேதி 71 பேருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்​கி​னார். மீதம் உள்ள 68 பேருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நடை​பெற்ற விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கர், பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய அமைச்​சர்​கள் அமித்​ஷா, ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர், குமி​தினி லாகியா (மறைவு), சாரதா சின்ஹா (மறைவு) ஆகியோ​ருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார். மறைந்த பத்ம விபூஷண் விரு​தாளர்​கள் சார்​பில் குடும்​பத்​தினர் விருதுகளை பெற்​றுக் கொண்​டனர்​.

பத்ம பூஷண் விருதுதமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரசேகர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் பிபக் தேப்ராய், கைலாஷ் நாத் தீக்சித், ஜாலின் கோஸ்வாமி, மனோகர் ஜோஷி (மறைவு), ஆனந்த் நாக், சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

பத்மஸ்ரீ விருது: தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, எழுத்​தாளர் சீனி விஸ்​வ​நாதன், எம்​.டி. ஸ்ரீநி​வாஸ், தெருக்​கூத்து கலைஞர் புரிசை கண்​ணப்ப சம்​பந்​தன், புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்​சிணா​மூர்த்தி மற்​றும் நாராயணன் (மறைவு), சாஜன் பாஜங்​கா, நீரஜா பாலி​யா, அஜய், ஹர்​சந்​திரன் சிங், பீம் சிங், செலான் ஏக்​நாத், விலாஸ் கஜனன்​ராவ், மகாவீர் நாயக், சோனியா நில்​யானந்த், அசூல் ராமச்​சந்​திர பாலவ், வி.ஆர்​.பஞ்​ச​முகி, லாவ்​ஜி​பாய், சுவாமி பிர​திபிலானந்​தா, பிர​சாந்த் பிர​காஷ், நாகேந்​திர​நாத் ராய், அசோக் லஷ்மண் சரப், அரவிந்த் சர்​மா, அசுதோஷ் சர்​மா, சுபாஷ் கெலுலால் சர்​மா, ஹர்​விந்​தர் சிங், சந்​திர​காந்த் சோம்​பு​ரா, வெங்​கப்பா அம்​பாஜி சுகலேகர், கேரளாவை சேர்ந்த கால்​பந்து விளை​யாட்டு வீரரும் நடிகரு​மான விஜயன், ஆகியோ​ருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார்.

அமெரிக்கவாழ் தமிழர்: சென்னையை பூர்விகமாக கொண்ட சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் அறக்கட்டளை தலைவராக பணியாற்றி வருகிறார். குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதினை அவர் பெற்றுக் கொண்டார்.

Read More
குற்றம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு.. இன்று தீர்ப்பு – ஞானசேகரனுக்கு என்ன தண்டனை..

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் புகழ்பெற்றது. இந்த கல்லூரிக்கு உள்மாநிலம் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பேசி பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் மாணவனை மிரட்டி அனுப்பி உள்ளனர். பின்னர் மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அடையாற்றை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நிதிமன்ற உத்தரவின்படி, மூன்று பெண் ஐ.பி,எஸ் அதிகாரிகள் குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
மூன்று பெண் ஐ.பி,எஸ் அதிகாரிகள் குழு:
இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு ஆள்கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை தீவிரப்படுத்தினர். மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் சி.பி,ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியான அதிமுக வலியுறுத்தி வந்தது.

ஆனால் தமிழக அரசு சி.பி,ஐ விசாரணை தேவை இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.இதனையடுத்து மீண்டும் ஒரு பெண் அளித்த புகாரில் ஞாசேகரன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்ற காவலில் உள்ள ஞான சேகரனை சி.பி.ஐ அதிகாரிகள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

இன்று தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம்
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்கியது.அப்போது தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் இல்லாதவை என்றும் ஞானசேகரன் தரப்பில் முறையிடப்பட்டு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த மனுவை மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து சென்னை அள்ளிகுளம் வளாகத்தில் உள்ளா உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது.இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உடனடியாக சாட்சி விசாரணை தொடங்கியது.

ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?
அரசு தரப்பில் 29 சாட்சியங்களும் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.அதில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றங்கள் அனைத்தும் நிருப்பிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஞானசேகரனுக்கு எதிரான அறிவியல் ரீதியிலான ஆதாரங்கள் உள்ளதாக கூறியதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ததை எடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில் மே 28 ஆம் தேதி வழங்கப்படும் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுத தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. அதே போல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

NSE-ல் சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்கள்… 4 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன்- அடுத்த 3 நகரங்கள்

சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இதுதொடர்பான நிகழ்வை மணி அடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், துணை மேயர் மகேஷ்குமார், தலைமை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ், தேசிய பங்குச் சந்தை தலைமை பொருளாதார வல்லுநர் தீர்த்தங்கர் பட்நாயக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் மூலம் கடனுக்கான வட்டி செலுத்துவது குறையும். இன்றியமையாத உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டப்படும். சென்னை மாநகராட்சியின் பொருளாதார நிலை மேம்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்களை சப்ஸ்கிரைப் செய்வதில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். 4.21 மடங்கு அளவிற்கு அதிகமாக சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்துள்ளது. கிட்டதட்ட 421 கோடி ரூபாய் என்று சொல்லலாம்.
இந்த நிதிப் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு ஆண்டு வட்டியாக 7.97 சதவீதம் கிடைக்கும். இது வங்கிகளில் ஃபிக்சிட் டெபாசிட் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சப்ஸ்கிரிப்ஷன் தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் ரிஷப் ஐஏஎஸ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், இது முதல்முறை அரங்கேறியுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி நிதிப் பத்திரங்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது.
நான்கு மடங்கு சப்ஸ்கிரிப்ஷன்
இதுபோன்ற நிதிப் பத்திரங்களை எதிர்காலத்திலும் வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த பத்திரங்களை 4 மடங்கிற்கும் மேல் சப்ஸ்கிரைப் செய்திருப்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதும், தமிழக அரசின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. அடுத்தகட்டமாக கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய மாநகராட்சிகளும் தேசிய பங்குச் சந்தையில் நிதிப் பத்திரங்களை வெளியிடும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நகரங்கள் ஒவ்வொன்றிலும் தலா 100 கோடி ரூபாய் மதிப்பில் நிதிப் பத்திரங்கள் வெளியிடவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடு

ராஜ்ய சபா எம்.பி தேர்தல் தேதி அறிவிப்பு:தமிழகத்தில் புதிதாக வாய்ப்பு பெறும் 6 பேர் யார்?

6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகின்ற ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வருகின்ற ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.-வின் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி. வில்சன், அ.தி.மு.க-வின் என். சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, தி.மு.க.வுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது, தி.மு.க.வில் வைகோ, அப்துல்லா, வில்சன், சண்முகம் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அ.தி.மு.க.வில் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைகிறது. கடந்த முறை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாசின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

எம்.பி.யாகும் கமல்ஹாசன்:

தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா? அதிமுக சார்பில் தே.மு.தி.கவுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்கப்படுமா? அன்புமணி மீண்டும் போட்டியிடுவாரா? என்பது விரைவில் தெரியவரும். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் இருந்து யார் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

அடையாறு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்: அனகாபுத்தூரில் 200 குடும்பங்கள் வெளியேற்றம்

சென்னையில் அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அனகாபுத்தூரில் 200 குடும்பங்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மாதக்கணக்கில் தேக்கமடைந்தும், தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நீர்வளத் துறை (WRD), சென்னை மாநகராட்சி, சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய அரசு அமைப்புகள், அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
பல குடியிருப்பாளர்களை ஒத்துழைக்கச் செய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அனகாபுத்தூர் பகுதியில் மொத்தம் 400 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. இப்பணியின் முந்தைய கட்டங்களில் தோபிகானா பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குவைத்-இ-மில்லத் நகரில் இருந்து ஏற்கனவே 200 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது எஞ்சியுள்ள 200 குடியிருப்பாளர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று (மே 25) மாலை நிலவரப்படி, 116 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பருவமழை தொடங்குவதற்குள் இப்பணி நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், அடையாறு பாலம் அருகே உள்ள மல்லிப்பூ நகர் அடுத்த பெரிய சவாலாக இருக்கும் என்றும், அங்கு 1,200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பரந்த சுற்றுச்சூழல் மற்றும் வெள்ளத் தடுப்பு இலக்குகளுடன் ஒத்துப்போனாலும், அவ்வப்போது பதற்றமான சூழ்நிலைகள் நிலவிய வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் ஒரு குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கும், அரசு வழங்கிய மாற்று இடங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இத்தகைய எதிர்ப்புகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் உறுதியளிப்புகள் மூலம் சமாளிக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி சென்னையின் நதி சீரமைப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் நிலையில், அடையாறு ஆற்றின் கரைகளை மீட்டெடுத்து புனரமைப்பதன் மூலம், நகரத்தின் வெள்ள பாதிப்பை குறைக்கவும், நிலையான நகர்ப்புற வாழ்விடத்தை மேம்படுத்தவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Read More