IPL – 2020

IPL - 2020இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி; 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கவில்லை. ஆசியக் கோப்பையிலும் இந்திய – பாகிஸ்தான் கேப்டன்கள் கைகுலுக்கவில்லை. இது டி20 உலகக்கோப்பையில் தொடர்கிறது.

டி20 உலகக் கோப்பையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி கொழும்பு பிரேமதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தை பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். 9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. 11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

19-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இவர் 29 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் தாரீக் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்கருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது ஷிவம் துபே ரன்அவுட் ஆனார். கடைசி பந்தை அக்சர் படேல் சந்தித்தார். அதில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சகிப்சதா ஃபர்ஹான், சயீம் ஆயுப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஃபர்ஹான் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அடுத்து சல்மான் ஆகா களம் இறங்கினார். 2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்.பி.பி.டபிள்யூ ஆனார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். அதன்பின் பாகிஸ்தான விக்கெட்டுகள மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களில் ஆல்அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. தொடக்கம் முதலே துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பால் இந்தியா இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது.61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
டி20 உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் இறுதிவரை ஆதிக்கம் செலுத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள், பாகிஸ்தான் அணியை 114 ரன்களுக்குச் சுருட்டினர்.

Read More
IPL - 2020IPL 2025இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ..! இன்று மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் 

ஐபிஎல் தொடரில் எல்-கிளாசிகோ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சர்வதேச அளவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி போல, ஐபிஎல்-இல் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
43 வயதான தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதுடைய வீரராக களமிறங்குகிறார். “தல” தோனி அணியில் இருக்கிறார் என்பதையே சிஎஸ்கேவும், சிஎஸ்கே ரசிகர்களும் பலமாக பார்க்கின்றனர்.
கேப்டன் ருதுராஜ், கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே என்ற வலுவான பேட்டிங் வரிசையுடனும், ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, சாம் கரன், வேகத்திற்கு பதிரனா, கலீல் அகமது என சிஎஸ்கே அணி மிகவும் பலமாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவுக்கு திரும்பியிருப்பது ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இதே போல, ரோகித் சர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிக்கல்டன், திலக் வர்மா என மும்பையின் பேட்டிங் படையும் வலுவாகவே உள்ளது. ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு சற்று பலவீனமே என்றாலும், சாண்ட்னர், பவுல்ட், தீபக் சஹார் என மும்பையின் வேக கூட்டணி மிரட்டும் வகையில் உள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு மேலும் கொண்டாட்டத்தை சேர்த்துள்ளது.

Read More
IPL - 2020இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

CRICKET – இந்திய அணி 3-வது முறையாக பட்டம் வென்று அசத்தியது ….

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.

துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் காயம் அடைந்த மேட் ஹென்றிக்கு பதிலாக நேதன் ஸ்மித் களமிறங்கினார். பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறந்த தொடக்கம் கொடுத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய 4-வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டி அசத்தினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டன. தொடர்ந்து முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரிகள் அடிக்க 11 ரன்கள் சேர்க்கப்பட்டன.

இதனால் நியூஸிலாந்து அணி 7 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி வில் யங்கை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். வில் யங் 23 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 10 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 69 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை வீசிய குல்தீப் யாதவ், ரச்சின் ரவீந்திராவை போல்டாக்கினார். 29 பந்துகளை எதிர்கொண்ட ரவீந்திரா ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து குல்தீப் யாதவ் தனது அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சனை வெளியேற்றினார். 14 பந்துகளில், 11 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன், குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து நடையை கட்டினார். இதன் பின்னர் களமிறங்கிய டாம் லேதம் 30 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். 108 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல்லுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார்.

