maduraihighcourt

அரசியல்நிகழ்ச்சிகள்

உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் முடியும் முன்பே, சிலர் உயிரிழந்துவிட்டதாகவும், சிலர் ராஜினாமாவும் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காலி பணியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த உள்ளாட்சி நிர்வாகம் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படங்கள் இல்லை என்றும் சில இடங்களில் இடஒதுக்கீட்டை இறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு, வாக்காளர்களின் புகைப்படங்களுடன் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீட்டை செய்து தேர்தல் நடத்தவேண்டும் என்றும் அதற்கு முன்பு தேர்தல் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
காலி பணியிடங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன், புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Read More