Tamilnadu

அரசியல்சினிமாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

விஜய் பரப்புரை பயணத்தில் விதிமீறல்.. தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார். இதற்கு 23 நிபந்தனைகளுடன் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், விஜயால் திட்டமிட்ட நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள இயலவில்லை.
விஜய் பரப்புரை பயணத்தில் நடைபெற்ற விதிமீறல் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
காவல்துறையின் நிபந்தனைகளை தவெக தொண்டர்கள் மீறியதுடன், தனியார் மற்றும் அரசு சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விதிமீறல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக திருச்சி மாவட்டத் தலைவர் கரிகாலன், மகளிர் அணி மாவட்டத் தலைவி துளசி மணி ஆகியோர் மீதும்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்ய சோழன், இமயத் தமிழன், விக்னேஷ் குமார் ஆகியோர் மீதும் இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன். வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் கடந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதி வரை விஜய் பிரசார பேருந்தில் வந்தார். சில நிமிடங்களில் சென்று விடும் தூரத்தை, அதாவது 7 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் கடந்து விஜய் வந்தார். வழி நெடுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாக இருந்ததால் விஜய்யின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது.

தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்ததால், மதியம் 2.30 மணிக்குத்தான் பிரசார இடமான காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தது. அங்கு பேசிய விஜய், பின்னர் அடுத்த பாயிண்ட் அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

குடியரசு துணைத் தலைவர்ஆனார்-சி.பி.ராதாகிருஷ்ணன்..

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 21ஆம் தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவி விலகலை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணி சார்பில் தெலங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களத்தில் இருந்தார்.

இதனால் வாக்குப் பதிவு நடைபெறுவது உறுதியானது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனைத்து எம்.பி.க்களும் உரிமை உள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் ஓர் இடம் பதவி காலியாக உள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர் பணியிடங்களில் 6 இடங்கள் காலியாக உள்ளன. ஒரு அவைகளிலும் சேர்த்து மொத்தமாக 781 உறுப்பினர்கள் உள்ளனர். 7 எம்.பி.க்களை கொண்டுள்ள பிஜு ஜனதா தளம், 4 எம்.பி.க்களைக் கொண்டுள்ள பாரதிய ராஷ்ரிய சமீதி ஆகியவை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. 11 எம்.பி.க்களை வைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், குடியர்சுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார். மொத்தமாக 98.2 சதவிகித வாக்குகள் பதிவாகின. சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். விரைவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
இந்தியாதமிழ்நாடுவணிகம்

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. 

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்தவகையில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து நாட்டில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் ஒன்றாம் தேதி நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 1789 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, தற்போது 1738 ரூபாயாக குறைந்துள்ளது. இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
சென்னையில், வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி, 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

ஒன்வேயில் போனால் இனி அபராதம்… கண்காணிப்புக்காக சென்னையில் டிராக்கிங் கேமரா..

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) மேலும் 170 அதிநவீன தானியங்கி எண் தகடு அங்கீகார (ANPR) கேமராக்களை நிறுவ உள்ளது. இதற்கான திட்டத்திற்கு ₹3.74 கோடி மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள், விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து, மின்னணு அபராதங்களை (e-challans) உருவாக்கி, மத்திய போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புடன் ஒருங்கிணைக்கும். இந்த திட்டங்கள் குறித்த தகவல்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையபக்கத்தில் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஒருவழிப் பாதையில் போனால் இனி தப்ப முடியாது. சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறினால் ரூ.3.74 கோடி மதிப்பிலான புதிய கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய கேமராக்கள்: நகரின் முக்கிய சந்திப்புகளிலும், பெரிய சாலைகளிலும் இந்த புதிய கேமராக்கள் பொருத்தப்படும். இவை சாலைக்கு எதிர்த் திசையில் வரும் வாகனங்களை தானாகவே பதிவு செய்யும்.

தரவு ஒருங்கிணைப்பு: பதிவான ஆதாரங்கள் காவல் துறையின் அமலாக்க அமைப்புடனும், வாஹன்/சாரதி (Vahan/Sarathi) தரவுத்தளத்துடனும் இணைக்கப்படும்.

கேமராக்களின் திறன்: இந்த கேமராக்கள் அதிவேகத்தில் (மணிக்கு 150 கி.மீ வரை) செல்லும் வாகனங்களின் எண் தகடுகளைக் கூட துல்லியமாகப் பதிவு செய்யும் திறன் கொண்டவை. பல்வேறு ஒளி நிலைகளிலும் (பகல், இரவு, குறைந்த வெளிச்சம்) சிறப்பாகச் செயல்படும். மேலும், நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் ஆதாரங்களை இவை உருவாக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய கட்டுப்பாட்டு மையம்: இந்த திட்டம், நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் கீழ் இயங்கும் நகரத்தின் மத்திய கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் தடையற்ற கண்காணிப்பு உறுதி செய்யப்படும்.