5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி பிரித்தார். கிளென் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய பிரேஸ்வெல் சீராக ரன்கள் சேர்த்தார். நிலைத்து நின்று விளையாடிய டேரில் மிட்செல் 91 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் அரை சதம் கடந்தார். டேரில் மிட்செல் 101 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் மைக்கேல் பிரேஸ்வெல் மட்டையை சுழற்றினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாச 50 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

252 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் கொடுத்தார். கைல் ஜேமிசன் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ரோஹித் சர்மா, வில்லியம் ரூர்க் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டினார். தொடர்ந்து நேதன் ஸ்மித் வீசிய 6-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி அசத்தினார் ரோஹித் சர்மா. பின்னர் நேதன் ஸ்மித் வீசிய 8-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளையும் விரட்ட இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 58-வது அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஷுப்மன் கில் 50 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் விளாசிய போது கிளென் பிலிப்ஸின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், ரோஹித் சர்மா ஜோடி 18.4 ஓவர்களில் 105 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

சிறப்பாக பேட் செய்து வந்த ரோஹித் சர்மா 83 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து விளாச முயன்ற போது ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஐசிசி தொடர்களில் (50 ஓவர்) இது அவரது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. 122 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயருடன், அக்சர் படேல் இணைந்தார்.

மைக்கேல் பிரேஸ்வெல், பிலிப்ஸ் ஆகியோரது பந்தில் சிக்ஸர் விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து வந்தார். சீராக ரன்கள் சேர்த்த அவர், 48 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 48ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தில், ஷாட் ஃபைன் லெக் திசையில் ரச்சின் ரவீந்திராவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 38.4 ஓவர்களில் 183 ஆக இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்த போது அணியின் வெற்றிக்கு 68 பந்துகளில் 69 ரன்கள் தேவையாக இருந்தன.

இதையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் விரைவாக ரன்கள் சேர்க்க முயன்றார். பிரேஸ்வெல் வீசிய 41.4-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அக்ஸர் படேல் 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் பிரேஸ்வெல் பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்த போது வில் ரூர்க்கிடம் கேட்ச் ஆனது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 49 ரன்கள் தேவையாக இருந்தது.

இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடினார். ரவீந்திரா வீசிய 46-வது ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தன. வில் ரூர்க் வீசிய 47-வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. 18 பந்துகளில் 12 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கைல் ஜேமிசன் வீசிய 48-வது ஓவரின் 3-வது பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஹர்திக் பாண்டியா வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஜடேஜா களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்தன. வில் ரூர்க் வீசிய 49-வது ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விளாச முடிவில் இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா 9 ரன்களும், கே.எல்.ராகுல் 33 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பட்டம் வென்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2002-ம் ஆண்டு தொடரில் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. 2013-ம் ஆண்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது. தற்போது 3-வது முறையாக வாகை சூடியுள்ளது. ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வானார்கள்.

பதிலடி கொடுத்த இந்தியா: 2000-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை வென்றிருந்தது. இந்த தோல்விக்கு 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது பதிலடி கொடுத்துள்ளது இந்திய அணி.

ரூ.19.50 கோடி பரிசு: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெற்றது.

Read More
IPL - 2020

விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வந்ததால் மும்பை விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட குருணால் பாண்டியா!

வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த கைக்கடிகாரங்களைக் அனுமதி இன்றி கொண்டு வந்ததாக கிரிக்கெட் வீரர் குருணால் பாண்டியாவைப் பிடித்த வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் அவரை மும்பை விமான

Read More
IPL - 2020விளையாட்டு

ஐபிஎல் 2021 சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்.?

2021 ஐபிஎல் சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்பதால், ஐபிஎல் அணிகளுக்கான முழுமையான ஏலம் நடத்த வாய்ப்புள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் சவாலுடன்

Read More
IPL - 2020விளையாட்டு

ஐ.பி.எல் வரலாற்றில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!

ஐ.பி.எல் 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. ஐ.பி.எல் 2020

Read More
IPL - 2020விளையாட்டு

விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பறிக்க வேண்டும் – முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் காட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றோடு வெளியேறியுள்ளது. இந்நிலையில், பெங்களூரு

Read More
IPL - 2020தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய

Read More
IPL - 2020

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணிக்கு எதிராக டாஸ்

Read More
IPL - 2020

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி…

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது . ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்

Read More