தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலை உடையவில்லை..! வாட்ஸ்அப்பில் பரவி வந்த பொய் தகவலையடுத்து மாவட்ட நிர்வாகம் விளக்கம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் பரவி வந்த பொய் தகவலுக்கு மாவட்ட நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது .

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது . இந்நிலையில் வாட்ஸ்அப்பில் பரவி வந்த செய்தியில் உண்மை இல்லை . சிலை தொண்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது .

அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக .புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.