Author: Namadhu Arasu

சினிமாதமிழ்நாடு

விஜய் சேதுபதி திரைப்படம் ‘ஏஸ்’? – திரை விமர்சனம் 

சிறையில் இருந்து வெளியே வரும் போது நல்லவனாக வாழ விரும்புகிறார் ஹீரோ ,வெளியே வந்ததும் அங்கு காதல் மலர்கிறது, அவருக்கு நண்பனாக யோகிபாபு, இந்த படத்தில் காமெடி ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பின் போலீஸ் ஆஃபீசர் ஆகா வலம் வரும் வில்லன் ,நன்றாக பண்ணி இருக்கிறார், இன்னுமொரு தாதா வில்லன், அவரும் அருமையாக பண்ணி உள்ளார்
,காதலிக்காக வங்கியில் கொள்ளை அடிக்கிறார், இடையே அவருக்கு லாட்டரியும் பாரிஸு விழுகிறது , இதை எப்படி கையாளுகிறார்,எப்படி வில்லன் கதையை முடிக்கிறார், காதலியை கைப்பற்றுகிறார் என்பதே கதை ,direction , போட்டோகிராபி அருமை,விறுவிறுப்பாக போகிறது,விஜய் சேதுபதி action ஹீரோ ஆக மிரட்டுகிறார் .kk

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

நிதி ஆயோக் கூட்டம் – இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக பங்கேற்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார்.
டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் இன்று தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைநகரில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக பங்கேற்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார்.
டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் இன்று தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைநகரில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் தமிழ்நாடு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
பின்னர், ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். கூட்டத்தில், கல்வி நிதி உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு தேவையான நிலுவையில் இருக்கும் நிதியை விடுவிக்க வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய – மாநில அரசுகளிடையே நிலவும் பிரச்சனைகள், ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்தும் கருத்துகளை முன்வைத்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தின் இடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட இந்தியா கூட்டணி முதல்வர்களை சந்தித்து பேச உள்ளார். மேலும் தனது நண்பரும் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திர பாபு நாயுடுவையும் சந்திக்க உள்ளார்.
இதையடுத்து, டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மார்பக புற்று நோயை உடனடியாக கண்டுபிடிக்கும் கருவி அறிமுக நிகஷ்ச்சி

மார்பக புற்று நோயை உடனடியாக கண்டுபிடிக்கும் கருவி அறிமுக நிகஷ்ச்சி
நேற்று IPK(India Turns Pink) நடத்திய (At presidency club Egmore)ஸ்பெஷல் ப்ரோக்ராம் நிகச்சியில் அமைச்சர் திரு சேகர் பாபு, பாராளுமன்ற உறுப்பினர் திரு கலாநிதி வீராச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை
உடனடியாக கண்டுபிடிக்கும் கருவியை அறிமுகப்படுத்திய பிரஸ் மீட் நிகஷ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
நேற்று IPK (India Turns Pink) Breast Cancer Awarness prog. நடத்திய ஸ்பெஷல் ப்ரோக்ராம் நிகச்சியில் அமைச்சர், திரு சேகர் பாபு பாராளுமன்ற உறுப்பினர் திரு கலாநிதி வீராச்சாமி, ஆகியோர் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை
உடனடியாக கண்டுபிடிக்கும் கருவியை அறிமுகப்படுத்திய பிரஸ் மீட் நிகஷ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
அந்த நிகஷ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கலாநிதி வீராச்சாமி , சீரியல் நடிகை திருமதி
ரேஷ்மி நமது அரசு பத்திரிகையின் ஆசிரியர் திரு கிருஷ்ணகுமார் அவர்களிடம் இந்த மாத பிரதியை பெற்று கொண்டனர்

Read More
அரசியல்நிகழ்ச்சிகள்

உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் முடியும் முன்பே, சிலர் உயிரிழந்துவிட்டதாகவும், சிலர் ராஜினாமாவும் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காலி பணியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த உள்ளாட்சி நிர்வாகம் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படங்கள் இல்லை என்றும் சில இடங்களில் இடஒதுக்கீட்டை இறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு, வாக்காளர்களின் புகைப்படங்களுடன் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீட்டை செய்து தேர்தல் நடத்தவேண்டும் என்றும் அதற்கு முன்பு தேர்தல் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
காலி பணியிடங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன், புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Read More
Covid19தமிழ்நாடு

