Tamilnadu

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..

கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்தவகையில் இன்று (அக்.22-ம் தேதி) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 8 மணி நேர நிலவரப்படி, 19 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (அக்டேபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த லிஸ்ட்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சிவகங்கை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில், வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதா என்பது இன்று தான் தெரியும் என்று வானிலை மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
காற்றழுத்தம் காரணமாக, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமுதா, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், அதன்பிறகே புயல் உருவாகுமா என்பது பற்றி கணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை.. வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் (காலை 10 மணி வரை) அடுத்த 3 மணி நேர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கோயம்பேடு, வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், சாலிகிராமம், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. புறநகர் பகுதியான தாம்பரம், வண்டலூர், சேலையூர், முடிச்சூரில் மழை வெளுத்து வாங்கியது.
தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்தது. அல்லிநகரம், அன்னஞ்சி, அரண்மனைப்புதூர், குன்னூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான பேரூர், மாதம்பட்டி, ஆலந்துறை
சிறுவாணி உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றால பிரதான அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் எப்படி காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதோ, அதே போல இரவு நேரத்திலும் காணமுடிந்தது. பெரம்பலூர் மாநகரில் தீரன் நகர், கவுல்பாளையம், வேப்பந்தட்டை, பாடாலூர், குன்னம், ஆலத்தூரில் மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை மண்ணை குளிர்வித்தது.
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு முறை மசோதா -சட்டசபையில் இன்று தாக்கல்….

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய மசோதாக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தியதும் நேற்றைய கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து.
இந்நிலையில் இன்று 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. கடைசி நாளில், அதாவது 17 ஆம் தேதி 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்பட இருக்கிறது. அத்துடன் சட்டசபை கூட்டம் நிறைவடையும்.

இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கல் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதைபோல மற்ற முக்கிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தக் கூட்டத் தொடரில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாளை முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அதன்படி நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் அடுத்த 4 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு அப்பாவு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று முக்கிய மசோதாக்களை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். 2025-26ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை இன்று தாக்கல் செய்கிறார். அதேபோல் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வைக்கும் மசோதாவும் தாக்கலாக வாய்ப்பு உள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரில் இன்றுமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தாக்கல் செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியதாகதகவல்வெளியாகியுள்ளது. அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதைபோல மற்ற முக்கிய மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பொங்கல் பரிசுத் தொகை -சலுகைகளை பெற-  PHH அல்லது NPHH ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே…

