சினிமா

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி காரசார பேச்சு..! முழு விவரம் இதோ

சிவ மாதவ் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் நடித்துள்ள படம் 369. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆரி இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் . அப்போது மேடையில் பேசிய அவர் கூறியதாவது :

இரண்டு ஆண்டுகளாக திரை அரங்குகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்தது . இதனால் திரை அரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்து விட்டது அனைத்து துறைகளும் இயல்பை மீட்டு எடுத்து வருகின்றன.

இந்நிலையில் திரை அரங்குகள் தற்போது திறக்கப்பட்டு படங்கள் திரை இட படுகின்றன. இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு படத்தை உயர்த்தி இன்னொரு படத்தை தாழ்த்தி கூறுவது திரை அரங்குகளுக்கு மக்கள் வருவதை குறைக்கும் செயல் என்றும், விமர்சனங்களை வைக்கும் போது பார்த்து வைக்குமாறு மிகவும் கடுமையாக தெரிவித்து உள்ளார் நடிங்கர் ஆரி .