encroachment

ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

திருப்போரூர் கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான இடங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென, அறநிலை​யத்​துறை மற்​றும் வரு​வாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூரில் உள்ள கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்​புள்ள 2 ஆயிரம் ஏக்​கர் சொத்​துக்​களில், 550 ஏக்​கருக்​கும் மேற்​பட்ட சொத்​துக்​களை தனி நபர்​கள் ஆக்​கிரமித்​துள்​ளனர்.
எனவே, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை வரு​வாய்​துறை அதி​காரி​கள் மூல​மாக அளவீடு செய்​து, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற அறநிலை​யத் துறை மற்​றும் தமிழக அரசின் வரு​வாய்த் துறை செயலருக்கு உத்​தர​விட வேண்​டும்’ என, கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​க​னவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், 2022 மே மாதத்​துக்​குள் ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென உத்​தர​விட்​டிருந்​தது. ஆனால், உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில், ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற​வில்லை எனக் கூறி, வழக்​கறிஞர் ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.
இந்த வழக்​கு, தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், இ்ந்த அவம​திப்பு வழக்கு கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக நிலு​வை​யில் இருந்து வரு​கிறது. இன்​னும் அறிக்கை தாக்​கல் செய்​யாமல் இருப்​பது ஏன் என கேள்வி எழுப்​பினர்.

நீதிபதிகள் அதிருப்தி: அதற்​கு, அறநிலை​யத் துறை தரப்​பி்ல் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​. அருண் நடராஜன், கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான 125 ஏக்​கர் நிலத்தை 233 பேர் ஆக்​கிரமித்து இருப்​பது ஆய்​வில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவர்​களை அந்த நிலத்​தில் இருந்து சட்ட ரீதி​யாக அப்​புறப்​படுத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.
சிலர் வாடகை செலுத்த முன் வந்​துள்​ளனர். எனவே, ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய 3 வாரம் அவகாசம் வழங்க வேண்​டும் என, கோரி​னார்.

இதையடுத்து நீதிப​தி​கள், அவம​திப்பு வழக்கு நிலு​வை​யில் இருக்​கும் போது, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை அபகரித்து ஆண்​டுக்​கணக்​கில் அனுப​வித்து வரும் ஆக்​கிரமிப்​பாளர்​களை எப்​படி வரன்​முறைப்​படுத்த முடி​யும் என அதிருப்தி தெரி​வித்​தனர்.

பின்​னர், இந்த வழக்​கில் ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறநிலை​யத் துறைக்​கும், வரு​வாய் துறை​யினருக்​கும் கெடு வி​தித்​து வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​தனர்​.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

அடையாறு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்: அனகாபுத்தூரில் 200 குடும்பங்கள் வெளியேற்றம்

சென்னையில் அடையாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அனகாபுத்தூரில் 200 குடும்பங்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மாதக்கணக்கில் தேக்கமடைந்தும், தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நீர்வளத் துறை (WRD), சென்னை மாநகராட்சி, சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய அரசு அமைப்புகள், அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
பல குடியிருப்பாளர்களை ஒத்துழைக்கச் செய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அனகாபுத்தூர் பகுதியில் மொத்தம் 400 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. இப்பணியின் முந்தைய கட்டங்களில் தோபிகானா பகுதியில் இருந்த வணிக நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குவைத்-இ-மில்லத் நகரில் இருந்து ஏற்கனவே 200 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது எஞ்சியுள்ள 200 குடியிருப்பாளர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று (மே 25) மாலை நிலவரப்படி, 116 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பருவமழை தொடங்குவதற்குள் இப்பணி நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், அடையாறு பாலம் அருகே உள்ள மல்லிப்பூ நகர் அடுத்த பெரிய சவாலாக இருக்கும் என்றும், அங்கு 1,200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பரந்த சுற்றுச்சூழல் மற்றும் வெள்ளத் தடுப்பு இலக்குகளுடன் ஒத்துப்போனாலும், அவ்வப்போது பதற்றமான சூழ்நிலைகள் நிலவிய வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் ஒரு குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கும், அரசு வழங்கிய மாற்று இடங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இத்தகைய எதிர்ப்புகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் உறுதியளிப்புகள் மூலம் சமாளிக்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி சென்னையின் நதி சீரமைப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் நிலையில், அடையாறு ஆற்றின் கரைகளை மீட்டெடுத்து புனரமைப்பதன் மூலம், நகரத்தின் வெள்ள பாதிப்பை குறைக்கவும், நிலையான நகர்ப்புற வாழ்விடத்தை மேம்படுத்தவும் முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Read More