தமிழ்நாட்டில் சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு பொங்கல் ரொக்கப் பரிசு, பேரிடர் நிவாரணம் உள்ளிட்டவற்றை அறிவிக்கும்போது ரேஷன் அட்டைகளின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படும்.
அரசு அறிவிக்கும் இந்த ரொக்கம் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் கிடைக்குமா என்றால் இல்லை. சில குறிப்பிட்ட அட்டைகளுக்கு இந்த ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட மாட்டாது. அதற்கு என்ன காரணம் தெரியுமா?
தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும் PHH அட்டை, அரிசி உட்பட அனைத்து பொருட்களும் இருந்தாலும், சலுகைகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் NPHH அட்டை, அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் இல்லாமல், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மட்டும் கிடைக்கும் NPHH –S அட்டை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள முதியோருக்கு அதிக அளவில் அரிசி கிடைக்கும் AAY அட்டை, வெறும் முகவரி அடையாளத்திற்கு மட்டும் பயன்படும் NPHH-NC அட்டை ஆகியவைதான் இந்த ஐந்து வகைகள்.
நீங்கள் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அரிசி அட்டையான PHH அல்லது NPHH அட்டை வகையில் இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சர்க்கரை அட்டை வைத்திருந்தால் அதனை மாற்ற முடியுமா என்றால் நிச்சயம் முடியும்!
அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை அட்டைக்கு மாற விரும்பினால் அதனை எளிதில் பெற்றுவிடலாம். நீங்கள் (TN PDS) இணையதளம் (tnpds.gov.in) அல்லது அதன் மொபைல் செயலி மூலம் எளிதில் விண்ணப்பித்து அரிசி அட்டையில் இருந்து சர்க்கரை அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு மாறுவது என்றால் அது கொஞ்சம் சிக்கலானதே. ஆனால், அரசு கேட்கும் ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தால் எளிதாக மாறிவிடலாம். அரசு கேட்கும் ஆவணங்கள் என்ன தெரியுமா?
நீங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்பதையும், அரசின் சலுகைகளைப் பெறத் தகுதியானவர் என்பதையும் அதிகாரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். உண்மையிலேயே ஏழ்மையில் இருப்பவர்கள் அல்லது பொருளாதாரச் சூழல் மாறியதால் தகுதியானவர்கள், முறையாக விண்ணப்பித்தால் அட்டை வகையை மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மண்டே பெட்டிஷன்) மனு கொடுக்க வேண்டும்.
இதனுடன் நீங்கள், ஆதார் அட்டை, புகைப்படங்கள், வறுமைக் கோட்டுப் பட்டியலில் உள்ளவர் என்பதற்கான ஆதாரம், வி.ஏ.ஓ.விடம் உங்கள் பொருளாதார நிலை குறித்தான அறிக்கை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உங்கள் மனு உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலருக்கு (DSO) அனுப்பப்படும். அவர்கள் கள ஆய்வு அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இத்துடன் உங்கள் ஆதார் எண் மூலம் மத்திய அரசின் தரவுகளைச் சரிபார்த்து, உங்கள் உண்மையான சொத்து மதிப்பு, வருமானம், வரி விவரங்கள், நீங்கள் வாங்கிய கடன்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்வார்கள். எனவே முறைகேட்டில் ஈடுபட்டு சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற முடியாது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

தென்னிந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவிலேயே நீளமான உயர் மட்ட பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார். காலை 9.45 மணிக்கு உலக புத்தொழில் மாநாடு 2025-ஐ முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார். அதன் பின்னர் 11 மணிக்கு கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக சுமார் 1,791 கோடி ரூபாயில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 வழித்தடங்களுடன், தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர் மட்ட பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறையும். 12 மணிக்கு சிட்கோ தொழிற்பேட்டை அருகே 126 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள தங்க நகை தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள்

அண்​ணா​மலை​யார் கோயி​லில் கட்​டிடங்​கள் கட்​டக் கூடாது என்று உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் ராஜகோபுரம் முன்​பாக கோயில் நிதி​யில் வணிக வளாகம் கட்​டு​வதை எதிர்த்து ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான மயி​லாப்​பூர் டி.ஆர்​.ரமேஷ் மற்​றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்​தில் வழக்​கு​கள் தொடர்ந்​திருந்​தனர்.

இந்த வழக்​கு​கள் தொடர்பாக விசாரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ் கு​மார், எஸ்​.சவுந்​தர்குமார் ஆகியோர், கோயிலுக்​குள் எந்த கட்​டு​மானப் பணி​களை​யும் மேற்​கொள்​ளக்​கூ​டாது என இடைக்​காலத் தடை விதித்​து, விசா​ரணையை அக்​. 16-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்​ளனர்.
இந்​நிலை​யில், நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், எஸ்​.சவுந்​தர் ஆகியோர் திரு​வண்​ணா​மலைக்கு நேற்று சென்​று, அண்​ணா​மலை​யார் கோயில் ராஜகோபுரம் முன்​பு, அம்​மனி அம்​மன் கோபுரம் அருகே நடை​பெறும் கட்​டு​மான பணி, கோயில் வளாகத்​துக்​குள் உள்ள விருந்​தினர் இல்​லங்​களை ஆய்வு செய்​தனர்.
பின்​னர், கோசாலை பகு​தி​யில் கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறு​வதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்​து, “கோ​யில் வளாகத்​துக்​குள் நிரந்தர கட்​டிடம் எது​வும் கட்​டக்​கூ​டாது. காத்​திருப்பு அறையை போதிய காற்​றோட்​டத்​துடன், மேல் பகு​தி​யில் சீட் அமைத்​து, குடிநீர் வசதி​யுடன் ஏற்​படுத்​திக்​கொடுங்​கள். பெரிய கட்​டிடம் தேவை இல்​லை.
கோயில் வளாகத்​துக்​குள் கழிப்​பறை​கள் கட்​டக் கூடாது. கோயில் சுவரை எக்​காரணத்​தைக் கொண்​டும் சேதப்​படுத்​தி​விடக் கூடாது. இது​போன்ற கோயிலை தற்​போது அரசாங்​கத்​தால் கட்ட முடி​யு​மா?” என்று அதி​காரி​களிடம் தெரி​வித்​தனர்.

