என்னை யாராலும் தடுக்க முடியாது…! வெளியானது சசிகலாவின் அடுத்த ஆடியோ!
கட்சியை மீண்டும் நல்ல வழியில் கொண்டு வருவோம், அதை யாராலும் தடுக்க முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .மறுபக்கம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் அடியோக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சசிகலாவின் அடியோக்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில் தற்போது அவர் பேசிய 41ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது. சசிகலா உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையிலும், அடுத்த ஆடியோ வெளியாகி இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது .
சசிகலா அந்த ஆடியோவில் கூறிருப்பதாவது :
இதைப்போன்ற சூழலை எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்தபோது ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட பிரச்சனையை உடன் நின்று எதிர்கொண்டுள்ளேன் . தற்போது இவர்கள் செய்வது எல்லாம் எனக்கு புதிதாக தெரியவில்லை கட்சியை மீண்டும் நல்ல வழியில் கொண்டு வருவோம், அதை யாராலும் தடுக்க முடியாது என சசிகலா கூறியுள்ளார்.
