கட்சி நடத்த பணம் இல்லை..! அறிக்கை மூலம் நன்கொடை கேட்ட கமல்ஹாசன்..
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அந்த அறிக்கையில் அவர் கூறிருப்பதாவது : மக்களுக்கான அரசியலை செய்யும் இந்த போரில் எதிர்த்துப் போராட எங்களிடம் துணிச்சல் இருக்கிறது. திறமை இருக்கிறது. நேர்மை இருக்கிறது. ஆனால், போதிய பணம் இல்லை.
என் தொழிலில் சம்பாதிக்கும் பணத்தில் பெருமளவை நான் மக்களுக்கான அரசியலுக்குத்தான் செலவிடுகிறேன். மக்களுக்கான அரசியலை செய்ய, மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களாகிய உங்களிடமே உரிமையுடன் கொடை கேட்கிறோம்.
நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாருங்கள் என ஊரறிய உலகறிய கேட்கிறோம். . இங்கே விதைத்ததை நீங்களும் உங்கள் குடும்பமும் நிச்சயம் அறுவடை செய்யும். ஊர் கூடி தேர் இழுக்க நீங்களும் ஒரு கை கொடுங்கள். நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாருங்கள்.
இவரு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்..