மீண்டும் பரவி வரும் கொரோனா..! தமிழகத்தில் 66 பேருக்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் மொத்தமாக 257 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கேரளாவில் 95 பேருக்கும், தமிழ்நாட்டில் 66 பேருக்கும், மகாராஷ்டிராவில் 56 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டில் 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வீரியத்துடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரசின் திரிபான ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில், ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்காது என்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒமைக்ரான் JN.1 என்ற வைரசின் இரண்டு திரிபுகள் பரவி வருவது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LF.7 மற்றும் NB.1.8 என்ற இரண்டு திரிபுகள் பரவி வரும் நிலையில் ஏற்கனவே செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசிகள் மூலம் இந்த வைரஸ்களை அழிப்பது சாத்தியமற்றது என பலகட்ட ஆய்வுகளின் முடிவில் தெரியவந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
XBB.1.5 monovalent வகை பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் மூலம் புதிய வகை வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் பைசர், பயோண்டெக், மாடர்னா ஸ்பைக்வேக்ஸ், நோவாவேக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்கள் செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More
RASI PALANஆன்மீகம்தமிழ்நாடு

மே 19 முதல் 31 வரை எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான இருவார ராசிபலன் 

மேஷம்: நல்லவை நடக்கத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். உங்கள் திறமை பலரால் பாராட்டப்படும். வீட்டில் விசேஷங்கள் அணிவகுத்து வரும். தம்பதியர் இடையே அன்யோன்யம் உருவாகும். பூமியால் ஆதாயம் உண்டு. வர்த்தகத்தில் பழைய பாக்கிகள் திடீரென்று வசூலாகும். அரசுத் துறையினருக்கு ஏற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். அரசியல் சார்ந்தோர்க்கு புகழ், பாராட்டு கிட்டும். மேலிடத்தின் ஆதரவு கூடும். கலை, படைப்புத் துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். பயணப்பாதையில் வேகம் வேண்டவே வேண்டாம். தலைவலி, நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம். சுப்ரமண்யர் வழிபாடு சுபிட்சம் சேர்க்கும்.

ரிஷபம்: மனதில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். திறமைக்கு ஏற்ற வகையில் அலுவலகத்தில் அந்தஸ்து உயரும். யாரிடமும் வீண் ரோஷம் வேண்டாம். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாரிசுகளின் திருமணத் தடை நீங்கும். பூர்வீக சொத்து சேரும். பெற்றோர் உடல்நலம் சீராகும். ஆபரணங்களை இரவல்தர, பெற வேண்டாம். தொழில், வாணிபத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் அவசியம். அரசுத் துறையினருக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு நிதானம் முக்கியம். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். ரத்த அழுத்தம், அடிவயிறு, நரம்பு உபாதைகள் வரலாம். ஈசன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.

மிதுனம்: சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் சுபிட்சங்கள் வந்து சேரும். பணியிடத்தில் சுமுகப் போக்கு நிலவும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரம் தவறாது செய்யுங்கள். இல்லத்தில் இன்சொல் பேசுங்கள். சுபகாரியங்களின் வீண் கேளிக்கை தவிருங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஒப்பந்தங்கள் பத்திரம். அரசுப் பணியில் உள்ளோர் கவனமாகச் செயல்படுவது நல்லது. அரசியல் சார்ந்தவர்களுக்கு பேச்சில் நிதானம் அவசியம். படைப்பு,கலைத்துறையினர் ரகசியங்களைப் பரமரகசியமாக வையுங்கள். ரத்த நாளம், அலர்ஜி, சுவாசம், ஜீரண உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

கடகம்: திறமைகள் பளிச்சிடத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரத்தொடங்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வீட்டில் விசேஷங்கள் வரும். ரத்தபந்தங்களால் ஆதரவு கிட்டும். அசையும் அசையா சொத்து சேரும். வழக்குகளில் நிதானம் அவசியம். செய்யும் தொழிலில் முயற்சி முக்கியம். ஒப்பந்தங்களில் கவனித்துக் கையெழுத்திடுங்கள். அரசுத் துறையினர் அமைதியாகச் செயல்படுங்கள். அரசியல் சார்ந்தோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். பழுதுபட்ட வாகனத்தை உடன் சீரமையுங்கள். இஷ்ட அம்மன் வழிபாடு, இனிமை சேர்க்கும்

சிம்மம்: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் வீண் தர்க்கம் யாரிடமும் வேண்டாம். பொறுப்புகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இல்லத்தில் இன்சொல் அவசியம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். வீடு, வாகனம் மாற்ற வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் வளர்ச்சி வரத்தொடங்கும். பழைய கடன்கள் பைசலாகும். அரசுத் துறையினர்க்கு ஏற்றம் உறுதியாகும்.அரசியல் சார்ந்தோர், மேலிடத்தின் பேச்சைக் கேட்டு நடப்பதே நல்லது. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வரும். பயணப்பாதையில் கவனச் சிதறல் தவிருங்கள். அடிவயிறு,கொழுப்பு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு, பிரகாசிக்கச் செய்யும்.

