touristspot

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

தமிழகத்தில் புதிய சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த TTDC முடிவு!

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) இப்போது புதிய சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசு தரப்பில் கூறுகையில், ஏற்கெனவே பிரபலமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் கூட்டம் அதிகமாகி, வளர்ச்சி கட்டுப்பாடு இல்லாமல் போவதால், இந்த புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக ஜவ்வாது மலை, வத்தல் மலை, கொல்லி மலை, ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில், இனிமேல் புதிதாக ஒழுங்கான முறையில் கேம்பிங் (camping) மற்றும் க்ளம்பிங் (glamping) வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ஜவ்வாதுமலை
ஜவ்வாது மலை, இப்போது மலையேற்றம் செய்பவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு இடம். ஆனால், இனிமேல் இங்கு முதல் முறையாக, சுமார் 7.65 ஏக்கர் பரப்பளவில், ஒரு பெரிய க்ளம்பிங் வசதி வரப்போகிறது. இங்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.
10 ஆயிரம் பேர்
தனியார் நிறுவனங்கள் சார்பில், ஆடம்பரமான கூடாரங்கள், டோம்ஸ் (domes) மற்றும் ரெடிமேட் வீடுகள் அமைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட அதிகாரியின் தகவலின்படி, வனத்துறையிடம் ஏற்கெனவே கேம்பிங் இடங்கள் உள்ளன. ஏரிக்கு அருகில் தங்கும் வசதிகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். தனியார் நிறுவனம் 10 தங்கும் அறைகள், ஒரு உணவகம், வரவேற்புப் பகுதி ஆகியவற்றை அமைக்க வேண்டும். மாதத்திற்கு சுமார் 1,000 பேர் ஜவ்வாது மலைக்கு வருகிறார்கள்.
வத்தல் மலை
அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலைக்கும் இதே போன்ற திட்டங்கள் யோசிக்கப்பட்டு வருகின்றன. இந்த அழகான மலைப் பகுதி, சுற்றுலாப் பயணிகளிடையே அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. இங்கு சுமார் 6.1 ஏக்கர் பரப்பளவில் ஒரு கேம்பிங் தளம் அமைக்கப்படும். இங்கு கூடாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறிய வீடுகள் (eco-cottages) அடிப்படை வசதிகளுடன் இருக்கும். தருமபுரி மாவட்ட அதிகாரி கூறுகையில், “நாங்கள் ஏற்கெனவே உணவகத்தைக் கட்டிவிட்டோம். இது ஒரு மலைப் பிரதேசம். இங்கு அருவிகள், பழங்குடியினர் வாழும் இடங்கள் உள்ளன. மலையேற்றத்திற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வனத்துறையிடம் ஒரு வழித்தடத்தைக் கேட்டுள்ளோம்” என்றார்.
பாதியிலேயே நின்றுவிடக் கூடாது
சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள், இந்தத் திட்டங்களின் நோக்கம் ஊட்டி, கொடைக்கானல் போல பெரிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவது அல்ல. மாறாக, அமைதியான, இயற்கையோடு இணைந்த மாற்று இடங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான். சுற்றுலாத் துறையின் முன்னாள் அதிகாரி என். ரவி கூறுகையில், “இதுவரை நாம் பழைய சுற்றுலாத் தலங்களையே நம்பி இருந்தோம். திட்டமிட்டபடி இவை நடந்தால், புதிய மலைப் பிரதேசங்களை மேம்படுத்துவதில் இது ஒரு நல்ல படியாக இருக்கும். ஆனால், இந்தத் திட்டங்கள் பாதியிலேயே நின்றுவிடக் கூடாது” என்றார்.

Read More