விதிகளின் மீறல் மற்றும் அபராதங்கள்:

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கடந்த ஆண்டு அண்ணாநகர் மற்றும் நகரின் சில பகுதிகளில் ANPR கேமராக்களை நிறுவியது. அதன் மூலம், ஒருவழிப் பாதையில் வந்ததற்காக 74,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், சுமார் 35% வழக்குகள் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டன.

அதிகபட்ச மீறல்கள்: கிழக்கு மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான விதிமீறல்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் விதிமீறல்கள் காணப்பட்டன.

பிரச்சனைக்குரிய பகுதிகள்:

வடக்கு சென்னை: தம்பு செட்டி தெரு, ரெட்டேரி சந்திப்பு, மாதவரம் ரவுண்டானா.

தெற்கு சென்னை: வடபழனி சந்திப்பு, எல்.பி. சாலை சிக்னல், 200 அடி ரேடியல் சாலை.

கிழக்கு சென்னை: பார்னபி சாலை சந்திப்பு, வள்ளுவர்கோட்டம் சந்திப்பு, பி.எஸ். சிவசாமி சாலை.

இருப்பினும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ், “கேமராக்கள் மட்டுமே குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தாது” என்று கருத்துத் தெரிவித்தார். மேலும், “பெரும்பாலான கேமராக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. அவை பெரும்பாலும் சீட் பெல்ட் மற்றும் சிக்னல் விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம், அதிவேகமாகச் செல்பவர்கள் அபராதம் இன்றி தப்பிவிடுகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

Read More
இந்தியாஉலகம்தமிழ்நாடுவணிகம்

அமெரிக்காவின் 50% சதவீத வரி விதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவில் பாதிக்கப்படும்….

இன்று முதல் இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதிப்பு அமலுக்கு வந்தது, இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கம்.
எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். மேலும் கடந்த 7 ஆம் தேதி முதல் இந்தியப் பொருள்கள் மீதான 25 சதவிகித வரி அமலுக்கு வந்தது. அது மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு அபராதமாக, கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புதின் உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா மீதான அபராத வரி நிறுத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரம்ப் அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணி முதல், இந்தியப் பொருள்கள் மீதான 50 சதவிகித இறக்குமதி வரி அமலுக்கு வந்தது.
இறக்குமதி வரி செலுத்தும் நிறுவனம், அதன் செலவை ஈடு செய்யும் வகையில், பொருள்களின் விலையை உயர்த்தி அதனை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும். இதனால், பொருள்களின் விலை அதிகரிக்கும்.
அதிக வரி விதிப்பதன் மூலம், தானாக பொருள்களின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் அந்தப் பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்ப்பார்கள். இதனால், உற்பத்தியாளர்கள் தங்கள் பொருள்களை வியாபாரம் செய்ய முடியாமல் நட்டத்தைச் சந்திப்பார்கள்.
நிறுவனம் நட்டத்தைச் சந்திக்கும் போது முதல் படியாக அதனைச் சமாளிக்க தனது ஊழியர்களின் அளவைக் குறைக்கும். அந்த வேலையை நம்பியிருந்த குடும்பத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும்.
ஒரு நாட்டின் மீது அதிக வரிவிதிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களும் அதனை அதிக விலை கொடுத்து வாங்க முன்வராமல் போக, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதே பொருள்களை குறைந்த வரி கொண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும். இதன் மூலம், போட்டி நாடுகள் தங்கள் பொருள்களை அந்த நாட்டிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்து லாபம் அடையும்.
பொதுவாக ஒருநாட்டின் செல்வம் அதன் ஏற்றுமதியின் மூலம் அதிகரிக்கும். எந்த நாடு அதிக ஏற்றுமதி செய்கிறதோ அந்த நாட்டின் செல்வம் அதிகரிக்கும். அதே ஏற்றுமதி குறையும்போது, நாட்டின் வருமானமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி.. மாநகர காவல் ஆணையர், டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தெரிவிக்குமாறு டிஜிபி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த ஜூன் 4ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதியை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி அளித்த அரசு உத்தரவை மீறி இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி காவல்துறை மிரட்டுவதாக உயர்நீதிமன்றத்தில் டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தேசிய ஓட்டல்கள் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ரூ.5000… தீபாவளி பரிசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு திட்டம்…

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்குவதற்குச் சுமார் ரூ.10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியைத் திரட்டுமாறு நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சுதந்திர தின உரையின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு போட்டியாகவும், தமிழக அரசு தனது பொங்கல் பரிசு அறிவிப்பை, தீபாவளி பண்டிகை வரும் அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 2025ஆம் ஆண்டு பொங்கலின்போது, நிதி நெருக்கடி காரணமாகப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கமளித்திருந்தார். அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்தக் குறையைப் போக்கும் விதமாகவே, இந்த முறை பொங்கலுக்கு அதிகத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பு, வருகிற தீபாவளி பண்டிகையின்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ஆன்மிக பக்தர்களுக்கு இலவசமாக ஒரு மாதம் சுற்றுலா.!