மேலும்​,பிர​சாதக் கடை கட்​டு​வதற்​காக வைத்​திருந்த திட்​டத்​தைப் பார்​வை​யிட்ட நீதிப​தி​கள், கோயிலுக்​குள் எந்​தக் கட்​டிட​மும் கட்ட கூடாது என்று உத்​தர​விட்​டனர். ஆய்​வின்​போது, ஆட்​சி​யர் கா.தர்ப்​பக​ராஜ், மாவட்ட நீதிபதி மதுசூதனன், எஸ்​.பி. எம்​. சு​தாகர், அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் பரணிதரன் மற்​றும் அதி​காரி​கள் உடனிருந்​தனர்.

Read More
அரசியல்தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை விமான மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் சாலை மார்க்கமாக மானாமதுரை அருகே இடைக்காட்டூருக்கு சென்றார். அங்குள்ள இருதய ஆண்டவர் தேவாலயத்தில், ஒரு கோடியே 55 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணியினை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்றார். இரவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின் பேராவூர் பகுதியில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் விழாவில் முடிந்த வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை தொடர்ந்து 13 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர், ராமநாதபுரத்தில் புதிதாக 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை விமானநிலையம் சென்று, அங்கிருந்து சென்னைக்கு செல்கிறார்.

Read More
அரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

H1B visa பிரச்னை ஆபத்தில் ஐ.டி சட்டப்பூர்வ குடியேற்றத்தை பாதுகாக்க இந்தியா வலியுறுத்தல்..

அமெரிக்கா முதலில்’ என்ற கொள்கைக் காலத்தில், H-1B விசாக்களுக்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. திறமையான தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் பாதுகாக்கும் விதமாக, தெற்காசிய நாடான இந்தியா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் சாராத இந்தப் பணி விசா பிரிவை கடுமையாக மாற்றி அமைத்ததற்கும், கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்ததற்கும் எதிராக இந்தியா பேசியுள்ளது.
புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், H-1B விசாக்கள் மூலம் திறமையான பணியாளர்கள் வந்து செல்வதால், இந்திய மற்றும் அமெரிக்கப் பொருளாதாரம் நீண்ட காலமாகப் பலன் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “திறமையானவர்களின் நடமாட்டமும் பரிமாற்றங்களும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளன,” என்று குறிப்பிட்டார். டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய H-1B மாற்றங்கள் குறித்த கேள்விக்கு, “இது இன்னும் வளர்ந்து வரும் ஒரு சூழ்நிலை. நாங்கள் பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்று பதிலளித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே வாரத்தில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அமெரிக்காவில் “ஆக்கபூர்வமான சந்திப்புகள்” நடந்த சமயத்தில் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் புதிய H-1B விண்ணப்பங்களுக்கு 100,000 டாலர் கட்டணத்தை விதிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவால், கடந்த ஆண்டு H-1B விசா பெற்றவர்களில் 70%-க்கும் அதிகமானோர் இந்திய நாட்டவர்கள் என்பதால், வேறு எந்தக் குழுவையும் விட இந்தியர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு 280 டாலர் பில்லியன் ஆதரவு இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு அமெரிக்கப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதால், ஆயிரக்கணக்கான வேலைகள் இப்போது ஆபத்தான சூழலில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் நடந்து வரும் நிலையில், இந்த விசா மாற்றங்கள் மேலும் ஒரு பின்னடைவாக அமையுமோ என்று ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.
பல அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் சமூக ஊடகங்களில் திறமையானவர்களுக்கான இந்த விசா வகையைப் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். சிலர் H-1B விசா துஷ்பிரயோகம் என்றும், சிலர் அமெரிக்க வல்லுநர்களுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும் மோசமான செயல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

