Tamilnadu

தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு…ஏப்ரல் 1 முதல் அமல்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்களுக்கான புதிய கொள்கையை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்றும், இந்த கொள்கை நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்கும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மார்ச் 19 தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் திறக்கப்பட்ட 12 கட்டண சுங்கச்சாவடிகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. 78 டோல்களில் 40 டோல்கேட்டுகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி பயனர் கட்டணம் திருத்தப்படும், மீதமுள்ளவற்றிற்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி திருத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்களை தீர்மானித்தல் மற்றும் வசூலித்தல் ) விதிகள், 2008 இன் விதிகளின் கீழ் மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் திருத்தப்படுகிறது.

சென்னை புறவழிச்சாலையில் வானகரம் மற்றும் சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள், சென்னை -கொல்கத்தா நெடுஞ்சாலையில் நல்லூர், தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் மற்றும் பரனூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு கட்டண திருத்தம் செய்யப்படும்.
கோயம்பேடு காய்கறி சந்தையின் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். இதையொட்டி பொருட்களின் விலை உயர்வை பாதிக்கும். டீசலுக்கு அடுத்தபடியாக லாரி உரிமையாளர்கள் அதிக செலவு செய்வது சுங்கச்சாவடி கட்டணம்தான். மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு லாரியை இயக்கினால், சுங்கச்சாவடி கட்டணமாக மட்டும் ரூ.1,000 அல்லது அதற்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும்.

சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கட்கரி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண பிளாசாக்களில் பயனர் கட்டணம் நிரந்தரமாக வசூலிக்கப்படுகிறது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

பொது நிதியுதவி திட்டங்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை, பாலம், சுரங்கப்பாதை அல்லது புறவழிச்சாலையின் அத்தகைய பிரிவுகளுக்கு விதிக்கப்பட வேண்டிய கட்டணம் இந்த விதிகளால் ஆண்டுதோறும் திருத்தப்பட வேண்டும்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்ணா நீங்கள்? ரூ. 1.25 லட்சம் வரை கடன்; இந்த திட்டம் உங்களுக்கானது

சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு கடன் உதவி திட்டம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதை விட, சுய தொழில் தொடங்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். இதற்காக பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பிரத்தியேகமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பில் எளிமையான ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, புதிய குழுக்கடன் வழங்குவதற்கான திட்டத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேபாட்டுக் கழகம் செயல்படுத்தியுள்ளது. இந்தக் குழுக்கடன்கள், சுய உதவிக் குழு சார்பாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒரு நபருக்கு தலா, ரூ. 1.25 லட்சம் கடனாக வழங்கப்படும். இந்த கடனுக்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தக் கடன் தொகை இரண்டரை ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பெறுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக இந்தக் கடன் வழங்கப்படும். அதிலும், சம்பந்தப்பட்ட சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்களை கட்டாயமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்தக் குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.

கடன் பெற விரும்பும் நபரின் வயது 18 முதல் 60 வரை இருத்தல் அவசியம், மேலும், அவர்களது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. இந்த திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டுமே கடன் பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tabcedco.tn.gov.in இணையதளத்தில் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிறப்பிடச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Read More
தமிழ்நாடுவணிகம்வணிகம்

எஃப்.டி-யை விட நல்ல ரிட்டர்ன்; ரிஸ்க் இல்லாத முதலீடு… இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் செக் பண்ணுங்க!
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக திட்டங்களை வழங்குகிறது. அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி விகிதம் மட்டுமில்லாமல், வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

அந்த வகையில், அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் ஆகும். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் ரிஸ்க் குறைவான முதலீட்டு திட்டம். மியூச்சுவல் பண்ட் திட்டங்களைப் போல அல்லாமல் இந்த திட்டம் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு 5 வருட டெபாசிட் முதலீட்டிற்கு மட்டும் பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்த பட்சம் 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை. நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். அனைத்து அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் (ஆக்சிஸ், ஐசிஐசிஐ, ஹெச்.டி.எஃப்.சி) வங்கிகளிலும் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

இந்த திட்டங்களில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதன் பின் 100-இன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கான உச்சவரம்பு என்று எதுவும் இல்லை.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், முதலீட்டாளர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். பிக்சட் டெபாசிட்களைப் போலவே ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருட முதிர்வுக் காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், 4 வகைகள் உள்ளன.

அதாவது, 1 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 6.9 % வட்டி வழங்கப்படுகிறது. 2 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.0 % வட்டி வழங்கப்படுகிறது.3 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.1 % வட்டி வழங்கப்படுகிறது. 5 வருட டைம் டெபாசிட் முதலீட்டில் அதிகபட்சமாக 7.5 % வட்டி வழங்கப்படுகிறது.

7.50 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மொத்த முதலீட்டு காலத்திற்கும் வட்டி வருமானமாக 44,995 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.

இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கணக்கைத் தொடக்கலாம். இளம் முதலீட்டாளர்களுக்கு TD (டி.டி) சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சார்பாக தங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளைத் தொடங்கலாம்.