கன்னி: திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அலட்சியமும் அவசரமும் வேண்டாம். எதிர்பாரா இடமாற்றம் வந்தால் தவிர்க்காதீர்கள். வீட்டில் விட்டுக் கொடுத்தால் விசேஷங்கள் வரும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பழைய கடன்களில் அலட்சியம் கூடாது. பத்திரங்கள் எதையும் பத்திரமாக வையுங்கள். வர்த்தகத்தில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி உண்டு. அரசுப் பணிபுரிவோர், கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள். அரசியல் சார்ந்தோர் பிறர் சொல் கேட்டால் பெரும்பழி வரலாம், யோசித்து செயல்படுங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். மறைமுக உறுப்பு, முதுகு உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

துலாம்: எண்ணம்போல் ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் தடைபட்ட உயர்வுகள் தடை நீங்கி வந்து சேரும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வீடு, வாகன யோகம் உண்டு. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம். அரசுப் பணியிலுள்ளோர்க்கு இஷ்டம்போல இடமாற்றம் கிட்டும். அரசியல் துறையினர்க்கு மேலிடத்தின் ஆதரவு கிட்டும். திடீர் பதவிக்கு வாய்ப்பு உண்டு. கலை, படைப்புத் துறையினரின் கனவுகள் நனவாகத் தொடங்கும். பயணப் பாதையில் போதுமான ஓய்வு முக்கியம். அஜீரணம்,கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.

விருச்சிகம்: சோம்பல் தவிர்த்தால், உயர்வுகள் வரத்தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். பிறர் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். இளம் வயதினர், பெற்றோர் பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழிலில், சுணக்கம் தவிர்த்தால், சீரான வளர்ச்சி உண்டு. அரசுப்பணியில் உள்ளோர்க்கு அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிட்டும். அரசியல் சார்ந்தோர் வீண் கேளிக்கை தவிர்ப்பதும், வாக்கில் கவனம் செலுத்துவதும் நல்லது. கலை, படைப்புத் துறையினர் சிலருக்கு அரசுவழி பாராட்டு கிட்டும். இரவுநேரப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். தொற்றுநோய், ரத்த அழுத்த மாற்றம், தூக்கமின்மை வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

தனுசு: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் பொறுப்பு உணர்வு மிகமிக முக்கியம். கையெழுத்திடுகையில் அலட்சியமும் பணியில் கூடாது. வீண் புலம்பல் விபரீதமாகலாம், தவிருங்கள். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். விட்டுக்கொடுத்தால் விசேஷங்கள் வரத்தொடங்கும். தம்பதியர், ப்ரஸ்பரம் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். உறவுகளிடம் வாக்குவாதம் வேண்டாம். வர்த்தகத்தில் நேரடி கவனமும், நேர்மையும் மிகமிக முக்கியம். அயல்நாட்டு வர்த்தக அனுமதிகள் கைகூடும். அரசுத் துறையினர் கவனத்தை திசைதிருப்பாமல் செயல்படுங்கள். அரசியல் சார்ந்தோர்க்கு நிதானம் மிக அவசியம். கலை, படைப்புத் துறையினர் எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். இரவுப் பயணம் தவிருங்கள். பல், எலும்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு,மங்களம் சேர்க்கும்.

மகரம்: சீரான நன்மைகள் வரத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் புதிய பொறுப்பும் அதனால் பெருமையும் அதிகரிக்கும். பிறரால் ஏற்பட்டிருந்த வீண்பழி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு,மனை யோகம் உண்டு. குடும்ப ரகசியங்களை பொது இடத்தில் பேசவேண்டாம். செய்யும் தொழில் செழிக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அரசியல் சார்ந்தோர்க்கு பாராட்டு, பதவி வாய்ப்பு உண்டு. அரசுப் பணியினர் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு கணிசமான வாய்ப்புகள் வரும். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. இடுப்பு, அடிவயிறு, கழுத்து, முதுகு, கால் உபாதைகள் வரலாம். நவகிரஹ குருபகவான் வழிபாடு, கோடி நன்மை சேர்க்கும்.