குடியரசுக் கட்சியின் அமெரிக்க செனட்டர் எரிக் ஷிமிட் இந்த மாத தொடக்கத்தில், “அமெரிக்காவை ‘போட்டித்தன்மை’ மிக்கதாக வைத்திருக்க H-1B விசா விற்கப்பட்டது. அதற்குப் பதிலாக, அது அமெரிக்கத் தொழிலாளர்களை மாற்றுவதற்காக மில்லியன் கணக்கான வெளிநாட்டினரை இறக்குமதி செய்துள்ளது. மேலும், முழுத் தொழில்களையும் வெளிநாட்டு லாபியிஸ்ட்டுகளின் கைகளில் ஒப்படைத்துள்ளது,” என்று சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் குறை கூறினார்.

விசா மாற்றத்தின் அதிர்வலைகள் வேலைவாய்ப்புச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன. H-1B கட்டணம் அவற்றின் வருவாயைப் பாதித்துள்ளதால், இந்தியாவில் உள்ள மென்பொருள் ஏற்றுமதியாளர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மிக மோசமான வாரத்திற்குத் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட பல தகவல் தொழில்நுட்பப் பங்குகள் இந்த வாரம் வியாழக்கிழமை வரை 5.6% சரிந்து, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் மிக முக்கியமான வீழ்ச்சியைக் குறித்தது. ஒட்டுமொத்தமாக, நிஃப்டி ஐடி குறியீட்டில் உள்ள பத்து உறுப்பினர்களும் இந்த வாரம் மட்டும் 21 டாலர் மில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) மற்றும் இன்போசிஸ் லிமிடெட் ஆகியவை இந்தச் சரிவில் பெரும்பங்கு வகித்தன.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது… பெருந்துயரம்…எப்படி – நடந்தது..

