Corona

Covid19தமிழ்நாடு

கொரோனா தொற்று..! மீண்டும் ஊரடங்கு? அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 5,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 1,806 பேரும், குஜராத்தில் 717 பேரும், டெல்லியில் 665 பேரும், மேற்கு வங்கத்தில் 622 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்கள் முகக் கவசம் அணிவது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
மேலும் இது வீரியமற்ற கொரோனா என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வருகிறதா பெருந்தொற்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கடந்த 2019 இல் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்கின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய பெருந்தொற்று குறித்த ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு முன்பாக, ‘மெர்ஸ்’ (MERS) என்ற வகை வைரஸ் பரவியது. இது பெரிய அளவில் பரவாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்களில் 33% பேருக்கு மரணத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த வடிவமாகவே ‘சார்ஸ் கோவிட்’ (SARS-CoV) எனப்படும் கொரோனா வைரஸ் உருவெடுத்து, உலகெங்கும் மிக வேகமாகப் பரவியது.
கொரோனாவைப் போலவே, இந்த வைரஸும் சுவாச மண்டலத்தின் வழியாக மனித உடலுக்குள் நுழையக்கூடியது. எச்.கே.யு.-5 வகை வைரஸ் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இவை செல்களைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால், அதற்கான திறன் இந்த புதிய வைரஸுக்கு இருப்பதால், இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

Read More
Covid19இந்தியாதமிழ்நாடு

தமிழ்நாட்டில் 27 பேர்..! இந்தியா முழுக்க 511 பேர்..! கொரோனா தொற்று பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,170 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 227 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவில் மொத்த பாதிப்பு 1,147 ஆக உயர்ந்துள்ளது. 7 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Read More
தமிழ்நாடு

மக்களுக்கு உதவி செய்ய “ஒன்றிணைவோம் வா” உடன்பிறப்புகளே – மு.க ஸ்டாலின் அழைப்பு!

பொதுமக்களின் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள், கொரோனா 2வது அலை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, கபசுர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்குங்கள் என

Read More