Tamilnadu

தமிழ்நாடு

“இரு மொழி கொள்கையால் தமிழ்நாடு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழக்கின்றனர்” – ஆளுநர் ஆர்.என். ரவி

மாநில அரசின் இருமொழி கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.

ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.
ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Read More
தமிழ்நாடு

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் ரூ.48.95 கோடி கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும்,

வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம்) சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
அறிவியல்ஆன்மீகம்தமிழ்நாடு

தை அமாவாசை 2025: ராமேஸ்வரம் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்… அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து ராமநாதசுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்று ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலானது பாவங்கள் நீக்கி புண்ணியம் தரும் ஸ்தலமாகும். இங்கு இறந்த தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது பரிபூரண ஆசிர்வாதம் மூன்று தலைமுறைக்கு கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

மேலும், மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களும், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று மாதங்களிலும் வரும் அமாவாசை நாட்களில் மிகவும் முக்கியமான நாட்களாக இருப்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று, தை அமாவாசை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் அக்னி தீர்த்தம் கடற்கரை குவிந்து புரோகிதர்கள் மூலம் எள்ளு பிண்டம் வைத்து, திதி தர்ப்பணம் கொடுத்தனர்.
இதன்பின் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று இரண்டு மணி நேரம் காத்திருந்து 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு, பின்பு ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்து அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட காவல்துறையினர் சார்பில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது.

Read More
தமிழ்நாடு

 சீர்காழியில் களம் இறங்கிய என்.ஐ.ஏ.! 20 இடங்களில் திடீர் சோதனை

சென்னை மற்றும் சீர்காழியில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்.ஐ.ஏ,) சோதனை நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு காரில் வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பல குழுக்களாக அவர்கள் பிரிந்து திருமுல்லைவாசல் மெயின் ரோடு, நடுத்தெரு, எம்ஜிஆர் நகர், எல்லைக்கட்டி இருப்பு தெரு பகுதிகளில் வசிக்கும் அமிர், நபின், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி உள்ளிட்ட 15 வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை எதற்காக என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

முழுமையான சோதனைக்கு பின்னரே அதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் இறங்கி இருக்கின்றனர்.

Read More
தமிழ்நாடு

 பொது இடங்களில் கொடி கம்பங்கள் அகற்ற உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அனைத்து கொடி கம்பங்களையும் அடுத்த 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த இருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கூடல் புதூர் பகுதியில் உள்ள கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, மதுரை பைபாஸ் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அதிமுக கட்சி கொடி கம்பம் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Read More
குற்றம்தமிழ்நாடு

ஊராட்சி தலைவரை பழிவாங்கும் நோக்கம்..? வேங்கைவயல் சம்பவத்தில் நடந்தது என்ன? குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று பேருக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள ஒரு குட்கிராமம் வேங்கைவயல். இங்கு, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கண்டறியப்பட்ட இந்த கொடூரச் செயல் குறித்து சிபிசிஐடி விசாரித்து வந்தது. 2023 ஜனவரி 16-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர், நேரடி சாட்சியங்களாக 300 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், 5 பேரிடம் குரல் பரிசோதனை, 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை என அறிவியல் பூர்வமாகவும் விசாரணையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் குறித்த வழக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிக்க: குடிநீர் தொட்டியின் மேல் செல்பி… லீக்கான ஆடியோ..! வேங்கைவயல் சம்பவம் நடந்தது எப்படி?

அப்போது, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடந்த 20-ஆம் தேதியே புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.
வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்களை உள்ளடக்கிய முட்டுக்காடு ஊராட்சித் தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டராக இருந்த சண்முகத்தை பணிநீக்கம் செய்ததே சம்பவத்திற்கான மூல காரணம் என கூறியுள்ளது.
குடிநீர் ஆப்ரேட்டராக இருந்த சண்முகமுத்தின் நண்பர்களான சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குடிநீர் தொட்டி மீது ஏறி மலம் கலந்ததாகவும், பத்மாவின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக காவலர் முரளி ராஜா தவறான தகவலை பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டுவதாகவும் சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளி ராஜா, மணல்மேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சம்பவத்தின் போது சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலையின்றி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என சுட்டிக்காட்டினர்.
மேலும், மனுதாரர் தரப்பு பதில் அளிக்க 6 வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம், 750 நாட்களுக்குப் பிறகு வேங்கைவயல் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடு

காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்.. காரணம் என்ன?

நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடியாணைகளை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் கைதான வடிவேல் என்பவர் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுதாரர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது. நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் அந்த உத்தரவு முறையாக செயல்படுத்தவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி,

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் சரக காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக ஆணையிட்டார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரி சரண் ஆஜரானார். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்திலும் ஒரே காவல் சரக எல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஏற்க முடியாது என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக செயல்திட்டம் வகுக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டார். திட்டம் வகுப்பது தொடர்பாக ஆலோசனை செய்து தெரிவிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். அடுத்த விசாரணையின்போது துணை ஆணையர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்த நீதிபதி விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு; தண்டனை விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவு

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் ஜாமின் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன அதிகாரி எல்.நாதன், பாலாஜி, ராமசாமி உட்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம். திரிவேதி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.பார்த்திபன், “இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யாருக்கு என்னென்ன விதமான தண்டனைகள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை சிபிஐ தரப்பில் இருந்து தங்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “தண்டனை விவரங்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஒரு Chart வடிவில் தயார் செய்து இரண்டு வாரத்தில் சிபிஐ மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். அதேபோன்று உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்” என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Read More
அரசியல்குற்றம்தமிழ்நாடு

கனிமவளக் கொள்ளையை தட்டி கேட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை: இபிஎஸ் கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி அவர்கள் , சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது
திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடு

துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநர் குறுக்கீடுக்கு எதிராக தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேர்வு குழுவை அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினார்.

ஆளுநரின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஆளுநர் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், துணை வேந்தர்களை நியமிக்கும் குழுவில் யு.ஜி.சி. தலைவரை சேர்க்க வேண்டும் என்ற சட்ட விதி இல்லாத நிலையில், ஆளுநர் தன்னிச்சையாக தேர்வு குழுவை அமைத்து அதனை அரசாணையாக வெளியிடக் கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More