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 15 நிமிடத்தில் முடிந்த விஜய் பரப்புரைச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நாமக்கல் பரப்புரையை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேற்று நண்பகல் 12 மணியளவில், விஜய் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை 10 மணி முதலே தொண்டர்கள் அப்பகுதியில் திரளத் தொடங்கினர். ஆனால் நாமக்கல்லிலேயே விஜய் மூன்று மணிக்குதான் பேசினார் என்பதால் கரூர் பரப்புரை தாமதமாகிக் கொண்டிருந்தது. அதனால் தொண்டர்கள் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது.
ஒரு கட்டத்தில் கட்டக்கடங்காத கூட்டம் கூடி நிற்கக் கூட இடமில்லாத நிலையில் கட்டடங்கள், மரங்கள் என ஆபத்தான வகையில் தொண்டர்கள் ஏறி நின்றனர். அதனால் பாதுகாப்பு கருதி 6 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கூட்டத்தால் ஊர்ந்தபடி சென்ற விஜயின் பரப்புரை வாகனம் ஒரு வழியாக இரவு 7 மணிக்கு வேலுச்சாமி புரத்திற்கு வந்தது. விஜய்யின் வாகனத்திற்கு முன்னால் 6 வாகனங்களும், விஜய் வாகனத்தைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளின் வாகனங்களும் உள்ளே நுழைந்தபோதே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலுக்கான அறிகுறி தென்பட்டது.
வாகனங்களுக்கு வழிவிட தொண்டர்கள் ஒதுங்க முடியாத நிலையில் அலைமோதிய கூட்டத்தால் இரு ஜெனரேட்டர்கள் வைத்திருந்த தடுப்புகள் உடைந்து விழுந்து விஜய் வரும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு பகுதி இருளில் மூழ்கியது. அப்போதே அங்கொன்றும், இங்கொன்றுமாக கூட்ட நெரிசலில் சிலர் விழத் தொடங்க அவர்கள் உடனுக்குடன் அவசர ஊர்திகளில் அனுப்பப்பட்டனர்.
இரவு 7.12 மணி. விஜய் பேசத் தொடங்குகிறார். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் திணறுகிறது. பல மணி நேரம் காத்திருந்தவர்கள் தண்ணீர், தண்ணீர் என கூக்குரலிடுகின்றனர்.
விஜயின் கவனத்தை ஈர்க்க பாட்டில்கள், காலணிகள் உள்ளிட்டவற்றை விஜய்யின் வாகனத்தை நோக்கி எறிந்தனர். அதனால் விஜயே சில தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசுகிறார். அதன்பின் விஜய் பேச்சில் கவனம் செலுத்த, அடுத்தடுத்து பலர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து மிதிபட்டனர்.
விஜய் ஒருபுறம் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் மூச்சுத் திணறி விழுந்தவர்களை ஏற்றிக் கொண்டு அவசர ஊர்திகள் ஓயாத ஒலியுடன் பறந்து கொண்டிருந்தன.
ஒரு பெருந் துயரம் நிகழ்ந்து கொண்டிருப்பது தெரியாமல், தொண்டர்கள் செல்போன்களில் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இரவு 7.31 மணி. விஜய் பரப்புரையை முடிக்கிறார். கூட்டம் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜயின் வாகனத்திற்கு பவுன்சர்கள் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.
இதனிடையே நோயாளிகள் யாருமின்றி வந்ததாக கூறி தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்திய தவெகவினர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதனை அடுத்து, காவலர்கள் தவெகவினர் மீது லேசாக தடியடி நடத்தி ஓட்டுநர்களை தாக்கிய 10க்கும் மேற்பட்டோரை விரட்டியடித்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து உயிரிழக்க குடும்பத்தினர் கதறல் கரூரையை கண்ணீர் விட வைத்தது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் 39 பேர் உயிரிழந்த நிலையில், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மயங்கியவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி உதவி அறிவித்து, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை காண கரூர் புறப்பட்டுச் சென்றார்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூர் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறுகையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரே ஒரு உடல் மட்டும் அடையாளம் காணப்பட வேண்டியிருக்கிறது. இதில் 14 உடல்களுக்கு போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கான உடற்கூராய்வை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 51 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் கவலைக்கிடம். மொத்தமாக எல்லாம் சேர்த்து 111 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Read More
தமிழ்நாடுவணிகம்

மாதம் ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்…

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். தகுதி என்ன என்பதை பார்க்கலாம்.
பெற்றோரால் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க “அன்புக்கரங்கள்” என்னும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க “அன்புக்கரங்கள்” என்னும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
ஆதரவற்ற குழந்தைகள் இடைநிற்றல் இன்றி பள்ளிப் படிப்பை தொடர, மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதுடன், கல்லூரிக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில், “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார்.
மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகளையும் முதலமைச்சர் இன்று வழங்கினார்.
யார் யார் தகுதியானவர்கள் : பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள். பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவரால் குழந்தையைப் பராமரிக்க முடியாத சூழல். பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலை. பெற்றோரில் ஒருவர் சிறையில் இருக்கும் நிலை. பெற்றோரில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலை.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டை நகல். குழந்தையின் ஆதார் அட்டை நகல். பிறப்புச் சான்றிதழ் அல்லது வயதுக்கான கல்விச் சான்றிதழ்கள். குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல்.
இந்த ஆவணங்களுடன், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு இந்தத் திட்டத்தின் பலனைப் பெறலாம்.

Read More