தமிழக அரசின் ஆன்மிக திட்டங்கள்
அறநிலையத்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. ராமேஸ்வரம் – காசி, ஆடி மாதம் அம்மன் கோயில் சுற்றுலா உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்களை சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2025-2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை. காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் தொடங்க இருக்கும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறை சார்பில், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இருந்து நான்கு கட்டங்களாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருவதோடு, பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும்விருப்பமாகவும் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது,

“புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 இலட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.
புரட்டாசி மாத வைணவ கோயில் சுற்றுலா
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி. மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர். புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணமானது நான்கு கட்டங்களாக, அதாவது 20.09.2025, 27.09.2025, 04.10.2025, 11.10.2025 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளன.
யாரெல்லாம் இலவச பயணத்தில் பங்கேற்கலாம்
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும்.

இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 25.09.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இலவச பயணத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்
சமய மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் – முதல்வர்

விவசாயிகள் பயிர்க்கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பித்த அன்றே கடன் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Read More
இந்தியாசினிமாதமிழ்நாடு

ரஜினியின் கூலி-இது எப்படி இருக்கு ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் வெளியான நிலையில், பலதரப்பட்ட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், காலை 9 மணி காட்சி
கூலி கதை: சைமன் (நாகார்ஜுனா) ஹாரிபரில் தயாள் (செளபின் சாஹிர்) தலைமையில் விலையுயர்ந்த வாட்ச்களை விற்பனை செய்வது போல இன்னொரு மிகவும் மோசமான பிசினஸை செய்து வருகிறார். அவர் கொன்று குவிக்கும் ஆட்களை அப்புறப்படுத்தும் பணி ராஜசேகருக்கு (சத்யராஜ்) வழங்கப்பட தனது 3 மகள்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த மோசமான வேலையை செய்கிறார். மேலும், அங்கே நடக்கும் விஷயங்களை அம்பலப்படுத்த நினைக்கும் அவரை கொன்று விடுகின்றனர். தனது நண்பனை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க களமிறங்கும் தேவா தனது நண்பனின் 3 மகள்களையும் காப்பாற்ற போராட கடைசியில் என்ன ஆனது என்பது தான் கூலி படத்தின் கதை.
ரஜினிகாந்தை செம மாஸாக காட்ட வேண்டும் என்கிற செக் பாக்ஸை பக்காவாக டிக் செய்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பான் இந்தியா படமாக கூலி…..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம்.

சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்).

தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை.
வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’
அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.
முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு.
மைனஸ்: படத்தின் முதல் பாதி கூட நன்றாகவே சென்றது. ஆனால், படத்தின் 2வது பாதியில் கதை இழுத்துக் கொண்டே சென்றது தான் படத்திற்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது. அதிலும், அமீர்கான் வரும் கிளைமேக்ஸ் கேமியோ எல்லாம் கூலி படத்துக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. அந்த இடத்தில் லோகேஷ் கனகராஜ் ஏதோ ஃபில்லர்ஸ் போட்டது போலத்தான் உள்ளது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக வந்து மிரட்டுவது போல அமீர்கானின் தாஹா கேரக்டரை வைத்து கூலி 2வுக்கு லீடு கொடுத்து முடித்திருந்தால் கூட தரமாக இருந்திருக்கும். அதே போல இந்த படத்தில் ரெட்ரோ பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. வித வித விதமாய், வித்யாசமாய் கொல்வது தான் படம் முழுக்க வருகிறது. ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸிக்கு எல்லாம் எந்தவொரு வேலையும் இல்லை. ஒரு சில ட்விஸ்ட்டுகள் வொர்க்கவுட் ஆனாலும், ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வையே அவை கொடுக்கின்றன. கிளைமேக்ஸை இன்னும் கொஞ்சம் பெட்டராக கொடுத்திருந்தால், இந்த கூலி ஹைப்புக்கு ஏற்ற வொர்த்தாக இருந்திருக்கும். ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பு, ஆக்‌ஷன், ஸ்டைல் மற்றும் உழைப்பு கடைசி வரை ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது. தாராளமாக தியேட்டரில் படத்தை பார்க்கலாம். ஓவர் எதிர்பார்ப்பு வேண்டாம்!
ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன.

Read More