கும்பம்: உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை உரிவர்களால் பேசப்படும். இடமாற்றம், பதவி, ஊதியம் மனம்போல கிட்டும். குடும்பத்தில் அமைதி உருவாகும். அது நிலைக்க, வாக்கில் இனிமை வேண்டும். வீடு,மனை மாற்ற, புதுப்பிக்க வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் வளர்ச்சி சீராகும். பிறரை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். அரசுப் பணியில் உள்ளோர்க்கு திடீர் பதவி,பொறுப்பு வரும். அரசியல் சார்ந்தவர்கள் பிறருக்கு ஜாமீன் தருவதை தவிர்ப்பது நல்லது. கலை, படைப்புத் துறையினர் சோம்பலை விரட்டுவது முக்கியம். பயணங்கள் அதிகரித்தாலும் அதனால் ஆதாயம் உண்டு. இடுப்பு, கண், நரம்பு உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்

மீனம்: வாக்கில் கவனம் இருந்தால், வாழ்க்கை இனிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்களுக்கு உரிய பெருமைகள் சேரும். பிறர் தவறை பெரிது படுத்த வேண்டாம். பொறுப்புச் சுமை அதிகரிக்கலாம். திட்டமிட்டுச் செய்யுங்கள். இல்லத்தில் சுமுகப் போக்கு நிலவும். பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளைக் கேட்டால் சுபதடைகள் நீங்கும். தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். வர்த்தகத்தில் அலட்சியம் கூடாது. அரசியல் சார்ந்தோர்க்கு வாக்கில் நிதானம் தேவை. அரசுப்பணியில் உள்ளோர் கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனமாக இருங்கள். கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறலாம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீரமையுங்கள். தூக்கமின்மை, சோர்வு, சுளுக்கு, பல் உபதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, வாழ்வை மணக்கச் செய்யும்.

Read More
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று கனமழை – வானிலை மையம் 

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் இன்று (19.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (20.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (20.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (20.05.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அடுத்த 2 மணி நேரத்தில்…” – சென்னைக்கு மழை எச்சரிக்கை கொடுத்த தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

Read More
குற்றம்தமிழ்நாடு

காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? – ஐகோர்ட் கேள்வி

காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? – ஐகோர்ட் கேள்விதமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருக்கும் கழிவறைகளில் கைதிகள் மட்டும் ஏன் தொடர்ச்சியாக வழுக்கி விழுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கல், கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அவரது தந்தை இப்ராஹிம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ஜாகிர் உசேனின் இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 15) சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜி.ஆர் .சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கல், கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அவரது தந்தை இப்ராஹிம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ஜாகிர் உசேனின் இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 15) சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஜி.ஆர் .சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

TN 10th, 11th Class Results 2025 Live: இன்று வெளியாகிறது 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

TN 10th, 11th Class Results 2025 Live: இன்று வெளியாகிறது 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in
மற்றும்
www.dge.tn.gov.in
ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை, தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை இணையதளத்தில் உள்ளீடு செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவர்கள் அளித்த தொலைபேசி எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில், பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் 10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 9 மணிக்கு வெளியிடுகிறார்.

10,11 வகுப்புகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டாலும், 11ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் மதியம் 2 மணிக்குதான் இணையத்தில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
குற்றம்தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை
கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்னர், மதியம் 12 மணிக்கு தண்டனை விவரத்தை நீதிபதி நந்தினிதேவி வாசித்தார். அதில், 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடாக ரூ.85 லட்சம் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்தார். இத்துடன் தண்டனை விதிக்கப் பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதமாக விதித்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தில் திரண்டிருந்த மாதர் சங்கத்தினர் தீர்ப்பை வரவேற்று அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர். பொள்ளாச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, 9 குற்றவாளிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பிறழ் சாட்சி அளிக்கவில்லை: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், ஒருவர்கூட பிறழ் சாட்சி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, லேப்டாப், செல்போன், மெமரிகார்டு என எலெக்ட்ரானிக்ஸ் ஆதாரங்கள் மற்றும் 1,500 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட தனி அறையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2023 பிப். 24 முதல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை 2 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “சிபிஐ விசாரணைக்கு நான் உத்தரவிட்டதால்தான் இன்று நீதி கிடைத்திருக்கிறது” என்று
பதில் அளித்துள்ளார்.

யாருக்கு எத்தனை வருடம் தண்டனை: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் குற்றவாளியான (ஏ1) சபரிராஜனுக்கு 4 ஆயுள், திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள், சதீஷூக்கு 3 ஆயுள், வசந்தகுமாருக்கு 2 ஆயுள், மணிவண்ணனுக்கு 5 ஆயுள், பாபுக்கு 1 ஆயுள், ஹேரேன்பாலுக்கு 3 ஆயுள், அருளானந்தம் மற்றும் ஏ9 அருண்குமார் ஆகியோருக்கு தலா 1 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read More