நீங்கள் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் விண்ணப்பிக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து ஆதார் மற்றும் பான் கார்டு ஆவணங்களை இணைத்து, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையையும் சேர்த்து கொடுங்கள், உங்கள் கணக்கு தொடங்கப்பட்டுவிடும் அவ்வளவுதான்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ள
இதையொட்டி, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்கி உள்ளது. இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில், அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவிற்கு தனித்தனியாக கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டத்தை துவங்கி உள்ளது. டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 3 கி.மீ., தூரம் 25 கி.மீ., வேகத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடந்துள்ளது. இது தொடர்பாக வீடியோவை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Read More
குற்றம்தமிழ்நாடு

சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் தீவிர வலைவீசி தேடி வந்தனர். இவர் மதுரை எஸ். எஸ்., காலனியில் ரூ.10 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் தொடர்புடையவர். கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று ரவுடியை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர். அப்போது போலீசார் மீது ரவுடி மகாராஜா தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயத்துக்கு சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மகாராஜா என்ற பிரபல ரவுடியை கிண்டி அருகே துப்பாக்கியால் காலில் சுட்டு போலீசார் பிடித்தனர்.

வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடி கைது செய்யப்பட்டார். போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் ரவுடியை காலில் சுட்டதாக காவல்துறை தகவல். ரவுடி தூத்துக்குடி மகாராஜாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More
குற்றம்தமிழ்நாடு

நெல்லை ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் நேற்று முன் தினம் காலையில் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வக்ஃபு நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல்கள் குறித்து காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்த போது, உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்தனர்.
நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
நெல்லை மாநகர் டவுன் பகுதியில் நேற்று முன் தினம் காலையில் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வக்ஃபு நிலத்தகராறு காரணமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகிர் உசேன் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல்கள் குறித்து காவல் நிலையத்தில் ஜாகிர் உசேன் புகார் அளித்த போது, உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்தனர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார். மேலும் நிலப்பிரச்னை தொடர்பான இந்த கொலை சம்பவத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதற்கிடையே ஜாகிர் உசேன் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், கொலை மிரட்டல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நெல்லை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், தற்போது கோவை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக உள்ள செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் ஜாகிர் உசேனின் உடலை பெற்றுக்கொண்டனர். ஜாகிர் உசேன் உடலுக்கு அவரது குடும்பத்தினர் சிறப்புத் தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்தனர்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தொகுதி மறுவரையறை விவகாரம்.. கர்நாடகா, ஆந்திராவுக்கு சென்ற தமிழக அரசின் குழுக்கள்!

தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்கும்படி கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் கடந்த 5ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, தென் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள கட்சிகளின் தலைவர்களை திமுக பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெங்களூரு சென்ற அமைச்சர் பொன்முடி, திமுக எம்பி அப்துல்லா அடங்கிய குழு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து, தென் மாநிலக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
அப்போது, கர்நாடக முதலமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 22ஆம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும், கூட்டாட்சிக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்க கர்நாடக அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு மட்டுமின்றி, தென்மாநில மக்களின் நலனைப் பாதிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் சித்தராமையா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, ஆந்திர மாநிலத்திற்கு சென்ற அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா ஸ்ரீநிவாச ராவை சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அழைப்பு விடுத்தனர்.
இதன் பின்னர், ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தார். இதேபோல, டெல்லியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., டெரிக் ஓ பிரையனை சந்தித்த திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர், சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

Read More
Uncategorized

1-9 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு… முழு ஆண்டு தேர்வு அட்டவணை இதோ

தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2024-25 கல்வியாண்டு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது.
அதன்படி அரசு /அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது

Read More
தமிழ்நாடு

ஆக்கிரமித்து வசிப்பவர்களில் யார் யாருக்கு பட்டா வழங்கலாம்?- தமிழக அரசு அறிவிப்பு….

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த மாதம் 10-ந் தேதி நடந்தது. அதில் தமிழகத்தில் ஆட்சேபனையற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்என்றும், அதற்கான தகுதி என்ன? என்பது குறித்தும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கலாம். மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5 ஆண்டுகள் வசித்தால் வழங்கலாம்.
அதில் ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களான மதிப்பிடப்பட்ட மற்றும் மதிப்பீடு செய்யாத நிலங்கள், கல்லாங்குழி-பாறை-கரடு நிலங்கள், கிராம நத்தம், அரசு நஞ்சை-புஞ்சநிலங்கள், எதிர்ப்புகள் இல்லாத சிறப்பு அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்நிலைகள், மேட்டு நிலங்கள், மேய்ச்சல்-மேய்க்கால், மந்தவெளி நிலங்கள், காடு நிலங்கள், ரெயில்வே உள்ளிட்ட
மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு பட்டா வழக்கப்படாது.

பட்டா பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ரூ.3 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால், அவர்களிடம் இருந்து நிலத்திற்காகான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இந்த பட்டா வழங்கும் பணிக்காக மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக 1 சென்ட் பட்டா வழங்க வேண்டும். பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அதிகபட்சமாக 2 செண்டும். கிராமப்புறங்களில் 3 செண்டும் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More